முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய - இலங்கை தேர்வாளர்களின் : விதூஷகனும் நாயகனும்



இந்திய மற்றும் இலங்கை தேர்வாளர்களிடையே முக்கிய வித்தியாசம் என்ன?

வேறென்ன தெளிவான திட்டவரைவும் அதை நிறைவேற்றும் துணிவும். இந்திய தேர்வுகளில் எப்போதும் குறுகிய கால தேவையும், குழப்பமும் வெளிப்படையாக தெரியும்; அதோடு ஒவ்வொரு தேர்வுக் குழுவின்  நாற்காலி பருவத்திலும் நம்பிக்கையூட்டும் இளம் வீரர்கள் மாறுபடுவார்கள்.
இலங்கை தேர்வாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வீரர்கள் பற்றின மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதில்லை. 33 சராசரி இருந்தும் உபுல் தரங்கா மீது ஐந்து வருடங்களாக நம்பிக்கை வைத்து அதன் பயனை தற்போது அனுபவிக்கிறார்கள். ஜெயசூரியாவையே தயக்கமின்றி கைகுலுக்கி வீட்டுக்கு அனுப்ப முடிகிற அளவுக்கு தரங்காவின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இதை விட முக்கியமாக அவர்கள் களத்தடுப்பு மற்றும் உடல் தகுதிக்கு தருகிற முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. இந்த இரு தகுதிகளின் அடிப்படையில் இந்தியாவில் யாராவது அணியில் இருந்து இதுவரை விலக்கப்பட்டுள்ளனரா? இலங்கையில் அது நடக்கிறது. மிகச்சமீபத்திய உதாரணம் கண்டாம்பி.

கண்டாம்பி கடந்த ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மிகச்சிறப்பாக மட்டையாடினார். ஆனால் அவரது களத்தடுப்பு மட்டமாக இருந்தது. இது மற்ற வீரர்களின் தீவிரத்தை பாதித்தது. இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறந்த மட்டையாட்ட ஆட்டவரலாற்றை கண்டாம்பி கொண்டிருந்த போதும் அவரது ரணதுங்க தொப்பை மற்றும் சொதப்பலான களத்தடுப்பை கருதி நடக்கப் போகும் முத்தரப்பு தொடருக்கான அணியில் அவரை தேர்வாளர்கள் சேர்க்கவில்லை. இக்காரணத்தை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்க விட்டாலும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த ஒருவரை நீக்குவதற்கு வேறெந்த காரணமும் இருக்க முடியாது. இப்படியான தீர்க்கமான முடிவுகள் இந்தியாவில் எதிர்காலத்தில் கூட எடுக்கப்பட மாட்டாது என்பது உறுதி. களத்தடுப்பு நமக்கு ஒரு இறுதியான தகுதி மட்டுமே. உதாரணமாக அஷ்வினின் தேர்வை சொல்லலாம். ஆசியக் கோப்பைத் தொடரில் உடல்தகுதி மற்றும் ஆட்டநிலை காரணமாக யுவ்ராஜ் நீக்கப்பட்டு இந்த தொடரில் மீண்டும் வரவேற்கப்படுகிறார். இடையிலான காலத்தில் அவரால் தனது டெஸ்டு இடத்தை கூட கையகப்படுத்த முடியவில்லை. உடல் தகுதியிலும் பெரிய மாற்றமில்லை. ஒரு தொடரில் நீக்கப்பட்டது தேர்வாளர்களின் மொழியில் தண்டனையென்று பொருள்பட்டாலும் நிஜத்தில் யுவ்ராஜுக்கு ஒப்பான மற்றொருவர் கைவசம் இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் அவரது மறுதேர்வு.

இந்திய தேர்வாளர்களுக்கு விதூஷக வேடம் பொருந்திப் போகிறது என்பது உண்மைதான் என்றாலும் ஒரே நாடகத்தை எத்தனைக் காலம் தான் மேடை ஏற்றப் போகிறார்கள்?

கருத்துகள்

Mohamed Faaique இவ்வாறு கூறியுள்ளார்…
பொதுவாக உங்கள் பதிவு இந்தியா சார்பாகவே எனக்கு விளங்கும். இன்று நன்றாய் இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...