மூன்று மணி போல ஓட்டல் பணியாளர்கள்
ஒன்றாய் மேஜையை சுற்றி இருந்து உணவருந்தினர். பத்து வயது மதிக்கத்தக்க வடகிழக்கு மாநில
சர்வர் பையன் ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் கெட்டிப்பட்ட சுடுசோறும் அதில் பருப்பும் ஊற்றி
அமர்ந்தான். அடிக்கடி சூடு தாளாமல் விரல்களை உதறியபடி அதை விண்டு விண்டு ஆர்வமின்றி
தின்று கொண்டிருந்தான். தன் நண்பனிடம் கண்காட்டி ஏதோ நகைச்சுவையை பகிரும் விளையாட்டு
ஆர்வம். அவன் அம்மா பார்த்தால் சரியாய் சாப்பிடாமல் நோஞ்சானாய் போகிறாயே என கவலை கொள்ளலாம்.
எனக்கு ரசிக்கவே தோன்றியது.
( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...
Comments