முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2018இன் முதல் பத்து தமிழ் ஆளுமைகள்



இது என் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. 2018இல் தமிழகத்தில் என் கவனத்தில் பட்ட மனிதர்களை ஒரு சிறிய பட்டியலில் தொகுத்திருக்கிறேன்.

Image result for ராஜன் குறை

1)   சிறந்த பொது சமூக அறிவுஜீவி (public intellectual): ராஜன் குறை. ராஜன் குறை என்றுமே ஆழமான அறிவும் எழுத்துத் திறனும் கொண்டவரே. இவ்வருடம் அவர் மேலும் வெளிப்படையாய் தன் அரசியலுக்காக எழுத்தில் போராடினார் எனலாம். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திராவிட அரசியலை ஆதரித்தார். என்னை மாற்றி யோசிக்க வைத்தார். அவரது சமூக அக்கறையும் லட்சியவாதமும் நெகிழ வைப்பவை. என்னைப் போன்றோருக்கு ஒளி தருபவை.



Image result for ஸ்டாலின் ராஜாங்கம்

2)   சிறந்த வரலாற்றியல் எழுத்தாளர் - ஸ்டாலின் ராஜாங்கம். ஸ்டாலின் குறித்து நான் கூடுதலாய் சொல்ல ஒன்றுமில்லை. என் தலைமுறையின் ஒளிர்நட்சத்திரம் அவர். இவ்வருடம் அவர் தலித்திய நோக்கில் பல அரசியல் சமூக நிகழ்வுகளை மீளுருவாக்கம் செய்தது, அறியப்படாத மனிதர்களை பேட்டி கண்டு எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது.

Image result for woman facing away
ஸ்ரீவள்ளியை யாரும் இதுவரை பார்த்ததில்லை...
3)   சிறந்த கவிஞர்ஸ்ரீவள்ளி. சமகால கவிதையில் ஆவேசத்தின் மூர்க்கம் வேண்டும்; பேய்மழையின் வேகம் வேண்டும்; உன்மதத்தின் புயல் அதில் அடிக்க வேண்டும்; குறிப்பாய் அதில் வரும் உண்மை சுயமுரண் பொதிந்ததாய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த குணங்கள் அனைத்தும் ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் உள்ளன. “பொகொன்றை பூக்க வந்த பேய்மழைஇவ்வருடத்தின் சிறந்த தொகுப்பு என்பதில் ஐயமில்லை.

Image result for director ranjith

4)   சிறந்த இயக்குநர் – “காலாவுக்காகரஞ்சித். காட்சிமொழியில் ரஞ்சித் காட்டியுள்ள அக்கறை, அதில் அவருக்குள்ள அபார ஆளுமை, அரசியல் கதையாடலையும் காட்சிமொழியையும் ஒன்றாக்கிய விதம், முற்றிலும் எதிர்பாராத ஒரு கிளைமேக்ஸ் ஆகியவைகாலாவை” நாம் காலத்துக்கும் மறக்க முடியாத திரையனுபவம் ஆக்கின.

Image result for mari selvaraj

5)   சிறந்த அறிமுக இயக்குநர் – “பரியேறும் பெருமாளுக்காக” மாரி செல்வராஜ். காட்சிமொழி மீதுள்ள பிடிப்புக்காகவும், அவர் திரையில் கொணர்ந்த தனித்துவமான வாழ்க்கைக்காகவும்.

Image result for ஆசிரியர் பகவான்

6)   சிறந்த பிரபலம் - ஆசிரியர் பகவான். ஊர்களில் ஆசிரியர்கள் பால் மாணவர்கள் கொள்ளும் தீவிர பந்தத்தை கண்டிருக்கிறேன். ஆனால் பகவானை போக விடாமல் மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோர்களும் காட்டிய ஆவேசமும் அவர் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும் நெகிழவும் கலங்கவும் வைத்தது. கல்விப் புலத்தை சேர்ந்தவனாய் எனக்கு நம்பிக்கை ஊட்ட வைத்த நிகழ்ச்சி இது. இவ்வளவு பிரபலம் கிடைத்த பின்னரும் பகவான் எளிமையாக நடந்து கொண்டதும் என்னை கவர்ந்தது. தொழிலையும் பொதுநலனையும் ஒன்றாக்க முடிவது ஒரு பாக்கியம். பகவானைப் போல அது நம்மில் பலருக்கும் வாய்க்க வேண்டும்.

Image result for கே என் செந்தில்

7)   சிறந்த புனைகதையாளர்கே.என் செந்தில். செந்திலின் நெடுங்கதைசகோதரிகள்செண்டிமெண்டான படைப்பு என ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நுட்பமாய் அதை வாசித்தவர்கள் அதன் ஆழத்தை, சிக்கலை கண்டுணர்ந்தார்கள். என் வாசிப்பில் இவ்வருடத்தின் சிறந்த புனைகதை இது தான்.

Related image

8)   சிறந்த இணைய கட்டுரையாளர் - பெருந்தேவி. பெருந்தேவி எழுதும் பல விசயங்களில் (.தா., அவரது ரேடிக்கல் பெண்ணியம்) என்னால் உடன்பட முடிந்ததில்லை என்றாலும் அவர் தான் நம்புகிறவற்றை பிடிவாதமாய், தீவிரமாய் இவ்வருடம் எழுதியிருக்கிறார். பல ஆழமான, விரிவான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.

Image result for தினேஷ் அகிரா

9)   சிறந்த அறிமுக எழுத்தாளர்தினேஷ் அகிரா
தினேஷ் கேப்டன் டிவியில் பணி செய்த போது அவர் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பேச என்னை அழைத்திருந்தார். அப்போது அவரது கிரிக்கெட்டில் அவருக்குள்ள நிபுணத்துவம், புரிதல், அக்கறை, கேள்விகளை தொகுக்க அவர் எடுத்துக் கொண்ட கவனம் கண்டு வியந்தேன். ஆனால் அவர் ஒரு எழுத்தாளராக முன்வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவரை கண்டெடுத்த எழுத வைத்த பெருமை அரவிந்தனுக்கு தான் செல்ல வேண்டும். மின்னம்பலத்தில் தினேஷ் எழுதி வருகிற கிரிக்கெட் கட்டுரைகள் தரமானவை; தொழில்நுட்பரீதியானவை. நான் தடம் பதிக்காத களம் அது. ஆங்கிலத்தில் ஆகாஷ் சோப்ரா எழுதும் பத்திகளின் பாணியிலானவை தினேஷின் கட்டுரைகள். தகவல்களை சேகரிக்க அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை பாராட்டத்தக்கது.

Image result for அரவிந்தன் காலச்சுவடு

10) சிறந்த எடிட்டர்அரவிந்தனே தான். மின்னம்பலத்தில் நான் தொடர்ந்து எழுதியதால் சொல்லவில்லை. பொதுவாய் எடிட்டர்கள் நம்மிடம் கட்டுரை கேட்கும் commissioning editorsஆக மட்டுமே இருப்பார்கள். ஆனால் அரவிந்தன் நம் எழுத்தை கவனமாய் திருத்தி செதுக்குவார். சில விசயங்களில் பிடிவாதமாய் ஒரு தரப்பை எடுத்து லட்சுமணக் கோடு வரைந்து விடுவார். அதைத் தாண்டி நாம் செல்ல முடியாது. பெருந்தேவி, நவீனா, தினேஷ் என பலரையும் நிறைய நல்ல கட்டுரைகளை அவர் எழுத வைத்ததும் பாராட்டத்தக்கது. சமீபத்தில் இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழை அவை எடிட் செய்து கொணர்ந்துள்ள விதம் கண்டு அசந்து போனேன். அபாரமான பணி அது. காலத்துக்கும் வைத்து படிக்க வேண்டிய ஒரு மலராக அது வந்துள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...