முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிகாரக் குவிப்பு, செலிபிரிட்டி கலாச்சாரம் - அழியும் இந்திய கிரிக்கெட் அணி





தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய பயணத்தொடரில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களை நிச்சயமாய் இழக்கும் என முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரான மைக்கேல் வாஹ்ன் சொல்லியிருக்கிறார். இதை ஏற்கிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா காலங்காலமாய் சொதப்பியே வந்துள்ளது. டிரா செய்ய முடிந்தால் சிறப்பு. ஒட்டுமொத்தமாய் இந்த ஆஸி தொடர் ஒரு நேரவீண். 

இதை கோலியும் அறிவார். ஆனால் அவர் மனமெல்லாம் பிறக்கவிருக்கும் தன் குழந்தை மீதே இருக்கும். வேறெந்த நம்பிக்கையூட்டும் நற்செய்தியும் அவருக்கு வரும் மாதத்தில் இல்லை. ஏனென்றால், இந்த தொடர் அவசரமாய் திட்டமிடப்பட்டு, மோசமாய் அணி தேர்வு செய்யப்பட்டு மோசமாய் எடுக்கப்பட்ட அட்லி படத்தைப் போல உள்ளது. 


ஷாமி, சஹல், சாஹா நல்ல உடல் தகுதியுடன் இல்லை. ஆனால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்த கிரிக்கெட் வாரியம் ரோஹித் ஷர்மா மட்டும் இந்தியாவில் அவர் பாட்டுக்கு திராட்டில் விட்டது ஏன் எனப் புரியவில்லை. ஒவ்வொரு வீரருக்கு ஒவ்வொரு நியாயமா எனும் கேள்விக்கு விடையில்லை. கோலி வழக்கம் போல இந்த அரசியலுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என நழுவப் பார்க்கிறார். வீரர்கள் இன்னொரு பக்கம் ஐ.பி.எல்லில் தொடர்ந்து ஆடின களைப்பில் இருக்கிறார்கள். மீண்டும் ஒரு பெரிய தொடரை எதிர்கொள்வதற்கான மன ஊக்கம், ஆற்றல் அவர்களுக்கு இருப்பதாய் தோன்றவில்லை. அணித்தலைவரான கோலி முன்பு தன் அப்பா காலமான போது ஈமச்சடங்குக்கு செல்லாமல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டவர். சச்சினும் அப்படி உலகக்கோப்பைத் தொடருக்கு திரும்ப வந்து ஆடியதைப் பார்த்துள்ளோம். ஆனால் இப்போதைய கோலியோ இந்த முக்கியமான தொடரின் டெஸ்ட் போட்டிகளுக்கு முழுமையாக இருக்காமல் இந்தியாவுக்கு தன் குழந்தைப்பிறப்புக்காக திரும்பும் முடிவில் இருக்கிறார். இது பிற அணி வீரர்களுக்கு அளிக்கும் சேதி என்னவாக இருக்கும், ‘இத்தொடர் ஒருவித விடுமுறை கொண்டாட்டம் தவிர வேறொன்றும் இல்லை’ என்பதன்றி.

 நியாயமாக கோலிக்குப் பதிலாக ரஹானேவை டெஸ்ட் தொடரின் தலைவராக ஆரம்பத்திலேயே அறிவித்து, கோலியை வெறும் மட்டையாளராக மட்டுமே முதல் போட்டியில் ஆடச் சொல்லியிருக்க வேண்டும். அத்துடன் அணியைத் தேர்வு செய்வது, தொடரின் வியூகங்களைத் திட்டமிடுவது ஆகிய பொறுப்புகளை முழுமையாக ரஹானேவிடம் ஒப்படைத்திருக்கலாம். அப்போது டெஸ்ட் தொடரில் உன்னிப்பாக உத்வேகமாய் இந்திய அணி ஆட வாய்ப்பு இருந்திருக்கும்.

 ஆனால் இது ஏதோ குழந்தை பாதி கக்கா போய் விட்டு அதில் படுத்து புரண்டு விளையாடுவதைப் போல ஒரு போட்டியில் இவர் தலைவர், மற்ற போட்டிகளில் இன்னொருவர் தலைவர் என்றால் அது எப்படியான குழப்பத்தை, கவனச்சிதறலை ஏற்படுத்தும்? போட்டித்தொடரை இழந்தோமெனில் பழி யாருக்குப் போகும்? வென்றோமெனில் பெருமை யாருக்கு?

அணித்தலைவருக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை அளிப்பது, தேர்வாளர்கள், வாரிய தலைவர் என அனைவரையும் அணித்தலைவர் தன் உள்ளங்கையில் வைத்து செல்ல நாய்க்குட்டியைப் போல நடத்துவதானது தோனியின் காலத்திலேயே தொடங்கி விட்டது. கோலி இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று விட்டார். இப்போது அணித்தலைவரானவர் இந்தியாவின் பிரதமரைப் போல. அவரது செயலுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டியதில்லை. மாறாக அவருக்கான பெயரும் புகழும் மட்டும் தொடர்ந்து கட்டமைக்கப்படும். ஒரு நட்சத்திர பிம்பத்தை இப்படி உருவாக்கி அதை வைத்து அறுவடை செய்வதன்றி உலகக்கோப்பைகளை வெல்லும் இலக்குடன் அணி இப்போது வழிநடத்தப்படுவதில்லை. இவ்விசயத்தில் கங்குலி, ஷா ஆகியோரின் தலைமையில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஶ்ரீனிவாசனின் தலைமையிலான வாரியத்தைப் போன்றே நடந்து கொள்கிறது.


விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளராக அனுஷ்கா ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட மாட்டேன். அந்தளவுக்கு குடும்ப அரசியல், தனிமனித வழிபாடு, அதிகாரக் குவிப்பு இந்திய கிரிக்கெட்டை நாசமாக்கி வருகிறது. எதிர்காலத்தில் இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அரசியல்வாதிகள் கிரிக்கெட் வாரியத்தில் பதவி வகிப்பதை, அணித்தலைவரை நிரந்தரமாய் அன்றி நான்கு வருடங்களுக்கு மட்டுமே நியமிப்பதை, ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு அணித்தலைவரை நியமிப்பதை வழக்கமாக வேண்டும், வீரர்களின் மனைவி, குழந்தைகள் அவர்களுடன் ஓட்டலில் தங்குவது, கொண்டாட்டங்களில் பிற வீரர்களுடன் கலந்து கொள்வது, மனைவிகள் சமூகவலைதளங்களில் கிரிக்கெட் பற்றி கருத்து சொல்வது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் அதிகாரம் ஒரு புள்ளியில் குவிந்து செலிபிரிட்டி கலாச்சாரம், அரசியல் அதிகாரம் என அது வளர்வதை தடுக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...