முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு நாடகம் முடிவுக்கு வருகிறது


ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை ஹெராயின் கடத்தல் போன்ற குற்றத்துக்கு வழக்கத்துக்கு மாறாக தூக்குத்தண்டனை விதித்தபோதே இது ஒரு நாடகம் எனும் சந்தேகம் தோன்றியது. இந்தியாவை சற்று மட்டம் தட்டவும், இலங்கையில் வாக்காளர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், மோடி அரசுடன் பேரம் பேசவும் இந்த தண்டனையும் இப்போதைய விடுதலையும் ராஜபக்சேவுக்கு உதவியது. ஒரே கையெழுத்தில் ஐவரையும் விடுவிக்க அதிகாரம் கொண்ட ராஜபக்சே ஏன் அதற்கு தன் பிறந்த நாள் வரும் வரை காத்திருக்க வேண்டும்?

மனித உயிரை வைத்து பகடையாடுவதில் இந்த அரசியல்வாதிகளுக்கு தனி கிளுகிளுப்பு தான். இதன் மூலம் ராகபக்சே தான் இந்தியாவையே மிரட்டி கெஞ்ச வைக்க தயங்காத ஆள் என தன் வாக்காளர்களுக்கு நிரூபித்திருக்கிறார். தமிழக மீனவர்கள் எல்லை கடந்து மீன் பிடிப்பதனால் எரிச்சலாகி உள்ள இலங்கை மீனவர்களையும் தற்காலிகமாய் திருப்திப் படுத்தி இருக்கிறார். அதேவேளை இந்தியாவின் முன் அடி பணியாமல் அதன் தோளிலே கையிட்டு இலங்கை ஒரு நட்பு நாடு என சேதி விடுக்கவும் செய்து விட்டார்.
இந்த சாக்கில் அடிவாங்கின கைப்புள்ளையான மோடியை புகழ்ந்து கொண்டாட சிலர் களமிளங்கி இருப்பது தான் வேடிக்கை. “தமிழக மீனவர் பிரச்சனையை சுமூகமாக தீர்த்ததற்காக மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் நம் தேசம் நன்றி தெரிவிக்கிறதுஎன சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஒரு வெளியுறவுத் துறை பேரத்துக்காக ஐவரின் உயிரும் நாடகமாக்கப்பட்டிருக்கிறது என்பது போக இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நியாயமாக பார்த்தாலும், ஐவருக்கும் முதலில் தூக்குத்தண்டனையே விதித்திருக்க கூடாது. நீதித்துறை, ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்தும் ராஜபக்சே தான் தூக்குத்தண்டனை தீர்ப்பின் பின்னாடி இருந்திருக்கிறார் என்பது தெளிவு. இப்போது அவரே தான் “கொண்டு வந்த” தீர்ப்பை ரத்து பண்ணியிருக்கிறார். “முதல்வனில்” ரகுவரன் சொல்வது போல் “இவரே பாம் வைப்பாராம். இவரே போய் கரெக்டா எடுப்பாராம்”.

இந்த விசயத்தில் மோடியை கொண்டாடுவது தான் வேடிக்கை. என்னாவாக இருந்தாலும் மோடியை விட ராஜபக்சே மேல். மோடியை விட அவர் பத்து மடங்கு ஆட்களை கொன்றிருக்கிறார். அவர் அளவுக்கு போக இவர் இன்னும் பல படிகள் ஏற வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.