முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு குப்பைத் தொட்டிக்குள்





ஒரு காலையை
சகஎழுத்தாளனை தூஷித்துக் கொண்டு
துவங்குகிறேன்
என் நாய்க் குட்டி
தன் பீப்பீ பொம்மையை
தொடர்ந்து கடித்து கதற வைக்கிறது

பகல் முழுக்க
வேலை செய்து கொண்டே
இருக்கிறேன்
நாய்க் குட்டி நன்றாக
தூங்கிப் போகிறது
பலமுறை
சிறுசிறு சத்தங்கள் அசைவுகள் வாசனைகளுக்கு
உடனடி விழித்து
சுற்றிப் பார்க்கிறது
கதவருகே ஓடிக் குலைக்கிறது
பதிலில்லாவிட்டால்
தனக்கு எட்டாத
ஒவ்வொரு ஜன்னல் பக்கமாய்
நின்று வினவுகிறது
பின் ஏதும் நடக்காதது போல்
தூங்கப் போகிறது
சிறுபெருமூச்சுடன்

மாலை வந்ததும்
எதற்கு வேலை செய்கிறோம்
என்று குழம்பி
எரிச்சலடைந்து
எழுகிறேன்
நாய்க்குட்டி சிறு கொட்டாவி விட்டு
அடுத்து என்னை கவனித்தபடி
பெரிய கொட்டாவியை விடுகிறது
ஓடுகிறது
வாலாட்டி உணவு கேட்கிறது
மூத்திரம் போக இடம் பார்க்கிறது

மொட்டைமாடிக்கு போகிறோம்
சுற்றிலுள்ள அடுக்குமாடி மொட்டைமாடிகளில்
சுற்றுச் சுவரில் பிடித்தபடி நின்று
ரயிலில் இருந்து பார்ப்பது போல்
வேடிக்கைப் பார்க்கும் பலரில்
யாரோ ஒருவர்
கீழே குதிக்கப் போகிறார்
என சட்டென்று நினைத்துப் பார்க்கிறேன்
மொட்டைமாடியில் நடைபயிற்சி
தியானம்
யோகா
தண்டால் எடுப்பது
புத்தகம் படிப்பது
தொலைதூரத்தில் யாருடனாவது சைகையில் பேசிப் பார்ப்பது
எங்கோ மங்கலாய் புலப்படும் ஒருவர்
நேரில் காண எப்படியிருப்பார்
என கற்பனை பண்ணுவது
என எல்லாமே
அதற்கான முன் தயாரிப்பு தான்
என்று நினைக்கிறேன்

நாய்க்குட்டி ஒரு தவளையை
துரத்திக் கொண்டு ஓடுகிறது
தவளை இடுக்குகளில் ஒட்டிக் கொண்டு
சற்று நேரம் ஆசுவசிக்க
நாய்க்குட்டி அதனை சுரண்டி
வீழ்த்துகிறது
இறுதியில் என் கால்களுக்குப் பின்னால்
ஒளிகிறது
நாய்க்குட்டி பரவசமாகி
மாடியை சுற்றி சிலமுறை
ஓடி வருகிறது

வெப்பக்காற்று வீசுகிறது
தூசுப்படலம் ஒரு சல்லாத்துணி போல் எழ
சருகுகள் சுழல்கின்றன
சலிப்பாகி
கால்களைத் தூக்கி
தவளையை விடுவிக்கிறேன்
நாய்க்குட்டி அதனை
முகர்கிறது
நக்கி சுவைக்கிறது
சில நொடிகள் வியந்து விட்டு
வாயில்
மிருதுவாய்
கவ்விக் கொள்கிறது

நான் அதன் பின்னே செல்கிறேன்
என்னிடம் தருகிறது
உருவழிந்த ரப்பர் பொம்மை போல்
தானற்று தெரிகிறது
கீழே வைத்து பார்க்கிறேன்
நிமிண்டுகிறேன்
சின்ன குச்சியால் தட்டுகிறேன்
ஒரு காகிதத்தில்
சுற்றி குப்பைத்தொட்டியில் இடுகிறேன்
திரும்பப் போகையில்
சலசலப்பு கேட்கிறது
மீண்டும் போய்ப் பார்க்கிறேன்
குப்பைத் தொட்டிக்குள்
பல பொருட்கள் அசைகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.