Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ரஜினியும் கமலும்

Image result for rajini and kamal


 எனக்கு என்றுமே ரஜினி ரொம்ப நவீனமான நடிகர் எனத் தோன்றும். குளோசப் மற்றும் சூழலை மிக நுணுக்கமாய் காட்டும் தொழில்நுட்ப வசதி காரணமாய் ஒரு நடிகன் இன்று மிக மிக கொஞ்சம் உணர்ச்சிகளை காட்டினால் போதும் - அது பன்மடங்காக பெருகி பார்வையாளனை அடையும். ஒரு நுண்பெருக்கியின் கீழ் ஒரு எறும்பு நிற்பது போன்ற காரியம் இது. ஆனால் கமல் இதை புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. கமலுக்கு தன் கை, கால், விரல்கள், மூக்கு, கண், நாடி நரம்பெல்லாம் நடிக்க வேண்டும். சட்டகம் முழுக்க தான் வியாபிக்க வேண்டும். படக்கருவி, இசை, சூழல் இவற்றின் பங்கை அவர் முக்கியமாய் கருதுவதில்லை.

ஆச்சரியமாய் ரஜினியிடம் நாடக மேடையின் உடல் மொழியும் உண்டு. நிற்பது, நடப்பது, கை நீட்டி பேசுவது, நிற்கும் போது தன் கோணத்தை கவனமாய் பயன்படுத்துவதாய், இதில் எல்லாம் சற்று மிகை காட்டுவது என. ஆனால் முகபாவங்கள், குரல் இரண்டையும் சற்று மட்டுப்படுத்தி அழகாய் சமநிலைப்படுத்துவார்.
கமலின் மிகப்பெரிய பலம் அவர் அடிப்படையில் ஒரு நல்ல மிமிக்றி நடிகர் என்பது. அதாவது சாதாரண டிவி, மேடை மிமிக்றி அல்ல. ஆழமான அவதானிப்புகள் கொண்டு பல வித மனிதர்களை உள்வாங்கி அவர்களை தன் உடலில் பிரதிபலித்துக் காட்டும் உயர்ந்த வகை மிமிக்றி. எத்தனை எத்தனை வகை மனிதர்களை தன் நடிப்பில் கோண்டு வந்து காட்டியிருக்கிறார். பாலக்காட்டு பிராமணன், ஸ்டண்ட் நடிகன், பைத்தியம், கிராமத்து வெகுளி, முரடன், வயதான வஞ்சகமான வில்லன், அறிவுஜீவி கல்லூரி ஆசிரியர், அப்பாவியான, நகரத்துக்கு வந்து ஏமாற்றப்படும் நடுத்தர வர்க்க விவசாயி, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த இறுக்கமான, உள்ளத்தில் பழி உணர்ச்சி கொந்தளிக்கும் மீசை முறுக்கிய பிராமணர், விபத்தில் முகம் சிதைந்து ஊனமுற்ற ஒரு கம்யூனிஸ்ட், ஸ்திரிலோலன் இப்படி எவ்வளவு எவ்வளவு! தமிழில் சிவாஜியும் உள்ளிட்டு எந்த நடிகனும் இவ்வளவு மாறுபட்ட தன்மையிலான வேடங்களை செய்ததில்லை. இந்த வேடங்களுக்கு என்று குரலில், உடல் மொழியில், வசனங்களை பேசுவதில் விடும் இடைவெளி மற்றும் வேகத்தில், பேச்சு மொழியில் அவ்வளவு நுணுக்கமாய் வேலை செய்திருப்பார்.
ரஜினியுடன் ஒப்பிடும் போது இந்த வெரைட்டி கொண்ட கமலிடம் ஒரிஜினாலிட்டி இல்லை என்பதையும் கவனிக்கலாம். இந்த வேடங்களில் உண்மையான கமல் யார்? திருஷ்யம் படத்தின் ஒரு ஸ்டில் பார்த்தேன். மலையாள படத்தில் லால் அணிந்திருந்த உடை, அவரது தலைமுடி அமைப்பு என அப்படியே போல செய்திருந்தார். இது தான் கமல் பாணி. இப்படித் தான் அவர் மார்லன் பிராண்டோவை ”நாயகனில் போல செய்திருந்தார். அவர் மனிதர்களை நேரடியாய் கிரகிப்பது போல சினிமாவில் வரும் பாத்திரங்களையும் கிரகித்து அப்படியே தன் நடிப்பின் வழி சித்தரிப்பார். காப்பி அடிப்பார் என சொல்ல மாட்டேன். ஆனால் கணிசமான தாக்கம் இருக்கும். கமலிடம் மிக அதிகமாய் தாக்கம் செலுத்தின நடிகர் சார்லி சாப்ளின் தான். குறிப்பாய் நகைச்சுவை மற்றும் துன்பியல் பாத்திரங்களில் கமல் நடிப்பதை பாருங்கள் - சார்லி சாப்ளினின் கண்ணாடி பிரதிபிம்பம் தான். சாப்ளினை போலவே கமலும் இது போன்ற காட்சிகளில் தடுமாறி தடுக்கிக் கொண்டே நடிப்பார். முகத்தில் ஒரு சின்ன சுளிப்பும் திகைப்பும் இருக்கும். அடிக்கடி இமைகளை தூக்குவார். பொருட்களை கைதவறி போடுவார். Pathos எனும் உயர்தர இரக்க உணர்வு தொனிக்கும் காட்சிகளில் அவர் அபாரமாய் நடிப்பதற்கும் சாப்ளினின் தாக்கமே காரணம். சாப்ளினுக்கு ஹோமெஜ் போல அவர் சாப்ளின் செல்லப்பாவாக கூட நடித்திருக்கிறார். பல விதமான தமிழ் பேச்சுவழக்குகளை கமலைப் போல் லாவகமாய் பயன்படுத்த மற்றொருவர் தமிழில் இல்லை. குறிப்பாக “சதி லீலாவதியில் பேசின கோவைத் தமிழ் மற்றும் “தசாவதாரத்தில் பேசின குமரிமாவட்ட களியாக்கவிளை தமிழ். மிகக்கொஞ்சம் மிகை இருந்தாலும் இரண்டுமே சாதனைகள் தாம். “தெனாலி ஈழத் தமிழ் இப்போது பல ஈழத்தமிழ் நண்பர்களின் பரிச்சயம் கிடைத்த பின் மிகையாக தோன்றுகிறது. இந்த போல செய்யும் நடிப்பு பாணி அவரது பலமாகவும் பலவீனமாகவும் உள்ளது.
பலவிதமான பரிமாணங்கள் கொண்ட நடிப்பு என்றால் கமல் தான். ஆனால் ஒரிஜினலான நவீன நடிகன் என்றுமே ரஜினி. அதனாலே அவர் எனக்கு பிடித்தமானவர்.

சர்வோத்தமனின் ரஜினிகாந்தின் திரைப்படங்கள் என்ற கட்டுரை தான் இந்த எண்ணங்களை எனக்குள் தூண்டின. அதையும் படித்துப் பாருங்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...