முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகின் சிறந்த கிரிக்கெட் ஒருநாள் வீரர் யார்?

The toast of the town: Viv Richards was the No. 1 choice for 58% of the jury
கிரிக்இன்போ (cricinfo) இணையதளம் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் எனும் விருதை விவியன் ரிச்சர்ட்ஸுக்கு அளித்திருக்கிறது. இது சர்ச்சைக்குரிய தேர்வு.


ரிச்சர்ட்ஸ் அட்டகாசமான மட்டையாளர் தாம். ஆனால் அவரது ரெக்கார்டையும் சச்சின் ரெக்கார்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே யார் மேல் என தெரிந்து விடும். ரிச்சர்ட்ஸ் 187 ஒருநாள் ஆட்டங்களில் 11 சதங்கள் அடித்திருக்கிறார். சச்சின் 463 ஒருநாள் ஆட்டங்களில் 49 சதங்கள் அடித்திருக்கிறார்.
இவ்வளவு ஆட்டங்கள் ஆடி நிலைக்க நீங்கள் சிறந்த உடல் திறன் கொண்டவராக, மனக்குவிப்பு திறன் மிக்கவராக, தொடர்ந்து நன்றாக ஆடுபவராக, மாறும் காலத்துடன் தன் ஆட்டத்தை தகவமைப்பவராக இருக்க வேண்டும். ஆனால் ரிச்சர்ட்ஸ் குறுகிய காலம் ஆடியவர் என்பதால் அவர் சச்சின் அளவுக்கு இந்த திறன்கள் கொண்டவரா என நாம் கணக்கிட இயலாது

சச்சின் போன்று நானூறுக்கு மேல் ஆட்டங்கள் ஆடியிருந்தால் அவரால் இந்த சராசரி மற்றும் ஸ்டிரைக் ரேட்டை தக்க வைத்திருக்க முடியுமா என்பதும் கேள்வியே. மேலும் சச்சின் ஒருநாள் ஆட்டத்தை ஒரு கலையாக மாற்றியவர். இரு பத்தாண்டுகளில் அவர் எவ்வளவோ வித்தியாசமான திறமையான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் சென்று ஓட்டங்கள் குவித்திருக்கிறார். இந்திய சுற்றுப் பயணத்தின் போது சந்திரசேகரின் சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரிச்சர்ட்ஸ் திணறினார். அவர் வார்ன், முரளி, சக்லைன் போன்றவர்களை சுழலும் ஆடுதளத்தில் எப்படி ஆடியிருப்பார் என்பது கேள்வியே - குறிப்பாக ஒருநாள் ஆட்டங்களில். மேலும் தொழில்நுட்ப ரீதியாகவும் சச்சின் ரிச்சர்ஸை விட பல மடங்கு மேலானவர். 

எனக்கு இந்த தேர்வில் உடன்பாடில்லை. ஓட்டுப்போட்ட ஐம்பது பேரில் பெரும்பாலானோர் சச்சின் மீதான பொறாமையை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சச்சின் தான் கிரிக்கெட் அறிந்த எவரின் தேர்வாக இருப்பார்.
http://www.thecricketmonthly.com/story/846325/still-the-king

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...