Skip to main content

Posts

Showing posts from December, 2014

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆறாவடு: ஷோபாசக்தியும் சயந்தனும்

சயந்தனை ஷோபாசக்தியின் குட்டித்தம்பி என்று சொல்லலாம். ஒரே உலகம். ஒரே பார்வை. நாவலின் கதைக்களனும் மையப்பாத்திரமும் கூட கிட்டத்தட்ட ஒன்று தான். ஈழப் போர். ஒரு பக்கம் புலிகளும் இன்னபிற சிறு போராட்ட குழுக்களும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவம். இடையில் அரசியலற்ற ஒரு மக்கள் திரள். அவர்கள் இலங்கைப் படை மற்றும் போராட்ட குழுக்கள் மத்தியில் மாட்டிக் கொண்டவர்கள். ஆற்றில் ஒழுக்கில் இழுத்துக் கொண்டு போகப்படும் மரத்துண்டை போன்றவர்கள்.

புத்தக விலையின் இரு சிக்கல்கள்

புத்தக விலையை ஏன் குறைக்கக் கூடாது என்பது பற்றி ஒரு சர்ச்சை பேஸ்புக்கில் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. இது ஒரு முடிவற்ற விவாதமாக தோன்றுகிறது. ஏனென்றால் இரண்டு எதிர்முனைகளில் இருந்து ஆட்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று லட்சியத்தின் முனை. இன்னொன்று வணிகத்தின் முனை. எந்த புறச்செயலும் நிகழ இரண்டு முனைகளும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும். ஆனால் அது நிகழ்வதில் ஒரு சிக்கல் உள்ளது.

சச்சின் சுயசரிதை: ஒரு பிம்பத்தின் பிரதிபலிப்பு

ஒரு சுயசரிதையில் நாம் முழுக்க அம்மணமாக வேண்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் நாகரிகமாக பிக்கினியில் தோன்ற வேண்டுமா? முழுக்க வெளிப்படையாக எழுதப்படும் ஒரு சுயசரிதை உண்மையிலேயே வெளிப்படையானதா அல்லது அப்படி ஒரு பாவனை கொண்டுள்ளதா? சச்சினின் சுயசரிதையான Playing it my Way நூல் ஏமாற்றமளிப்பதாய் எழுந்த விமர்சனங்கள் பார்க்கையில் இக்கேள்விகளும் எனக்குள் தோன்றின.

புத்தக விற்பனையும் எளிய மக்களும்

புத்தகங்களை இலவசமாக விற்கலாமா என க்ரியா ராமகிருஷ்ணன் தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் புத்தகங்களை தரமாக அச்சிடுவது மிக விலைபிடிப்பான காரியம் என்றும், நாம் இன்னொரு புறம் புத்தகங்களை இலவசமாக கொடுக்க கேட்கிறோம், இது நியாயமில்லை என்றும் வாதிட்டிருக்கிறார். பண்பாட்டு அறிவு இலவசமாக ஒரு சமூகத்துக்கு கொடுக்கப்படும் என கேட்பதில் தவறில்லை. ஆனால் அதே வேளை புத்தகங்களுக்கு அரசும் மையசமூகமும் மீடியாவும் எந்த ஆதரவும் அளிக்காமல் பதிப்பாளர்களை மிகுந்த நெருக்கடிக்கு தள்ளி உள்ளது. எனக்குத் தெரிந்த பதிப்பாளர் தனது பத்திரிகை விலையை பத்து ரூபாய் உயர்த்தினார். எப்படி மக்கள் வாங்குவார்கள் என கேட்ட போது “பால் விலை ஏறினால் பால் குடிக்காமல் இருக்கிறார்களா?” என திரும்பக் கேட்டார். ஆனால் உணவு அத்தியாவசியப் பொருள். அதனை ஒரு பண்பாட்டு அறிவுச்சாதனத்துடன் ஒப்பிட இயலாது. ஆனால் பதிப்பாளரை அவ்வாறு பேச வைப்பது முழுக்க கைவிடப்பட்ட நிலை தான்.

நித்திய கன்னி

அந்த பகுதியில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது . முகத்தில் அப்பின மண்ணும் , உலோகமும் கலந்த துகள்களை அழுத்தித் துடைத்தான் . கண்கள் எரிந்தன . இத்தனை பளிச்சென்ற பகல் இதற்கு முன் பார்த்ததில்லை . சாலை ஓரமாய் நெளிந்து சென்ற பெரிய கற்கள் பதித்த நடைபாதை மின்னியது . அவளை பின் தொடர்ந்து நடப்பதிலும் ஸ்பரிச இன்பம் . சற்று காலகட்டி நடந்தாள் . ஒவ்வொரு சுவடாக பதிந்தது . சொட்ட சொட்ட நடந்து கொண்டிருந்தாள் . அவன் குனிந்து அந்த ஈர சுவடுகளை பார்த்தபடி அதில் தன் கால்கள் பதித்தான் . செருப்பை உதறி விட்டு , அந்த சுவடுகளின் தடத்தை தொடந்தான் , வாத்து போல கால்கள் அகட்டியபடி அவன் நடந்ததை தலையில் துண்டு கட்டி , சட்டை அணிந்திருந்த சிமிண்டை குழைக்கும் கட்டிட வேலைப் பெண்கள் விசித்திரமாய் பார்த்தனர் . கறுத்த முகத்தில் வியர்வைக் கோடுகள் .

மற்றொரு பிறந்த நாள் … மேலும் சில சொற்கள்

மற்றொரு பிறந்த நாள் அதற்குள் வந்து விட்டது. கடந்த சில மாதங்கள் வெகுவேகமாய் நகர்ந்து விட்டன. அதனாலே பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு “அதற்குள் பிறந்த நாள் வந்து விட்டதா?” என வியப்பு ஏற்பட்டது. இந்த முறை மனைவியிடம் இருந்து நிறைய பரிசுகள். வழக்கம் போல் இம்முறையும் பேஸ்புக்கில் தான் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடக்கிறது. முன்பு வேலை பார்த்த இடத்திற்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடுவேன். இப்போது முனைவர் பட்ட ஆய்வு செய்கிறேன். இன்று என் நாவலை திருத்திக் கொடுக்கும் கடும் நெருக்கடியில் இருப்பதால் பல்கலைகழகம் போகவில்லை. வீட்டில் இருந்தபடி நண்பர்களின் வாழ்த்துக்களை டைம்லைனில் கவனித்தபடி விர்ச்சுவல் பிறந்த நாளாகி விட்டது.

“நீராலானது” – யாருடனும் இல்லாமல் இருத்தல்

“நீராலானது” 2001இல் வெளிவந்த தொகுப்பு. மனுஷ்யபுத்திரனின் தொகுப்புகளில் ஒரு களங்கமின்மையும் இளமையும் கொண்ட கவிதைகள் இதில் உள்ளன. இதன் பின்னர் அவர் இதை விட ஆழமுள்ள தொழில்நுட்ப நேர்த்தியுள்ள, தத்துவார்த்த செறிவுள்ள பல கவிதைகளை எழுதினார். ஆனாலும் இத்தொகுப்பில் உள்ள ஆழ்மன தத்தளிப்புகளும் உண்மையின் ஒரு கூர்மையான வெளிச்சமும் அவற்றில் இல்லை.