“இன்மை” இதழ் 10 வெளியாகியுள்ளது.
இவ்விதழில் கவிதை குறித்த ஏழு கட்டுரைகள் இடம் பெறுகின்றன: போகன் சங்கர் பற்றின கலாப்ரியாவின்
கட்டுரை, இசையின் கவிதைகள், அரவிந்தனின் கவிதைத் தொகுப்பு மற்றும் மனுஷ்யபுத்திரனின்
“நீராலானது” பற்றி ஆர்.அபிலாஷ் கட்டுரைகள், என்.டி.ராஜ்குமார் கவிதைகள் பற்றின நாகபிரகாஷின்
மதிப்புரை, ஆத்மார்த்தியின் “ஓயாப் பெருநடனம்” தொடர், மற்றும் முனைவர் அன்பு சிவாவின்
சங்க இலக்கியத்தில் உழவு வாழ்க்கை பற்றின கட்டுரை ஆகியன. ஷேக்ஸ்பியரின் ஓரினக் காதல்
கவிதைகள், புக்காவஸ்கி, எமிலி வெப், டேவிட் ஷெபிரோ ஆகிய மொழியாக்க கவிதைகளும் நவீன
அமெரிக்க ஹைக்கூ மொழியாக்கமும் இடம் பெறுகின்றன. இத்துடன் பா.சரவணன், பா.வேல்முருகன்,
நாகபிரகாஷ், குமரகுரு, எ.கிருஷ்ணகுமார், ப.திலீபன், விஷால் ராஜா, கிரிஜா ஹரிஹரன், சுப்ரா,
மணிபாரதி, கோசின்ரா ஆகியோரின் கவிதைகளும் இவ்விதழை நிறைவாக்குகின்றன. இவ்விதழில் பங்கேற்ற
படைப்பாளிகளுக்கும் வாசிக்கப் போகும் வாசகர்களுக்கும் எங்கள் நன்றியும் அன்பும்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share