முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2018இன் முதல் பத்து தமிழ் ஆளுமைகள்



இது என் தனிப்பட்ட தேர்வு மட்டுமே. 2018இல் தமிழகத்தில் என் கவனத்தில் பட்ட மனிதர்களை ஒரு சிறிய பட்டியலில் தொகுத்திருக்கிறேன்.

Image result for ராஜன் குறை

1)   சிறந்த பொது சமூக அறிவுஜீவி (public intellectual): ராஜன் குறை. ராஜன் குறை என்றுமே ஆழமான அறிவும் எழுத்துத் திறனும் கொண்டவரே. இவ்வருடம் அவர் மேலும் வெளிப்படையாய் தன் அரசியலுக்காக எழுத்தில் போராடினார் எனலாம். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திராவிட அரசியலை ஆதரித்தார். என்னை மாற்றி யோசிக்க வைத்தார். அவரது சமூக அக்கறையும் லட்சியவாதமும் நெகிழ வைப்பவை. என்னைப் போன்றோருக்கு ஒளி தருபவை.



Image result for ஸ்டாலின் ராஜாங்கம்

2)   சிறந்த வரலாற்றியல் எழுத்தாளர் - ஸ்டாலின் ராஜாங்கம். ஸ்டாலின் குறித்து நான் கூடுதலாய் சொல்ல ஒன்றுமில்லை. என் தலைமுறையின் ஒளிர்நட்சத்திரம் அவர். இவ்வருடம் அவர் தலித்திய நோக்கில் பல அரசியல் சமூக நிகழ்வுகளை மீளுருவாக்கம் செய்தது, அறியப்படாத மனிதர்களை பேட்டி கண்டு எழுதியது என்னை மிகவும் கவர்ந்தது.

Image result for woman facing away
ஸ்ரீவள்ளியை யாரும் இதுவரை பார்த்ததில்லை...
3)   சிறந்த கவிஞர்ஸ்ரீவள்ளி. சமகால கவிதையில் ஆவேசத்தின் மூர்க்கம் வேண்டும்; பேய்மழையின் வேகம் வேண்டும்; உன்மதத்தின் புயல் அதில் அடிக்க வேண்டும்; குறிப்பாய் அதில் வரும் உண்மை சுயமுரண் பொதிந்ததாய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த குணங்கள் அனைத்தும் ஸ்ரீவள்ளியின் கவிதைகளில் உள்ளன. “பொகொன்றை பூக்க வந்த பேய்மழைஇவ்வருடத்தின் சிறந்த தொகுப்பு என்பதில் ஐயமில்லை.

Image result for director ranjith

4)   சிறந்த இயக்குநர் – “காலாவுக்காகரஞ்சித். காட்சிமொழியில் ரஞ்சித் காட்டியுள்ள அக்கறை, அதில் அவருக்குள்ள அபார ஆளுமை, அரசியல் கதையாடலையும் காட்சிமொழியையும் ஒன்றாக்கிய விதம், முற்றிலும் எதிர்பாராத ஒரு கிளைமேக்ஸ் ஆகியவைகாலாவை” நாம் காலத்துக்கும் மறக்க முடியாத திரையனுபவம் ஆக்கின.

Image result for mari selvaraj

5)   சிறந்த அறிமுக இயக்குநர் – “பரியேறும் பெருமாளுக்காக” மாரி செல்வராஜ். காட்சிமொழி மீதுள்ள பிடிப்புக்காகவும், அவர் திரையில் கொணர்ந்த தனித்துவமான வாழ்க்கைக்காகவும்.

Image result for ஆசிரியர் பகவான்

6)   சிறந்த பிரபலம் - ஆசிரியர் பகவான். ஊர்களில் ஆசிரியர்கள் பால் மாணவர்கள் கொள்ளும் தீவிர பந்தத்தை கண்டிருக்கிறேன். ஆனால் பகவானை போக விடாமல் மாணவ, மாணவியரும் அவர்களின் பெற்றோர்களும் காட்டிய ஆவேசமும் அவர் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கையும் நெகிழவும் கலங்கவும் வைத்தது. கல்விப் புலத்தை சேர்ந்தவனாய் எனக்கு நம்பிக்கை ஊட்ட வைத்த நிகழ்ச்சி இது. இவ்வளவு பிரபலம் கிடைத்த பின்னரும் பகவான் எளிமையாக நடந்து கொண்டதும் என்னை கவர்ந்தது. தொழிலையும் பொதுநலனையும் ஒன்றாக்க முடிவது ஒரு பாக்கியம். பகவானைப் போல அது நம்மில் பலருக்கும் வாய்க்க வேண்டும்.

Image result for கே என் செந்தில்

7)   சிறந்த புனைகதையாளர்கே.என் செந்தில். செந்திலின் நெடுங்கதைசகோதரிகள்செண்டிமெண்டான படைப்பு என ஒரு பக்கம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நுட்பமாய் அதை வாசித்தவர்கள் அதன் ஆழத்தை, சிக்கலை கண்டுணர்ந்தார்கள். என் வாசிப்பில் இவ்வருடத்தின் சிறந்த புனைகதை இது தான்.

Related image

8)   சிறந்த இணைய கட்டுரையாளர் - பெருந்தேவி. பெருந்தேவி எழுதும் பல விசயங்களில் (.தா., அவரது ரேடிக்கல் பெண்ணியம்) என்னால் உடன்பட முடிந்ததில்லை என்றாலும் அவர் தான் நம்புகிறவற்றை பிடிவாதமாய், தீவிரமாய் இவ்வருடம் எழுதியிருக்கிறார். பல ஆழமான, விரிவான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.

Image result for தினேஷ் அகிரா

9)   சிறந்த அறிமுக எழுத்தாளர்தினேஷ் அகிரா
தினேஷ் கேப்டன் டிவியில் பணி செய்த போது அவர் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பேச என்னை அழைத்திருந்தார். அப்போது அவரது கிரிக்கெட்டில் அவருக்குள்ள நிபுணத்துவம், புரிதல், அக்கறை, கேள்விகளை தொகுக்க அவர் எடுத்துக் கொண்ட கவனம் கண்டு வியந்தேன். ஆனால் அவர் ஒரு எழுத்தாளராக முன்வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அப்படி அவரை கண்டெடுத்த எழுத வைத்த பெருமை அரவிந்தனுக்கு தான் செல்ல வேண்டும். மின்னம்பலத்தில் தினேஷ் எழுதி வருகிற கிரிக்கெட் கட்டுரைகள் தரமானவை; தொழில்நுட்பரீதியானவை. நான் தடம் பதிக்காத களம் அது. ஆங்கிலத்தில் ஆகாஷ் சோப்ரா எழுதும் பத்திகளின் பாணியிலானவை தினேஷின் கட்டுரைகள். தகவல்களை சேகரிக்க அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை பாராட்டத்தக்கது.

Image result for அரவிந்தன் காலச்சுவடு

10) சிறந்த எடிட்டர்அரவிந்தனே தான். மின்னம்பலத்தில் நான் தொடர்ந்து எழுதியதால் சொல்லவில்லை. பொதுவாய் எடிட்டர்கள் நம்மிடம் கட்டுரை கேட்கும் commissioning editorsஆக மட்டுமே இருப்பார்கள். ஆனால் அரவிந்தன் நம் எழுத்தை கவனமாய் திருத்தி செதுக்குவார். சில விசயங்களில் பிடிவாதமாய் ஒரு தரப்பை எடுத்து லட்சுமணக் கோடு வரைந்து விடுவார். அதைத் தாண்டி நாம் செல்ல முடியாது. பெருந்தேவி, நவீனா, தினேஷ் என பலரையும் நிறைய நல்ல கட்டுரைகளை அவர் எழுத வைத்ததும் பாராட்டத்தக்கது. சமீபத்தில் இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழை அவை எடிட் செய்து கொணர்ந்துள்ள விதம் கண்டு அசந்து போனேன். அபாரமான பணி அது. காலத்துக்கும் வைத்து படிக்க வேண்டிய ஒரு மலராக அது வந்துள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...