முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல கல்லூரி என்றால்...

நேற்று லயோலா கல்லூரியில் மனித வளம் தொடர்பான ஒரு துறை ஏற்பாடு செய்த சந்திப்பில் மாணவர்களிடம் மனம் மற்றும் மூன்று நிலையிலான உறவுகள் பற்றியும் பேசினேன்.
 ஒரு அழகான அரங்கு. முன்னூறு முதலாமாண்டு மாணவர்கள். கவனமாக கேட்டு நல்ல கேள்விகளை பிற்பாடு எழுப்பினார்கள். அன்பாக வந்து கை கொடுத்தார்கள். நான் முன்பு கல்வி நிலையில் வெகுவாக கீழே உள்ள மாணவர்களுக்கு தான் அதிகம் நான்கு வருடங்களில் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு சிக்கலான விசயங்களை புரிய வைப்பது சிரமம். புரிந்தாலும் வகுப்பில் விவாதிக்க முன்வர மாட்டார்கள். அவர்களை கட்டுக்கோப்பாய் வைப்பதிலேயே நம் கவனம் பாதி சென்று விடும். அதனால் லயோலாவில் உள்ளது போன்ற முதிர்ச்சியும் திறமையும் கொண்ட மாணவர்களிடம் உரையாடுவது என் சகவயதினரிடம் உரையாடுவது போல் தோன்றுகிறது. இப்படியான மாணவர்களை தினமும் சந்திக்கும் ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள். தன்னம்பிக்கையாக முன்வந்து மைக்கில் பேசுகிறார்கள். ஒரு மாணவன் ஆந்தனி ராபின்ஸின் நூல் ஒன்றை படித்ததாய் கூறினான். மகிழ்ச்சியாக இருந்தது.

ஆசிரியர்களின் staff room நவீனமாய் வெளிச்சமாய் அழகாய் உள்ளது. attendance register வைக்கும் ஸ்டாப் வெயிட்டிங் அறை சோபா போட்டு நளினமாய் உள்ளது. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் வேலை பார்த்த கல்லூரியில் ஆசிரியர் அறையில் குழல் விளக்கு பெரும்பாலும் வேலை செய்யாது. அப்படி வேலை செய்தாலும் ஏதோ பார் போல் அரை இருட்டாகவே இருக்கும். இன்னொரு கல்லூரியில் ஒன்றுக்கு போக அரைமைல் நடக்க வேண்டும். இங்கே ஆசிரியர்களின் அறைக்குள்ளேயே சுத்தமான கழிப்பறை. லயோலாவின் ஆசிரியர்கள் கொடுத்த வைத்தவர்கள்.
நான் கவனித்ததில் மிகவும் கவர்ந்த இன்னொரு விசயம் கண் தெரியாத மாணவர்களை ஒரு பேட்டரி காரில் கொண்டு போய் வகுப்பறையில் விடுகிறார்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...