முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Mother Mary Comes to Me


 

இதைப் படிக்கையில் ஏற்பட்ட முதல் எண்ணம் இப்புத்தகத்தை அருந்ததி ராய் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்பது. இது ஒரு சுயசரிதை. தனக்கும் அவரது அம்மாவுக்குமான உறவை முன்வைத்து தன் வாழ்க்கையை எழுதுகிறார் அருந்ததி ராய்.

பயங்கர வெளிப்படையாக எழுதுகிறார் என்று சொல்ல முடியாது - அன்னையின் பிம்பம், அவரை மையமிட்டு எழுதுவதால் வரும் தயக்கம் தோளில் தட்டி எச்சரிக்கும் சமிக்ஞையாக அவருக்கு இருந்திருக்க வேண்டும். எதைச் சொன்னாலும் அது தன்னை நோக்கி மட்டும் வராது எனும் உணர்வு அவரைத் தடுக்கிறது என நினைக்கிறேன். ஆகையால் யாரையும் காயப்படுத்தலாகாது எனும் ஜாக்கிரதை அவரது எல்லா பக்கங்களிலும் தெரிகிறது. தன் அன்னையைக் குறித்த ஆழமான அலசலும் இல்லை. அன்னையைக் குறித்த ஒரு உணர்ச்சிகரமான நிலைப்பாட்டை ஆரம்பத்திலேயே எடுப்பதால் அதை மீறிப் போய் எதார்த்தமாக அவரைக் காண ராயால் முடிவதில்லை எனத் தோன்றுகிறது.
இதன் பலம் 'கேட்க' இனிமையான ராயின் நடை. மனத்தின் லயங்களுக்கு வடிவம் கொடுப்பதைப் போன்ற வாக்கிய அமைப்புகள். கவிதைக்கு அருகில் வருகிற நளினமும் மென்மையும் கொண்ட பல பகுதிகள். அதாவது இது 'கவித்துவம்' அல்ல. மொழியின் கவிதைத்தன்மை. நீரோட்டத்தில் தோன்றும் சிற்றலைகள் எப்படி உள்ளிருந்து எதையும் உணர்த்தாமல், வெளிப்படுத்தாமல் தன்னளவில் அழகைக் கொண்டிருக்குமோ அவ்வாறு செயல்படுவது ராயின் மொழி. அதனளவில் அது பல அர்த்தங்களைத் தரும்.
ராய் குறித்து நெருக்கமாக அறிந்து கொள்ள, அவரது சாதாரணத்துவத்தை எதிர்கொள்ள இந்தப் புத்தகம் உதவுகிறது. ஆனால் அதுதான் இதன் பலவீனமும். அவரது "சிறிய விசயங்களின் கடவுள்" நாவலின் அழகே அது உண்மையை உருமாற்றுவதுதான். அதில் வரும் தகவல்கள் பிரதான பாத்திரங்களின் அகநெருக்கடியின் வழியாக புது வடிவம் எடுக்கின்றன. அந்த உண்மை மயக்கம் சுழல் வட்டப்பாதையொன்றை உருவாக்க அவருக்கு உதவியது. இரட்டைக் குழந்தைகளின் மனம் காலச்சுழலில் அகப்பட்டு வெளியேறாமல் தவிப்பது காலம் என்றால் என்ன எனும் கேள்விக்கு பதில் தேடும் சாத்தியங்களை அளித்தது. இப்பின்னணியில் ராய் ஒரு ஊறுகாய் தொழிற்சாலையைப் பற்றிச் சொன்னாலும், பூச்சியலாளரான தாத்தாவைப் பற்றிச் சொன்னாலும் ஒரு மேஜிக் நிகழ்ந்கது. அவை நாவலின் கருப்பொருளினால் ஒளியூட்டப்பட்டன. ஆனால் இதே தகவல்கள் இப்புத்தகத்தில் வரும்போது பொலிவிழக்கின்றன. அதனாலே இப்புத்தகத்தைப் படித்துவிட்டு "சிறிய விசயங்களின் கடவுள்" நாவலைப் படித்தால் அதன் குறியீட்டுத்தன்மை பலவீனமாகி விடும் எனத் தோன்றுகிறது.
அதற்காக வேறெப்படித்தான் எழுதியிருக்க முடியும்? உரைநடையையே புனைவு கலந்து எழுத முடியும் - மார்க்வெஸ் "Living to Tell a Tale" சுயசரிதையில் செய்வதைப் போல.
உரைநடையில் உண்மை பொய்யாகி விடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...