Skip to main content

வந்து பிரிவதும் சென்று பிரிவதும்


வந்து வந்து பிரிபவர்களின்
இருப்புகள்
நமக்கான தண்டனைகள்

ஒருவர்
கூட இருப்பதும்
சட்டென்று விலகுவதும்
ஒரு முட்டை ஓட்டைப் போல்
நம்மை
நொறுக்கி விடுகின்றன


ஒரு கூழாங்கல் போல்
அழைப்புகளையும் வெறுப்புகளையும்
எதிர்த்து கிடக்கவே
விரும்புகிறோம்

ஆக
நாம் சென்று சென்று பிரிபவர்களாக
இருக்க உத்தேசிக்கிறோம்

நாமாக
பிரியும் போது
நம் குற்றவுணர்வை
சுய பொறுப்பு வென்று விடும்
அப்போது
கணக்கு புத்தகங்கள்
நம் பக்கமிருந்து எழுதப்படுகின்றன
வெட்டல்கள் திருத்தல்கள் தாராளமாய் செய்து
இழப்புகளை மிகையாக்கி
காட்டுகிறோம்

நாம் பிரிபவர்களாக இருக்கவே
விரும்புகிறோம்

வந்தவர்கள் போன பின்
சொந்த வீட்டின் நிறைகளும்
பிரிந்து திரும்ப வந்த பின்
அதே வீட்டின் குறைகளும்
பூதாகரமாகி நம்மை
ஆசுவாசப்படுத்து கின்றன

ஒரு உடைந்த நாற்காலியில்
இருக்க கற்ற பின்
குறைந்த காற்றில்
சுவாசிக்க பழகிய பின்
போதாமைகளை அசை போட்டு புளித்த பின்
வீடுகளை தூய்மையாக்கி
ஒவ்வொன்றாய்
தூசுக்கும் இருளுக்கும் விட்டுச் சென்ற பின்

சிலகாலம்
யாருடனாவது இருக்க

யாராலாவது ஒரு காற்றுக் குமிழி போல் விழுங்கப்பட

இருக்க முடியாத தொடர் வெளிச்சத்தில் இருக்க

பூதக்கண்ணாடிக்கு கீழான காட்சிகளுடன் வாழ

பிரியப்படுகிறோம்


எளிதில் நொறுங்கக் கூடிய
லகுவான ஒன்றாய்
மாறுகிறோம்
அதன் அபாயங்களை
பொருட்படுத்தாமல்

அழும் குழந்தையை
பொறுப்பெடுத்துக் கொண்டவரிடம் போல்
கைமாறி கைமாறி போகிறோம்
கொஞ்சல்களும் மிரட்டல்களும்
நம்மை அழ வைக்கின்றன
மேலும் மேலும்

இத்தனை தேவைகள் விருப்பங்களுக்கு
மத்தியில்
தொடர்ந்து பிரிய பாத்தியப்பட்டு இருக்கிறோம் -
ஒரு சிறுகதையின் இறுதிப் பத்தியை போல்
மாயமாய் மறைந்த நபரின்
ஒரே ஒரு கவனமற்ற சொல்லை போல்
மறந்து போன சொல்லின்
முதல் எழுத்தைப் போல்
அது தான்
புரிந்து கொள்வதற்கான துவக்கமாக இருக்கிறது

அதனாலே
எப்போதும் இரு வாசல்களையும்
திறந்து வைத்திருக்கிறோம்
யார் முதலில் வெளியேறுவது
என்று போட்டி போடுகிறோம்

வெளியேறுபவரின் பக்கமே
நியாயம் அதிகம் கனக்கும்
அவர்களின் பக்கம்
என்றுமே தூய்மையானதாக இருக்கும்

அவர்கள் கோபிக்கலாம் கடிந்து கொள்ளலாம் தீர்ப்பெழுதலாம்
இணைந்து இருப்பதன் நியாயங்களை
சொன்னவாக்கில் மறந்து விடலாம்

அவர்களின் கோணலான தர்க்கங்கள்
நிமிர்ந்து கொள்கின்றன
வரலாறு ஒரு பக்கமாய் சாய்கிறது

நாம் எல்லோரும்
அவசரமாய் வியக்கிறோம்
கைகுலுக்கிய கரங்கள்
ஏன் கருணையற்று
கைவிடுகின்றன என

அவர்கள் கடந்து போகிறார்கள்
நிமிர்ந்து பெருமிதமாய் -
விழுந்து உடையும் கண்ணாடிப் பொருளின்
பலகீனத்தை
குற்றம் சாட்டும் ஓராயிரம் வார்த்தைகளுடன்

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...