முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல கல்லூரி என்றால்...

நேற்று லயோலா கல்லூரியில் மனித வளம் தொடர்பான ஒரு துறை ஏற்பாடு செய்த சந்திப்பில் மாணவர்களிடம் மனம் மற்றும் மூன்று நிலையிலான உறவுகள் பற்றியும் பேசினேன்.
 ஒரு அழகான அரங்கு. முன்னூறு முதலாமாண்டு மாணவர்கள். கவனமாக கேட்டு நல்ல கேள்விகளை பிற்பாடு எழுப்பினார்கள். அன்பாக வந்து கை கொடுத்தார்கள். நான் முன்பு கல்வி நிலையில் வெகுவாக கீழே உள்ள மாணவர்களுக்கு தான் அதிகம் நான்கு வருடங்களில் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு சிக்கலான விசயங்களை புரிய வைப்பது சிரமம். புரிந்தாலும் வகுப்பில் விவாதிக்க முன்வர மாட்டார்கள். அவர்களை கட்டுக்கோப்பாய் வைப்பதிலேயே நம் கவனம் பாதி சென்று விடும். அதனால் லயோலாவில் உள்ளது போன்ற முதிர்ச்சியும் திறமையும் கொண்ட மாணவர்களிடம் உரையாடுவது என் சகவயதினரிடம் உரையாடுவது போல் தோன்றுகிறது. இப்படியான மாணவர்களை தினமும் சந்திக்கும் ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள். தன்னம்பிக்கையாக முன்வந்து மைக்கில் பேசுகிறார்கள். ஒரு மாணவன் ஆந்தனி ராபின்ஸின் நூல் ஒன்றை படித்ததாய் கூறினான். மகிழ்ச்சியாக இருந்தது.

ஆசிரியர்களின் staff room நவீனமாய் வெளிச்சமாய் அழகாய் உள்ளது. attendance register வைக்கும் ஸ்டாப் வெயிட்டிங் அறை சோபா போட்டு நளினமாய் உள்ளது. இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால் நான் வேலை பார்த்த கல்லூரியில் ஆசிரியர் அறையில் குழல் விளக்கு பெரும்பாலும் வேலை செய்யாது. அப்படி வேலை செய்தாலும் ஏதோ பார் போல் அரை இருட்டாகவே இருக்கும். இன்னொரு கல்லூரியில் ஒன்றுக்கு போக அரைமைல் நடக்க வேண்டும். இங்கே ஆசிரியர்களின் அறைக்குள்ளேயே சுத்தமான கழிப்பறை. லயோலாவின் ஆசிரியர்கள் கொடுத்த வைத்தவர்கள்.
நான் கவனித்ததில் மிகவும் கவர்ந்த இன்னொரு விசயம் கண் தெரியாத மாணவர்களை ஒரு பேட்டரி காரில் கொண்டு போய் வகுப்பறையில் விடுகிறார்கள். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.