முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமரும் அமைச்சர்களும்

பிரதமர்: “நாளைக்கு மீடியாவுக்கு கொடுக்க வேண்டிய ரிப்போர்ட் ரெடியா?”

ஆலோசகர்: ”இதோ பாருங்க ரெடி... அடுத்த பத்தே நாட்களுக்குள் இந்தியா முன்னேற்றம் பெற அதிரடி திட்டம். அடுத்த மூன்று மாதங்களுக்கான தேச முன்னேற்றத்திற்கான இலக்குகளை பிரதமர் அறிவித்தார். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறங்களை அளித்துள்ளார். சிவப்பு வறுமைக்கு, வெள்ளை பொருளாதாரத்துக்கு, பச்சை விவசாயத்துக்கு. இப்பிரச்சனைகள் தீரும் வரை இனி மேல் அவர் இம்மூன்று நிறங்கில் தான் குர்தா அணிவார்”

பிரதமர்: “ஏதோ ஒண்ணு குறையுதே!”

ஆலோசகர்: “ம்ம்ம் சரி இதை பாருங்க. அமைச்சர்களின் அறைகளுக்கு சென்று பிரதமர் அதிரடி சோதனை இட்ட போது அன்றைக்கான டார்கெட்டை முடிக்காத ஜூனியர் அமைச்சர் மாட்டினார். பிரதமர் கண்டித்ததில் அவர் கண்ணீர் விட்டார்.”

பிரதமர்: “இது சூப்பர். அப்படியே பிரதமர் அவரை அணைத்து ஆறுதல் கூறினார் என்றும் போடு”

ஆலோசகர்: “சரி சார். லேட்டாச்சு நான் அப்போ கிளம்பிறேன்”

பிரதமர்: “அது சரி, ஆனா நான் அடுத்த மூன்று மாதங்களில் ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவுக்கு நான் பயணிக்கும் போது அங்கு என்னெல்லாம் பேசினேன், என்னைப் பார்த்து அந்நாட்டு பிரதமர்கள் எப்படியெல்லாம் வியந்து பாராட்டினார்கள் என்பதை பற்றி ரிப்போர்ட் ரெடி ஆயிடுச்சா?”

ஆலோசகர்: “சார் நீங்க இன்னும் வெளிநாடே போகலியே? போற டைம் எழுதி கொடுத்திடறேன்”

பிரதமர்: “இல்ல, எழுதி காட்டி கிட்டு வீட்டுக்கு போனா போதும்”

ஆலோசகர்: “சரி சார். அப்புறம் உங்களை பார்க்க அமைச்சர்கள் காத்திருக்காங்க”

பிரதமர்: “வரச் சொல்லு”

அமைச்சர்கள் வரிசையாக வந்து வணங்கி நிற்கிறார்கள்.

பிரதமர்: “ம்ம்ம் இந்த மாதிரி கும்பிடு போடறங்களை எனக்கு புடிக்காது. சொன்ன வேலையை ஒழுங்கா பண்ணனும்... அப்புறம் அந்த பொண்ணு மேட்டர் என்னாச்சு?”


அமைச்சர்கள்: “?...”

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்புறம் அந்த பொண்ணு மேட்டர் என்னாச்சு?”//
எந்த பொண்ணு?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.