இன்மை ஆறாவது இதழ் வெளியாகிறது. அதில் முகப்பு சித்திரமாக ராஜனின்
ஓவியம் மனுஷ்யபுத்திரன் பேட்டி நான்காம் பாகம், ஆத்மார்த்தி, இரா.சீனிவாசன்
ஆகியோரின் கட்டுரைத் தொடர்கள், லஷ்மி சரவணகுமாரின் “மோக்லியை தொலைத்த சிறுத்தை”
தொகுப்புக்கான விமர்சனம், மாயா ஏஞ்சலூ, அன்புசிவன் ஆகியோருக்கு அஞ்சலி
குறிப்புகள், மனுஷ்யபுத்திரன், கலாப்பிரியா, சுதீர் செந்தில், போகன் சங்கர்,
பொன்.வாசுதேவன், சக்தி ஜோதி, கோசின்ரா, சர்வோத்தமன், நாகப்பிரகாஷ்,
பா.வேல்முருகன், ஷான், பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி, மணிபாரதி, ஆர்.செந்தில்குமார்,
ஈழக்கவி ஆகியோரின் கவிதைகள், மாயா ஏஞ்சலூ, லாரன்ஸ் பெர்லிங்கட்டி,
ஆர்.பார்த்தசாரதி, ரூ போர்சன், சார்லஸ் ஹென்ரி போர்டு ஆகியோரின் மொழியாக்கங்கள் மற்றும் டி.ஆர்.நாகராஜ்
கருத்தரங்கு பற்றின அறிவிப்பு ஆகியன இடம் பெறுகின்றன. வாசகர்களின் கருத்துக்கள்
அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கருத்துகள்