முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வந்து பிரிவதும் சென்று பிரிவதும்


வந்து வந்து பிரிபவர்களின்
இருப்புகள்
நமக்கான தண்டனைகள்

ஒருவர்
கூட இருப்பதும்
சட்டென்று விலகுவதும்
ஒரு முட்டை ஓட்டைப் போல்
நம்மை
நொறுக்கி விடுகின்றன


ஒரு கூழாங்கல் போல்
அழைப்புகளையும் வெறுப்புகளையும்
எதிர்த்து கிடக்கவே
விரும்புகிறோம்

ஆக
நாம் சென்று சென்று பிரிபவர்களாக
இருக்க உத்தேசிக்கிறோம்

நாமாக
பிரியும் போது
நம் குற்றவுணர்வை
சுய பொறுப்பு வென்று விடும்
அப்போது
கணக்கு புத்தகங்கள்
நம் பக்கமிருந்து எழுதப்படுகின்றன
வெட்டல்கள் திருத்தல்கள் தாராளமாய் செய்து
இழப்புகளை மிகையாக்கி
காட்டுகிறோம்

நாம் பிரிபவர்களாக இருக்கவே
விரும்புகிறோம்

வந்தவர்கள் போன பின்
சொந்த வீட்டின் நிறைகளும்
பிரிந்து திரும்ப வந்த பின்
அதே வீட்டின் குறைகளும்
பூதாகரமாகி நம்மை
ஆசுவாசப்படுத்து கின்றன

ஒரு உடைந்த நாற்காலியில்
இருக்க கற்ற பின்
குறைந்த காற்றில்
சுவாசிக்க பழகிய பின்
போதாமைகளை அசை போட்டு புளித்த பின்
வீடுகளை தூய்மையாக்கி
ஒவ்வொன்றாய்
தூசுக்கும் இருளுக்கும் விட்டுச் சென்ற பின்

சிலகாலம்
யாருடனாவது இருக்க

யாராலாவது ஒரு காற்றுக் குமிழி போல் விழுங்கப்பட

இருக்க முடியாத தொடர் வெளிச்சத்தில் இருக்க

பூதக்கண்ணாடிக்கு கீழான காட்சிகளுடன் வாழ

பிரியப்படுகிறோம்


எளிதில் நொறுங்கக் கூடிய
லகுவான ஒன்றாய்
மாறுகிறோம்
அதன் அபாயங்களை
பொருட்படுத்தாமல்

அழும் குழந்தையை
பொறுப்பெடுத்துக் கொண்டவரிடம் போல்
கைமாறி கைமாறி போகிறோம்
கொஞ்சல்களும் மிரட்டல்களும்
நம்மை அழ வைக்கின்றன
மேலும் மேலும்

இத்தனை தேவைகள் விருப்பங்களுக்கு
மத்தியில்
தொடர்ந்து பிரிய பாத்தியப்பட்டு இருக்கிறோம் -
ஒரு சிறுகதையின் இறுதிப் பத்தியை போல்
மாயமாய் மறைந்த நபரின்
ஒரே ஒரு கவனமற்ற சொல்லை போல்
மறந்து போன சொல்லின்
முதல் எழுத்தைப் போல்
அது தான்
புரிந்து கொள்வதற்கான துவக்கமாக இருக்கிறது

அதனாலே
எப்போதும் இரு வாசல்களையும்
திறந்து வைத்திருக்கிறோம்
யார் முதலில் வெளியேறுவது
என்று போட்டி போடுகிறோம்

வெளியேறுபவரின் பக்கமே
நியாயம் அதிகம் கனக்கும்
அவர்களின் பக்கம்
என்றுமே தூய்மையானதாக இருக்கும்

அவர்கள் கோபிக்கலாம் கடிந்து கொள்ளலாம் தீர்ப்பெழுதலாம்
இணைந்து இருப்பதன் நியாயங்களை
சொன்னவாக்கில் மறந்து விடலாம்

அவர்களின் கோணலான தர்க்கங்கள்
நிமிர்ந்து கொள்கின்றன
வரலாறு ஒரு பக்கமாய் சாய்கிறது

நாம் எல்லோரும்
அவசரமாய் வியக்கிறோம்
கைகுலுக்கிய கரங்கள்
ஏன் கருணையற்று
கைவிடுகின்றன என

அவர்கள் கடந்து போகிறார்கள்
நிமிர்ந்து பெருமிதமாய் -
விழுந்து உடையும் கண்ணாடிப் பொருளின்
பலகீனத்தை
குற்றம் சாட்டும் ஓராயிரம் வார்த்தைகளுடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...