முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிர்மையின் 9 நூல் வெளியீடு: நேர்த்தியான நிகழ்வும் ஒரே ஒரு பிசிறும்



நேற்று புக்பாயின் அரங்கில் உயிர்மையின் 9 நூல்கள் வெளியீட்டு நிகழ்வில் எனது “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” நூலும் வெளியிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நீயா நானா இயக்குநர் ஆண்டனி என் புத்தகம் பற்றி பேசினார்.
ஆண்டனி முன்பே சில அரங்குகளில் பேசி கவனித்திருக்கிறேன். அத்தோடு ஒருமுறை தனி உரையாடலில் அவர் புரூஸ் லீ எப்படி இந்திய-சீனா போரின் போது இந்திய மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தினார் எனக் குறிப்பிட்டதும் என்னை பெரிதும் கவர்ந்தது. அப்போதே அவர் தான் என் நூலைப் பற்றி அரங்கில் பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அவர் எதிர்பார்த்தது போல் மிக நன்றாக பேசினார்.
புத்தகத்தின் கருவை, விவாதப்புள்ளிகளை, எழுத்து முறையை சுட்டிக் காட்டி விட்டு பொதுவாக ஒரு ஆளுமையை பற்றி எழுதுகிறவர்கள் தமிழில் அதை ஒரு புகழாரமாக மாற்றி விடக் கூடிய வழமை இருப்பதை சொன்னார். காமராஜ் என்றாலே காமராஜ் ஒரு சரித்திரம் என்று தான் உச்சஸ்தாயில் வர்ணிப்பார்கள். இந்நூல் அப்படியல்லாமல் புரூஸ் லீயின் தவறுகளை, பிரச்சனைகளை கராறாக சித்தரிப்பதை பாராட்டினார். ஆங்கிலத்தில் டி.ஜெ.எஸ் ஜார்ஜ் எழுதின எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைக்கதையோடு இந்நூலை ஒப்பிட்டு இது போன்ற நூல்கள் தமிழில் தொடர்ந்து வந்தால் இந்தியர்களைப் பற்றின வாழ்க்கை நூல்களை எழுதும் பாணியில் ஒரு முக்கிய மாற்றம் வரும் என்று அவதானித்தார்.
சில குறைகளையும் சுட்டிக் காட்டினார். ஒன்று முழுக்க லயிக்காமல் நான் சற்று விலகலுடன் லீ குறித்து எழுதியிருப்பதாக சொன்னார். அடுத்து இந்திய சண்டைக்கலைகளுடன் ஒப்பிட்டு குங் பூவை மேலும் விளக்கியிருக்கலாம் என்றார். இப்படி ஆண்டனியும் தனது பேச்சை முழுக்க பாராட்டு பத்திரமாக இல்லாமல் கராறான விமர்சனமாக முன்வைத்தார். இதுவும் என்னை கவர்ந்தது.
பின்னர் மனுஷ்யபுத்திரன் முகநூல் குறிப்பொன்றில் குறிப்பிட்டது போல் நிகழ்ச்சி மிக நேர்த்தியாக ஆரவாரமின்றி அமைந்தது. பொதுவான இலக்கிய சர்ச்சைகள், கசப்புகள், காழ்ப்புகள் ஏதும் இன்றி. ஆனாலும் விதிவிலக்கு ஒன்று இருந்தது. அது ஜெயமோகனின் பேச்சு. அரைமணிநேர உரையில் அவர் ஓரிடத்தில் கூட சிவகாமியின் நாவல் தனக்கு பிடித்துள்ளதா, ஒரு இலக்கிய பிரதியாக அது வென்றுள்ளதா என எதையும் சொல்லவில்லை. ஓரே ஓரிடத்தில் குரல் இடற இது “ஒரு குறிப்பிடத்தக்க நாவல்” என்றார். அநேகமான நேரம் ரஷ்ய, மலையாள நாவல்களில் அரசு அதிகார அமைப்புகள் எப்படி எந்திரத்தனமாக இயங்குவதை சொல்லியிருக்கிறார்கள் என்பவை விவரித்தார். அவரை இந்நாவல் நிஜமாக கவர்ந்ததா என்பது எங்குமே புலப்படவில்லை. தான் படித்து சிலாகிக்காத நூலைப் பற்றி பேச ஒருவர் இவ்வளவு தூரம் ஏன் பயணித்து வர வேண்டும் என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.
இது ஜெயமோகன் என்றில்லை பொதுவாக தமிழின் சீனியர் எழுத்தாளர்களின் பிரபலமானவர்கள் அத்தனை பேரின் தந்திரமும் தான். ஒரு நாவலைப் பற்றி இன்னொரு நாவலாசிரியனை பேசக் கூப்பிட்டால் சுற்றி சுற்றி வந்து பல்டி அடித்து கைத்தட்டு வாங்கி விட்டு போய் விடுவார். சினிமாக்காரர்கள் என்றால் “நான் புத்தகத்தை படிக்கவே இல்லை” என்று டீச்சர் முன் தலைகுனிந்து நிற்கும் பள்ளி மாணவன் போல் வந்து சொல்லி விட்டு சட்டென்று இன்னொரு விசயம் பற்றி ஆவேசமாக பேசிப் போவார்கள். தங்கர்பச்சான் விதிவிலக்காக நேற்று பைம்பொழில் மீரானின் நூலைப் பற்றி மட்டும் பேசினார். அவரது பொதுவான ஆளுமைக்கு முழுக்க மாறுபட்டதாக இருந்தது அந்த தொனியும் முறையும்.
கவிஞர்கள் ஆத்மார்த்தி, மண்குதிரை, ஜெயபாலன் போன்றோர் எளிமையாக நேர்மையாக தந்திரமின்றி பேசினார்கள். அவர்களால் பெயர்களை அநாயசமாய் உதிர்க்கவோ சொற்களை திருகி புஸ்வாணம் விடவோ முடியாமல் போகலாம். ஆனால் குறிப்பிட்ட நூலை வாசித்து அதுகுறித்து மனதில் பட்டதை சொல்ல முயல்வது தெரிந்தது. இலக்கிய விழாக்களில் இவர்களைப் போன்றவர்கள் இன்னும் அதிகமாக மேடைகளில் தென்பட வேண்டும். சியர்லீடர்களின் வேலைக்கு எழுத்தாளன் தேவையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...