முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிளாக்லிஸ்ட் கலாச்சாரம்


தமிழ்நாட்டில் இலக்கியத் திருவிழாக்களில் யார் அழைக்கப்பட வேண்டும், எவ்வளவு சன்மானம் வழங்கப்பட வேண்டும் என்பதெல்லாம் ரெண்டாவது விசயம் - ஆனால் பிளாக் லிஸ்டிங் பயம்தான் ஆக மோசமானது. மறுத்தாலோ விமர்சித்தாலோ தம்மை ஒரேயடியாக இருட்டடித்து விடுவார்கள் எனும் அச்சம் எல்லாரிடமும் உள்ளது. ஜி. குப்புசாமியின் இன்றைய குறிப்பிலும் அதைக் குறிப்பிட்டு தான் அஞ்சவில்லை என்கிறார். அரசு யாரையும் பிளக்லிஸ்ட் பண்ணச் சொல்வதில்லை என்றாலும் அதிகாரிகளுக்கு அம்மனநிலை உள்ளது. இது மெல்லமெல்ல பிளாக்லிஸ்ட் கலாச்சாரத்தை உண்டு பண்ணுகிறது, முணுமுணுப்பவர்கள் மெல்ல அமைதியாகிறார்கள். இந்த அச்சம் தம்மை சுயதணிக்கை செய்யவும் பரஸ்பரம் கட்டுப்படுத்தவும் செய்வது.

நான் முதுகலை படித்த எம்.ஸி.ஸியில் ஒரு வழக்கம் உண்டு - விடுதிக்கென்று மாணவர் தேர்தல் நடக்கும். அதில் வெற்றி பெறும் தலைவரை தேர்தலின்போது கடுமையாக விமர்சித்துத் தோற்றுப் போகிறவரை பிளாக்லிஸ்ட் பண்ணாமல் முக்கியமான பொறுப்புகளைக் கொடுப்பார்கள். அவரை மிகுந்த மரியாதையுடன் தலைவர் நடத்தியாக வேண்டும். இதன்வழியாக எதிர்க்குரல் ஆட்சியின் பகுதியாகி விடும். அது எதிர்க்குரலாகவே நீடிக்கும் சுதந்திரமும் உண்டு. உண்மையான ஜனநாயகப் பண்பாடு அது. வெள்ளைக்காரன் எம்.ஸி.ஸியை ஆரம்பித்தபோது கொண்டு வந்தது.

ஆனால் இன்று அதெல்லாம் எங்குமே சாத்தியமில்லை. வாயை மூடுவதும், 'சரியான' விசயத்தை மட்டுமே எப்போதும் பேசுவதுமே இன்றைய ஜனநாயகம் - இப்போது நாம் பின்-மக்களாட்சி காலத்தில் வாழ்கிறோம். மிகுந்த சுதந்திரத்துடனும் அதே நேரம் அதைப் பயன்படுத்தும் அச்சத்துடனும் வாழ்வதே பின்-மக்களாட்சி காலத்தின் இயல்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.