முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலெழுதுவது பற்றின குறிப்புகள் - 8





எதார்த்தக் கதையுலகை எழுதுவதுராமாயணத்தில்ராவணச் சேனையினர் அனுமனின் வாலுக்குத் தீ வைப்பதைப் போன்றது (ராமாயணத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஏனோ அதுதான்.). அனுமார் அங்கிங்கு தாவி குதித்து மொத்த தீவையும் பற்றி எரிய வைப்பார். இந்த நெருப்பை நாம் எதார்த்தம் என்று கொள்வோமெனில், நம் கதையுலகம்தான் வால். ஒவ்வொரு சொல்லையும், சேதியையும், மதிப்பீட்டையும், திருப்பம், காட்சிச் சித்தரிப்பு, கருத்தையும் ஒரு குறிப்பிட்ட தர்க்கச் சட்டகத்துக்குள் நாம் அதன்பிறகு அடக்க வேண்டி வரும். அது ஒரு பெரும் அவதி. அதாவது தர்க்கப்படி எழுதுவது அல்ல பிரச்சினை. அது ஒரு மெனக்கெடல் மட்டும்தான். எதார்த்தக் கதையை எழுதும்போது நாம் இந்தச் சட்டகத்துக்குள் அங்குலம் பிசகாமல் கச்சிதமாக நிற்பதால் அதன் நெருக்கடியை, செயற்கையான கட்டுப்பாட்டை, அடிமை நிலையை நாம் உணர்வதில்லை

எதார்த்தத்தை மீறி ஒரு நாவலை இப்போது நான் எழுதும்போது எனக்கு ஒன்று விளங்குகிறது - எதார்த்தப் புனைவை எழுதுகையில் நான் சம்பவ வரிசையின் காரண காரிய நியாயத்தையும், நம்பகத்தன்மையையும் மட்டுமே செதுக்கவில்லை, நான் ஒரு துவக்க-முடிவெனும் எல்லைக் கோட்டுக்குள் என் கதையைத் திணிக்கிறேன். சிலநேரங்களில் இந்தச் சட்டகம் அமேசானில் பொருள் வாங்கும் நமக்கு வைத்து அனுப்பப்படும் கெட்டி அட்டைப் பெட்டிகளை நினைவுபடுத்துகிறது. சிலநேரங்களில் ஒரு சிறிய பொருளைக் கூட பெரிய பெட்டிக்குள் வைத்து பெரிய பார்சலாக அனுப்புவார்கள் (பொருளின் பாதுகாப்பை நிச்சயப்படுத்தவும் நம் நன்மதிப்பைப் பெறவும்). எந்த ஒரு சம்பவத்தையும் அதற்கு உரிய இடத்தில் சரியாகப் பொருத்துகிறோம். இப்படிச் செய்யும்போது நாம் வாசகர்களின் பிரக்ஞையையும் தான் இப்படி ஒரு அட்டைப் பெட்டிக்குள் அடைக்கிறோம்


நிஜ உலகம் இப்படி இல்லையா? இதுஎதார்த்தம்இல்லையா? இக்கேள்விகளுக்குள் நாம் போனாலே எதார்த்த இலக்கியத்தின் பாம்பு வாய்க்குள் மாட்டிக் கொள்வோம். ஏன் ஒரு புனைவு நாம் காணும் புறவுலகை ஒத்திருக்க வேண்டும்? நாம் பார்க்கும் பொருட்களையும் உயிர்களையும், புறக்காலத்தையும் வெளியையும் ஒருங்கிணைத்து ஒரு கதையாடலை உருவாக்குகிறோம். இதுவே நமதுபுற எதார்த்தம்’. அடுத்து நாம் எதார்த்தப் புனைவுக்குள் இதையே கற்பனையில் உருவாக்குகிறோம். ஒரு கதையை நிச்சயப்படுத்த அதன் மீதாக ஒரு மீ-கதையை உருவாக்குகிறோம். அதுவே எதார்த்தப் புனைவு. இது ஒரு தேவையில்லாத கட்டுப்பாட்டை நம் கற்பனையிலும் மொழியிலும் புனைவுக்குள் செயல்படும் காலத்திலும், இப்புனைவுக் காலத்தால் கட்டுப்படுத்தப்படும் புனைவு வெளியிலும் திணிக்கிறோம். என்னுடைய ஒரு பாத்திரம் எட்டாவது மாடியில் இருக்கிறது. அவர் வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்து மாடிப்படிக்கட்டில் இறங்கி வந்து வாயிற் கதவைத் தாண்டிச் சென்று சாலையை அடைய வேண்டும். அல்லது அவர் தன் பால்கனியில் இருந்து கீழே குதித்து தன் மண்டையையோ கைகால்களையோ உடைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் புற எதார்த்தத்தை நாம் ஏன் இலக்கியத்தில் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் இதை மீறி எழுதும்போது மட்டுமே உணர்கிறேன். மற்ற சமயங்களில் இந்தப் புற எதார்த்தத்தின் கட்டுக்குள் இருப்பதை நானே பலமுறை உணர்த்தி என்னை இந்தப் புற நிபந்தனைகளால் ஆன ஒருவராக மீளமீள உணர்த்துகிறேன். இப்படி என் கற்பனையும் என் நம்பிக்கையும் எதார்த்தப் புனைவில் இருந்தும் வருகின்றன. அதாவது நான் எதார்த்த உலகை நோக்கி எதார்த்தப் புனைவெழுதவில்லை, நான் எதார்த்தப் புனைவெழுதும்போதும் படிக்கும்போதும்எதார்த்தம்எனும் ஒரு கருத்தமைவை நம்பவும் ஏற்கவும் அதற்கு ஏற்ப என் மன அமைப்பில் துணிசுற்றி நெருப்பு வைக்கவும் செய்கிறேன்


எதார்த்தத்தின் சங்கிலியை அறுக்கும்போது அது நம் உலகை எவ்வளவு விடுவிக்கிறது என உணர்கிறேன். ஆனால் அதைப் புறவுலகில் செய்வது கடினம். புனைவில் இருந்து அதை ஆரம்பிக்கும்போதே அதன் சாத்தியங்கள் புலனாகின்றன - நமது அரசியல், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் எதார்த்தச் சட்டக்கத்தினுள் மட்டுமே உயிர்க்கக் கூடியவை. பாத்திரங்கள் எதார்த்தத்தை மீறும்போது அவை அரசியலையும் மதிப்பீடுகளையும் பல்வேறு எதிர்மைகளையும் கடந்து அவ்வளவு சுதந்திரமாக உலவுகின்றன


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...