தேர்தலுக்குப் பின்பானதென்றால் இப்போதுள்ள தவெக-விசிக கூட்டணியே அதற்கு உதாரணம். தேர்தலுக்கு முன்பானதென்றால் திமுக-விசிக. இரண்டுக்கும் வேறுவேறு தர்மம். தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் இருந்தவர்கள் பின்பும் இருக்க வேண்டும் என்றில்லை. ஏனென்றால் அவர்கள் கூட்டணியை பரஸ்பரம் பலம் சேர்ப்பதற்காக இணைந்தார்கள். காங்கிரஸும், விசிகவும் இடதுசாரிகளும் ஒரு கூட்டணியில் இணைகையில் அதற்கு ஒரு தார்மீக பலம் வருகிறது. இது ஒரு பெரிய கட்சியை நோக்கி உதிரி வாக்காளர்களை ஈர்க்கவும் கட்சி வாககளர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் உதவுகிறது. ஆகையால் இந்த தேர்தலுக்கு முந்தைய கூட்டணியால் திமுகவும் பயனடைந்துள்ளது. (கூட்டணிக் கட்சிகள் எந்தளவுக்கு வேலை செய்தன என்பதற்குள் நான் வரவில்லை. அது இங்கு பொருட்டல்ல.) ஆகையால் ஏதோ திமுகவின் உதவியாலே கூட்டணிக் கட்சிகள் வென்றதாகக் கோருவதும் இப்போது அவர்கள் வெளியேறியதும் சபிப்பதும் கொஞ்சம் மலினமானது. நியாயமற்றது.
அடுத்து இதே போல ஒரு கூட்டணி அமையாது என்று திமுகவினர் சொல்ல முடியுமா? அமையக் கூடுமெனில் ஏன் இப்போதே அந்த உறவில் வருத்தத்தைக் கலக்க வேண்டும்?
பைரப்பாவின் "பர்வா" நாவலில் பாண்டவர்களின் உறவினர்களிடம் கௌரவர்களின் ஆட்கள் வந்து பேசி போரில் தம்முடன் கூட்டணி வைக்கக் கேட்கும் பகுதி வரும். அந்தந்த நேரத்து தேவைகளுக்காகவும் தொலைநோக்குப் பார்வையிலும் மக்கள் தம் உயிரையே பணயம் வைத்து போரில் கூட்டு சேரும்போது ஒரு கூட்டணிக் கட்சியில் சேர்வதை ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்து வசை பாட வேண்டும்? அ. ராசாவின் அப்பதிவு வக்கிரமானது. விசிகவை சோரம் போன மனைவியாகக் காட்டுவது தவறு. மேலும், தேர்தலுக்கு முந்தைய ஆடியோ லீக்கை வைத்துப் பார்க்கையில் அ. ராசாவுக்கு எதாவது மறைமுக நோக்கம் இருந்ததோ என்று கூட சந்தேகம் எழுகிறது?
கருத்துகள்