இம்மாதம் பத்தாம் தேதி ஷிலோங்கில்
நடைபெறும் விழாவில் சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருதை வாங்கப் போகிறேன். அடுத்த
நாள் விருதாளர்களின் சந்திப்பில் என் படைப்பு வாழ்க்கை பற்றி பேசப் போகிறேன். இத்தருணத்தில்
என் எழுத்து வாழ்க்கையை துவக்கி வைத்த நண்பர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளனாகும் ஆசையை
என்னுள் விதைத்த ஜெயமோகன், புனைவுலகுக்குள் வர தூண்டுதல் அளித்த எஸ்.ரா, தொடர்ந்து
எனக்கு உறுதுணையாக இருக்கும் தக்கலை கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள், கடந்த 6 வருடங்களாய்
ஒவ்வொரு மாதமும் எனக்காய் சில பக்கங்கள் ஒதுக்கும் அம்ருதா பத்திரிகை, டி.வி மீடியாவில்
அறிமுகப்படுத்தி எனக்கு முகப்பரிச்சயம் உருவாக்கிய, என் ஒரு கட்டுரையை ஒரு நிகழ்ச்சியின்
பேசுபொருளாகவே மாற்றிய “நீயா நானா” ஆண்டனி, அன்பு மனைவி காயத்ரி ஆகியோரை அன்புடன் நினைத்துக்
கொள்கிறேன். இந்த விருதை விட எனக்கு பெரிதான வாசகர்களை பேரன்புடன் நெஞ்சோடு அணைக்கிறேன்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments