முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகநூல் டைம்லைன் போல் ஒரு சினிமா சாத்தியமா?

Image result for theatre screen

தன் முகநூல் பக்கத்தில் சர்வோத்தமன் சினிமாவின் எதிர்காலம் பற்றி ஒரு முக்கியமான பதிவு எழுதி இருக்கிறார். சினிமா மீது இன்று மக்களுக்கு பழைய வசீகரம், மயக்கம் இல்லை என்கிறார். திரையரங்கில் பார்வையாளர்கள் கவனம் செல்போனில் முகநூல் அப்டேட்களை பார்ப்பதில் தான் உள்ளது, திரையில் இல்லை. நாம் இன்று பேசவும் எழுதவும் தான் விரும்புகிறோம், உட்கார்ந்து இன்னொருவர் சொல்வதை கேட்க ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் தான் பல படங்கள் தோல்வியை தழுவுகின்றன. மக்களின் ஆர்வத்தை ஒரு படம் நோக்கி குவிக்க ரஜினி, சங்கர் போன்றவர்களோ பாடாய் படுகிறார்கள். எதிர்காலத்தில் சினிமாவின் நிலை இன்னும் பலவீனமாகும் என்கிறார்.


நாம் இதைப் பற்றி விரிவாக பேச வேண்டும். சினிமா தன் வசீகரத்தை இழக்குமா? அவ்விடத்தை சமூக வலைதளங்கள் எடுத்துக் கொள்ளுமா? ஆனால் இப்போது கூட நாம் சமூக வலைதளங்களிலும் டிவியிலும் சினிமா பற்றித் தானே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சினிமா தன் மதிப்பை இழந்து வருவதும் உண்மை. அதே கோணத்தில் பார்த்தால் இன்று காதல், உறவுகள், செக்ஸ் என பல விசயங்கள் பழைய கிளர்ச்சியை இழந்து விட்டன. ஒருவேளை இந்த ஆர்வக் குறைவு ஒட்டுமொத்தமாய் நம் வாழ்வை பாதிக்கிறதா? மேகமூட்டம் போல் நம் வானை மூடிக் கொண்டதா? ஒருவேளை சினிமா மற்றொரு சாதாரண பொழுதுபோக்காக நிலைக்கலாம்.

 என்னுடைய ஆசை நிறைய குட்டி சினிமாக்கள் வர வேண்டும் என்பது. அரைமணிநேரம், ஒருமணிநேர படங்களாக இருக்கலாம். குறைந்த செலவில் நிறைய பேர் படம் எடுத்து தமக்கான பார்வையாளர் கூட்டத்திற்கு காட்டும் வாய்ப்பு, அதற்கான திரையரங்குகள் வர வேண்டும். அது வணிக ரீதியாக செயல்படுத்தப்பட வேண்டும். கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் முதல் படி எடுத்து வைத்திருக்கிறார்கள். வணிக இயக்குநர்கள் பலர் குறைவான பொருட்செலவில் குறைவான நேரம் கொண்ட படங்களை எடுக்க முன்வர வேண்டும். அது வெற்றி பெற்றால் சிறப்பான மாற்றங்கள் வரும். எழுத்தில் இது நடந்து வருகிறது. ஆனால் இன்னொரு பக்கங்கள் பெரும் பொருட்செலவிலான பெரிய படங்களும் வேண்டும். பெரிய நாவல்கள் போலே இவையும் இருந்து கொண்டிருக்கும்.


சமூக வலைதளங்களின் சில தன்மைகளை சினிமாவும் வசீகரித்து பார்க்கலாம். ரியாலிட்டி ஷோ தன்மை கொண்ட சினிமாக்களை முயன்று பார்க்கலாம். மக்களிடம் நேரடியாக பேசும், அவர்களும் பேச வாய்ப்பளிக்கும் படங்களை செய்யலாம். வெளியான பின் தொடர்ந்து மக்களின் பங்களிப்புக்கு ஏற்றபடி மாறி வரும் சினிமாவை முயலலாம். இன்று பார்க்கிற சினிமா நாளை முற்றிலும் புது அர்த்தத்துடன் வசனங்களுடன் காட்சி அமைப்புகளுடன் முடிவுடன் இருக்கும்படி செய்து பார்க்கலாம். ஒவ்வொரு நிமிடமும் புதிதாய் ஒன்று நடப்பதாய் சினிமாவை மாற்றலாம். பேஸ்புக் டைம்லைன் போன்றே செயல்படும் ஒரு சினிமாவை உருவாக்கி பார்க்கலாம். எவ்வளவோ செய்யலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...