முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமரும் அமைச்சர்களும்

பிரதமர்: “நாளைக்கு மீடியாவுக்கு கொடுக்க வேண்டிய ரிப்போர்ட் ரெடியா?”

ஆலோசகர்: ”இதோ பாருங்க ரெடி... அடுத்த பத்தே நாட்களுக்குள் இந்தியா முன்னேற்றம் பெற அதிரடி திட்டம். அடுத்த மூன்று மாதங்களுக்கான தேச முன்னேற்றத்திற்கான இலக்குகளை பிரதமர் அறிவித்தார். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நிறங்களை அளித்துள்ளார். சிவப்பு வறுமைக்கு, வெள்ளை பொருளாதாரத்துக்கு, பச்சை விவசாயத்துக்கு. இப்பிரச்சனைகள் தீரும் வரை இனி மேல் அவர் இம்மூன்று நிறங்கில் தான் குர்தா அணிவார்”

பிரதமர்: “ஏதோ ஒண்ணு குறையுதே!”

ஆலோசகர்: “ம்ம்ம் சரி இதை பாருங்க. அமைச்சர்களின் அறைகளுக்கு சென்று பிரதமர் அதிரடி சோதனை இட்ட போது அன்றைக்கான டார்கெட்டை முடிக்காத ஜூனியர் அமைச்சர் மாட்டினார். பிரதமர் கண்டித்ததில் அவர் கண்ணீர் விட்டார்.”

பிரதமர்: “இது சூப்பர். அப்படியே பிரதமர் அவரை அணைத்து ஆறுதல் கூறினார் என்றும் போடு”

ஆலோசகர்: “சரி சார். லேட்டாச்சு நான் அப்போ கிளம்பிறேன்”

பிரதமர்: “அது சரி, ஆனா நான் அடுத்த மூன்று மாதங்களில் ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியாவுக்கு நான் பயணிக்கும் போது அங்கு என்னெல்லாம் பேசினேன், என்னைப் பார்த்து அந்நாட்டு பிரதமர்கள் எப்படியெல்லாம் வியந்து பாராட்டினார்கள் என்பதை பற்றி ரிப்போர்ட் ரெடி ஆயிடுச்சா?”

ஆலோசகர்: “சார் நீங்க இன்னும் வெளிநாடே போகலியே? போற டைம் எழுதி கொடுத்திடறேன்”

பிரதமர்: “இல்ல, எழுதி காட்டி கிட்டு வீட்டுக்கு போனா போதும்”

ஆலோசகர்: “சரி சார். அப்புறம் உங்களை பார்க்க அமைச்சர்கள் காத்திருக்காங்க”

பிரதமர்: “வரச் சொல்லு”

அமைச்சர்கள் வரிசையாக வந்து வணங்கி நிற்கிறார்கள்.

பிரதமர்: “ம்ம்ம் இந்த மாதிரி கும்பிடு போடறங்களை எனக்கு புடிக்காது. சொன்ன வேலையை ஒழுங்கா பண்ணனும்... அப்புறம் அந்த பொண்ணு மேட்டர் என்னாச்சு?”


அமைச்சர்கள்: “?...”

கருத்துகள்

சேக்காளி இவ்வாறு கூறியுள்ளார்…
//அப்புறம் அந்த பொண்ணு மேட்டர் என்னாச்சு?”//
எந்த பொண்ணு?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...