முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு!



அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது கமலின் காதல் காட்சி நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்படி ஒரு குழைவு, கெஞ்சல், அணுக்கம், அக்கறை, சட்டென ஆதிக்கம், மூர்க்கம் என அவரது காதல் நடிப்பின் நுணுக்கங்கள் ஏராளம். அத்தனையும் பத்து நொடிக் காதல் காட்சிக்குள் வந்துவிடும் (உதா: வளையோசை கலகலகலவென; பூவாசம் புறப்படும்). “அப்படியே நிஜமாகவே லவ் பண்ற மாதிரி தெரியும்” என்றார் நண்பர் புன்னகைத்தபடி.



இந்த நடிப்பினாலும், அவரது பல காதல் சர்ச்சைகளாலும், உண்மையிலேயே காதல் பண்ணுகிறார் எனும் தோற்றம் ஏற்பட்டுவிட்டது. ரஜினியிலிருந்து விஜய் சேதுபதி வரை பலரும் காதல் காட்சிகளில் சிலாகிப்பாய் நடிக்கக் கூடியவர்களே. ஆனால் அந்த நடிப்பில் ஒரு கறார்த்தனம் இருக்கும்; ஒரு வரையறைக்குள் நின்று நடிப்பார்கள். கமலிடம் நாம் பிரக்ஞையற்ற, முழுக்கத் தன்னை அர்ப்பணிக்கும் காதல் நடிப்பைப் பார்க்கிறோம். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல காதலியின் முகத்தைக் கைகளில் மெத்தென ஏந்தி ரசிக்க, மூக்கால் உரச இன்னொருவரால் முடியாது என்றே நினைக்கிறேன். இந்திய சினிமாவில் கமலைப் போல வேறு யாரையும் நான் அப்படிப் பார்த்ததில்லை. “சேர்ந்நிருந்நால் திரு ஓணம்” என்கையில் என்னவொரு பிரியம் வெளிப்படுகிறது! (சுந்நரி நீயும் சுந்நரன் ஞானும்)

கமலுக்குள் இருக்கும் பெண்மை

இதற்கு முக்கியக் காரணமாய் நான் நினைப்பது கமலின் ஆளுமை. அது பெண்களுக்கான ஆளுமை. பெண்களின் தழுதழுப்பு, எதிலும் முழுக்கக் கரைந்து இன்னொன்றாகும் குணம், சட்டென உணர்ச்சிவயப்படுகிற இயல்பு, சீராய் தர்க்கரீதியாய் தன்னை ஒருங்கிணைக்காமல் முன்னுக்குப் பின் முரணாய் சிந்திக்கும் போக்கு, தன்னை அனைவரும் ரசிக்கும்படியாய், தொடர்ந்து கவனிக்கும்படியாய் வைத்துக்கொள்ளும் (attention-seeking) முனைப்பு, தான் எவ்வளவு கொண்டாடப்பட்டாலும் அது போதாது எனும் உணர்வு, கூடுதலாய் கவனிக்கப்படும் பொருட்டு புதிது புதிதாய் எதையாவது செய்யும் தவிப்பு, பல காரியங்களை ஒரே சமயத்தில் செய்து முடிக்கும் பாங்கு, சதா பேசிக்கொண்டிருக்கும் விருப்பம் – இவையெல்லாம் கமலிடம் உள்ளன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...