Skip to main content

Posts

Showing posts from September, 2008

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நவீன தலித் மனதின் பிளவுக்களம்: நட.சிவகுமார் கவிதைகள்

நட . சிவகுமாரின் சமீப கவிதைகள் (" வெட்டி முறிப்புக்களம் ") தனி நபராகவும் , சமூக மனிதனாகவும் கவிதை சொல்லியின் பல்வேறுபட்ட பிளவுகளைப் பேசுபவை . மாந்திரிகச் சடங்குகள் பற்றின நுண்தகவல்கள் , மைய நீரோட்ட சாதியினரின் வரலாற்றுப் புனைவுகளை சாடும் எதிர்கலாச்சார பதிவுகள் ஆகியன இவர் கவிதைகளுக்கு காற்றில் பறந்து விடாதபடியான கனபரிமாணத்தை , மண்ணில் காலூன்றும் வலுவை அளிக்கின்றன . பழம் கலாச்சாரக் கூறுகள் , வை விளிம்பு நிலை சமூகத்தினுடையதாகினும் , இன்றைய முதலாளித்துவ , அறிவியல் சமூக ஓட்டங்கள் முன் பொருளற்றுப் போகும் தருணங்கள் நிறைய உள்ளன . சிவகுமார் ஒருபுறம் தலித் தெய்வங்களாய் மேலாங்கோட்டு , கொல்லங்க்கோட்டு அம்மன்கள் , இசக்கி , மாடன் , சுடலையின் வீரியம் பேசுகிறார் . மறுபுறம் தான் பயங்கரவாத உலகில் பிழைக்க குண்டு துளைக்காத வீடும் , இரண்டாய் வெட்டிப் போட்டால் உடல் ஒன்று சேரவும் , காசு கொட்டவும் வரங்கள் கேட்டால் தர இயலாது உருத்தெரியாது மாயமாகும் தனது உதவாத தலித் தெய்வத்தையும் பகடி செய்கிறார் (" மாந்திரிக ஓலைச...