முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உப்புமாவும் குத்துச்சண்டையும்


"காகித மலர்களில்" எனக்கு மிகவும் பிடித்த இடம் இது. விசுவம் - அனேகமாக எல்லா ஆய்வாளர்கள், எழுத்தாளர்களையும் போல - அறிவுச் செயல்பாடு, சிந்தனை, அரூபமான படைப்பாக்கம் மீது அவநம்பிக்கை கொள்கிறான். ஏனென்றால் அவை புலனுலகில் இடமற்றவை. அறிவைப் பார்க்க, தீண்ட, நுகர, சுவைக்க முடியாது. எழுத்தை, கற்பனையை ஒரு காற்றைப் போல, ஒரு பெண்ணின் வாசனையைப் போல உணர முடியாது. அவனுக்கு அப்போது தான் சமைக்கும் உப்புமாவே தனது ஆய்வுக் கட்டுரையை விட உண்மையானது, நிச்சயமானது எனத் தோன்றுகிறது.

நான் இதை உடற்பயிற்சியின் போது, குத்துச்சண்டை பயிற்சியின் போது உணர்ந்திருக்கிறேன். எழுதும் போது நமக்கு இப்படி வியர்ப்பதில்லை. சூழலுடன், எந்திரங்களுடன், சகமனிதர்களுடன் உறவாடுவதில்லை. அவர்களின் உடல் சூட்டை, வியர்வை நெடியை, வியர்வையில் மினுங்கும் சருமத்தைக் காண்பதில்லை. எழுதும் போதும், சிந்திக்கும் போதும் இந்த உலகிடம் இருந்து வெகுவாக விலகி வேறெங்கோ சஞ்சரிக்கிறோம். முகமற்ற, கைகால்கள் அற்ற, எடையோ, ஸ்பரிசமோ இல்லாத உலகம். அந்த உடலற்ற உலகில் தான் 9-5 வேலையிலும், உரையாடல்களிலும் இருக்கிறோம். நேற்று நான் குத்துப்பையில் 1-2, 1-2 எனப் பயில்கையில் எப்போதெல்லாம் என் முகத்தைப் பாதுகாக்க, guard செய்ய மறக்கிறோனோ அப்போது என் மாஸ்டர் என் பின்னால் நின்றபடி ஒரு காகிதக் குழலால் சுளீர் சுளீரென காதில் அடித்தார். நான் உடனே உஷாரானேன். மீண்டும் தவறு செய்து அடிவாங்கினேன். எனக்கு இது வெகுவாகப் பிடித்திருந்தது.

 நாம் இலக்கிய விவாதங்களில், வேலையிட சர்ச்சைகளில் பரஸ்பரம் சொற்களால் குத்துகிறோம், தர்க்கத்தால் பின்மண்டையில் தாக்குகிறோம். இது பகையுணர்ச்சியை வளர்க்கிறது. ஆனால் மாஸ்டரிடம் எனக்கு எந்த வருத்தமோ கோபமோ ஏற்படவில்லை. மாறாக அவர் அடிக்கையில் அன்பே வந்தது. இதை சுலபமாக விளக்க இயலாது.

 கடந்த மூன்று நாட்களாக அங்கு ஸ்பாரிங் நடக்கிறது. ஒரு புதிய பெண் - குத்துச்சண்டையின் அடிப்படை தெரியாதவர் - அவரை மாஸ்டர் மற்றொரு புதிய பையனுடன் ஸ்பாரிங் செய்யச் சொன்னார். அப்பெண் மரண குத்து விட்டார். நானே அசந்து விட்டேன். ஆட்டத்தின் தொழில்நுட்பம் பற்றி ஒன்றுமே தெரியாத, ஆடும் பிரக்ஞையே இல்லாத ஒருவரின் ஆவேசமான ஆட்டம் அது. அதன் பிறகு மாஸ்டர் இருவரிடமும் தனித்தனியாக ஸ்பாரிங் செய்து அவர்களை சுலபத்தில் முறியடித்துக் காட்டினார்.  இருவருமே அடிபட்டார்கள், வியர்வையில் குளித்தார்கள், தோற்றார்கள், வென்றார்கள், வென்றார்கள், தோற்றார்கள். ஆனால்
ஸ்பாரிங் முடிந்த பின்னர் அவர்கள் எந்த கசப்பும் அற்று இருந்தார்கள். அவர்களுடைய முகங்கள் மகிழ்ச்சியில் ஒளிர்ந்தன. அதுவே மனிதனின் அசலான மகிழ்ச்சி என எனக்குத் தோன்றியது. 

இதுவே ஒரு இலக்கிய சர்ச்சை நடந்து முடிந்த பின் பாருங்கள், ஒவ்வொருவரும் முகம் வாடி, கண்களில் காயம்பட்ட உணர்வுடன், முகத்தில் புகைச்சலுடன் திரும்புவார்கள். அப்போது ஏற்பட்ட காயங்கள் ஆற பல மாதங்கள், வருடங்கள் ஆகும். சிலர் திரும்ப பேசிக் கொள்ளவே மாட்டார்கள். பல வருடங்களுக்குப் பிற்கு அன்றைய அவமானத்தை நினைவுகூர்ந்து மனம் வெதும்புவார்கள், கொந்தளிப்பார்கள், அரற்றுவார்கள், சவால் விடுவார்கள், சுயசமாதானம் கொள்வார்கள், யாராவது ஆற்றுப்படுத்த மாட்டார்களா என மீண்டும் ஏங்குவார்கள்.
மனம், மொழி சம்மந்தபட்ட எல்லாவற்றிலும் இப்படி ஒரு போலித்தனம், கசப்பு, வன்மம் வந்து விடுகிறது. ஆனால் உடலைக் கொண்டு விளையாடும் போது, பேச்சில்லாமல், நோக்கமில்லாமல் பரஸ்பரம் இருவர் தாக்கிக் கொள்ளும் போது அங்கு வக்கிரமாக எதுவும் தோன்றுவதோ எஞ்சுவதோ இல்லை. அல்லது ஆதவன் சொல்லுவதைப் போல உப்புமா கிண்டி ரசித்து சாப்பிடும் போதும் உலகம் அழகாகி விடுகிறது.

ஹைடெக்கர் சொல்வதைப் போல, நமது உடல் இந்த மனதை விட, சிந்தனைகள், உணர்ச்சிகள், இவற்றால் ஆன பண்பாட்டை விட மேலானது எனத் தோன்றுகிறது! நிஜமான உலகு உடல்களால் ஆனது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...