Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

2018இன் முதல் பத்து தமிழ் ஆளுமைகள்



இது என் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. 2018இல் தமிழகத்தில் என் கவனத்தில் பட்ட மனிதர்களை ஒரு சிறிய பட்டியலில் தொகுத்திருக்கிறேன்.

Image result for ராஜன் குறை

1)   சிறந்த பொது சமூக அறிவுஜீவி (public intellectual): ராஜன் குறை. ராஜன் குறை என்றுமே ஆழமான அறிவும் எழுத்துத் திறனும் கொண்டவரே. இவ்வருடம் அவர் மேலும் வெளிப்படையாய் தன் அரசியலுக்காக எழுத்தில் போராடினார் எனலாம். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திராவிட அரசியலை ஆதரித்தார். என்னை மாற்றி யோசிக்க வைத்தார். அவரது சமூக அக்கறையும் லட்சியவாதமும் நெகிழ வைப்பவை. என்னைப் போன்றோருக்கு ஒளி தருபவை.



Image result for ஸ்டாலின் ராஜாங்கம்

2)   சிறந்த வரலாற்றியல் எழுத்தாளர் - ஸ்டாலின் ராஜாங்கம். ஸ்டாலின் குறித்து நான் கூடுதலாய் சொல்ல ஒன்றுமில்லை. என் தலைமுறையின் ஒளிர்நட்சத்திரம் அவர். இவ்வருடம் அவர் தலித்திய நோக்கில் பல அரசியல் சமூக நிகழ்வுகளை மீளுருவாக்கம் செய்தது, அறியப்படாத மனிதர்களை பேட்டி கண்டு எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது.

Image result for woman facing away
ஸ்ரீவள்ளியை யாரும் இதுவரை பார்த்ததில்லை...
3)   சிறந்த கவிஞர்ஸ்ரீவள்ளி. சமகால கவிதையில் ஆவேசத்தின் மூர்க்கம் வேண்டும்; பேய்மழையின் வேகம் வேண்டும்; உன்மதத்தின் புயல் அதில் அடிக்க வேண்டும்; குறிப்பாய் அதில் வரும் உண்மை சுயமுரண் பொதிந்ததாய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த குணங்கள் அனைத்தும் ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் உள்ளன. “பொகொன்றை பூக்க வந்த பேய்மழைஇவ்வருடத்தின் சிறந்த தொகுப்பு என்பதில் ஐயமில்லை.

Image result for director ranjith

4)   சிறந்த இயக்குநர் – “காலாவுக்காகரஞ்சித். காட்சிமொழியில் ரஞ்சித் காட்டியுள்ள அக்கறை, அதில் அவருக்குள்ள அபார ஆளுமை, அரசியல் கதையாடலையும் காட்சிமொழியையும் ஒன்றாக்கிய விதம், முற்றிலும் எதிர்பாராத ஒரு கிளைமேக்ஸ் ஆகியவைகாலாவை” நாம் காலத்துக்கும் மறக்க முடியாத திரையனுபவம் ஆக்கின.

Image result for mari selvaraj

5)   சிறந்த அறிமுக இயக்குநர் – “பரியேறும் பெருமாளுக்காக” மாரி செல்வராஜ். காட்சிமொழி மீதுள்ள பிடிப்புக்காகவும், அவர் திரையில் கொணர்ந்த தனித்துவமான வாழ்க்கைக்காகவும்.

Image result for ஆசிரியர் பகவான்

6)   சிறந்த பிரபலம் - ஆசிரியர் பகவான். ஊர்களில் ஆசிரியர்கள் பால் மாணவர்கள் கொள்ளும் தீவிர பந்தத்தை கண்டிருக்கிறேன். ஆனால் பகவானை போக விடாமல் மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோர்களும் காட்டிய ஆவேசமும் அவர் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும் நெகிழவும் கலங்கவும் வைத்தது. கல்விப் புலத்தை சேர்ந்தவனாய் எனக்கு நம்பிக்கை ஊட்ட வைத்த நிகழ்ச்சி இது. இவ்வளவு பிரபலம் கிடைத்த பின்னரும் பகவான் எளிமையாக நடந்து கொண்டதும் என்னை கவர்ந்தது. தொழிலையும் பொதுநலனையும் ஒன்றாக்க முடிவது ஒரு பாக்கியம். பகவானைப் போல அது நம்மில் பலருக்கும் வாய்க்க வேண்டும்.

Image result for கே என் செந்தில்

7)   சிறந்த புனைகதையாளர்கே.என் செந்தில். செந்திலின் நெடுங்கதைசகோதரிகள்செண்டிமெண்டான படைப்பு என ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நுட்பமாய் அதை வாசித்தவர்கள் அதன் ஆழத்தை, சிக்கலை கண்டுணர்ந்தார்கள். என் வாசிப்பில் இவ்வருடத்தின் சிறந்த புனைகதை இது தான்.

Related image

8)   சிறந்த இணைய கட்டுரையாளர் - பெருந்தேவி. பெருந்தேவி எழுதும் பல விசயங்களில் (.தா., அவரது ரேடிக்கல் பெண்ணியம்) என்னால் உடன்பட முடிந்ததில்லை என்றாலும் அவர் தான் நம்புகிறவற்றை பிடிவாதமாய், தீவிரமாய் இவ்வருடம் எழுதியிருக்கிறார். பல ஆழமான, விரிவான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.

Image result for தினேஷ் அகிரா

9)   சிறந்த அறிமுக எழுத்தாளர்தினேஷ் அகிரா
தினேஷ் கேப்டன் டிவியில் பணி செய்த போது அவர் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பேச என்னை அழைத்திருந்தார். அப்போது அவரது கிரிக்கெட்டில் அவருக்குள்ள நிபுணத்துவம், புரிதல், அக்கறை, கேள்விகளை தொகுக்க அவர் எடுத்துக் கொண்ட கவனம் கண்டு வியந்தேன். ஆனால் அவர் ஒரு எழுத்தாளராக முன்வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவரை கண்டெடுத்த எழுத வைத்த பெருமை அரவிந்தனுக்கு தான் செல்ல வேண்டும். மின்னம்பலத்தில் தினேஷ் எழுதி வருகிற கிரிக்கெட் கட்டுரைகள் தரமானவை; தொழில்நுட்பரீதியானவை. நான் தடம் பதிக்காத களம் அது. ஆங்கிலத்தில் ஆகாஷ் சோப்ரா எழுதும் பத்திகளின் பாணியிலானவை தினேஷின் கட்டுரைகள். தகவல்களை சேகரிக்க அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை பாராட்டத்தக்கது.

Image result for அரவிந்தன் காலச்சுவடு

10) சிறந்த எடிட்டர்அரவிந்தனே தான். மின்னம்பலத்தில் நான் தொடர்ந்து எழுதியதால் சொல்லவில்லை. பொதுவாய் எடிட்டர்கள் நம்மிடம் கட்டுரை கேட்கும் commissioning editorsஆக மட்டுமே இருப்பார்கள். ஆனால் அரவிந்தன் நம் எழுத்தை கவனமாய் திருத்தி செதுக்குவார். சில விசயங்களில் பிடிவாதமாய் ஒரு தரப்பை எடுத்து லட்சுமணக் கோடு வரைந்து விடுவார். அதைத் தாண்டி நாம் செல்ல முடியாது. பெருந்தேவி, நவீனா, தினேஷ் என பலரையும் நிறைய நல்ல கட்டுரைகளை அவர் எழுத வைத்ததும் பாராட்டத்தக்கது. சமீபத்தில் இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழை அவை எடிட் செய்து கொணர்ந்துள்ள விதம் கண்டு அசந்து போனேன். அபாரமான பணி அது. காலத்துக்கும் வைத்து படிக்க வேண்டிய ஒரு மலராக அது வந்துள்ளது.



Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...