ஒரு குறுநாவலை இப்போது தான் எழுதி
முடித்தேன். துப்பறியும் நாவல். பெஞ்சமின் பிளாக்கின் Christine Falls நாவல் படித்த
போது குற்றத்தை யார் செய்திருக்கக் கூடும் எனும் புதிரை அவிழ்ப்பது நோக்கி செல்வதாய்
மட்டும் ஒரு துப்பறியும் நாவல் இருக்க வேண்டியதில்லை என உணர்ந்தேன். ஒரு உளவியல் விசாரணையாக
அந்த துப்பறியும் நாவல் எழுதப்பட்டிருக்கும். நானும் சற்று அந்த பாணியில் தான் முயன்றிருக்கிறேன்.
எனக்கு தூண்டுகோலாய் அமைந்த மற்றொரு முக்கியமான நூல் டோம் ஒ கேரொலின் Paedophilia –
The Radical Case. அந்நூலைக் கொண்டு வேறொரு நாவலை முன்பு எழுத முயன்ற போது ஏற்பட்ட
ஒரு அறச்சிக்கல் காரணமாய் பாதியில் நிறுத்த நேர்ந்தது. ஆனால் இந்நாவலின் வடிவம் காரணமாய்
அறச்சிக்கல்களை எளிதாய் என்னையே அறியாமல் தாண்டிச் சென்று விட்டேன். நான் எழுதிய புத்தகங்களில்
மிகச்சிறியதாக இதுவே இருக்கும். இலக்கிய நோக்கின்றி ஜாலியான விளையாட்டாக கருதி எழுத
வேண்டும் என ஆரம்பத்திலேயே முடிவு செய்தேன். முடிந்தவரை இந்நோக்கததை தக்க வைத்தேன்.
இப்போதைக்கு தலைப்பு “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”. எப்படி உள்ளது? Working
title தான். பிரசுரத்துக்கு முன் தோன்றினால் மாற்றி விடுவேன்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments