Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மந்திர தந்திர போலிகள்




சித்தர்கள், மந்திர தந்திரம் பண்ணுபவர்கள், பில்லிசூனியக்காரர்கள் பற்றிய ஹிட்டான டிவி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது. அதில் சம்மந்தப்பட்ட நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவர் மந்திரம் மூலம் புற்றுநோய் குணப்படுத்துபவராம். நிகழ்ச்சியில் அதற்கான ஆதாரங்கள் காட்டி இருக்கிறார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சில மணிநேரங்களில் இடைவிடாத போன் அழைப்புகள். நூற்றுக்கணக்கான பேர் அவரது தொடர்பு எண்ணை கேட்கிறார்கள். சில வாரங்களில் அவர் இன்னோவா கார், பல ஏக்கர் நிலம் வாங்கி பணக்காரர் ஆகி விடுகிறார். 


இன்னொருவர் பில்லி சூனியம் எடுப்பவர். அவருக்கு நல்சாட்சியம் வழங்கியவர் தான் திருமணமாகாமல் தவித்து வந்ததாகவும் சாமியார் தான் தன்னை காப்பாற்றினதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கும் நல்ல வேட்டை. ஆனால் அடுத்த நாள் டிவி குழுவினரை அழைத்த ஒரு பெண் நிகழ்ச்சியில் சாட்சி சொன்னவர் தன் கணவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றும் இப்போது பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார். நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் தன் பரிச்சயக்காரர்களும் உறவினர்களும் அழைத்து விசாரிக்க பெருத்த அவமானமாகி விட்டதாகவும் புலம்பி இருக்கிறார்.

 இன்னொரு சாமியார் இது போல் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி விட்டவர். பிரிந்த கணவன் மனைவியை சேர்த்து வைப்பது அவரது சிறப்பு. அவரிடம் குறைதீர்ப்பதற்காக ஒரு பெண் 70000 கொடுத்து விடுகிறார். ஆனால் அதன் பின் சாமியாரை பிடிக்க முடியவில்லை. அழைத்தார் சீடர் ஒருவர் “சாமி தீவிரமான பூஜையில் இருக்கிறார்” என்கிறாராம். இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான இரவே நம் மக்கள் மந்திரவாதிகளையும் சாமியார்களையும் தேடி கார் பிடித்து சென்று விடுகிறார்களாம்.

இதை மூடநம்பிக்கை என எளிதில் புறந்தள்ளுவதில் பயனில்லை. நம் மக்களின் மன அமைப்பு அப்படி. சிறுவயதில் இருந்தே பல சடங்குகள், நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு வளர்கிறோம். என் வீட்டில் ஒருமுறை களம் எழுதி மணிக்கணக்கில் ஒரு சாமியார் பூஜை செய்ததை பார்த்த நினைவுண்டு. இத்தனைக்கும் என் அப்பா நாத்திகர். பெரியாரை பின்பற்றுபவர் என்று சொல்லிக் கொள்பவர். இப்படி ஏமாறுகிறவர்கள் இயல்பில் ரொம்ப உஷாரானவர்கள். வேறு விசயங்களில் இவர்களை ஏமாற்றி கால்காசு பிடுங்க முடியாது. ஆனால் மந்திரம் தந்திரம் பூஜை நம்பிக்கை என்றால் தளர்ந்து விடுவார்கள். ஒரு பிரச்சனை என்று வந்தால் எளிதில் தீராது என நமக்குத் தெரியும். நோயோ குடும்பச் சிக்கலோ வேறு மனவேதனைகளோ அதுவாகத் தான் சரியாகும். அப்போது பூஜை செய்து கொண்டால் சரியாகி விடும் என நம்ப மனம் ஏங்கும். உடனே நிச்சயம் சரியாகாது என இதை செய்பவர்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு ஆறுதல் கிடைக்கும். கணவரிடம் பிரச்சனை வந்து பிரிந்து வாழும் மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் யாரிடம் இது பற்றி விவாதித்தாலும் தீர்வு அமையாது. பெண்ணியவாதிகளும் வக்கீல்களூம் பிரிய வலியுறுத்துவார்கள். பெற்றோர்கள் பொறுத்துக் கொள் என்பார்கள். இரண்டும் தீவிர எதிர்நிலைகள். அப்போது அப்பெண்ணுக்கு தேவை உறுதியாய் சரியாகி விடும் என நம்பிக்கை ஊட்டும் ஒரு சந்தர்ப்பம். அதை உருவாக்கி அளிக்கும் ஒருவர். அந்த இடத்தை தான் பில்லியசூனியக்காரர்கள் நிரப்புவார்கள்.

 இந்தியர்கள் இயல்பாகவே காரணகாரியம் கொண்டு எதுவும் நடப்பதாய் நம்புவதில்லை. என்ன நடந்தாலும் தலையெழுத்து என நினைப்போம். என் பிள்ளை பிறக்கும் முன்பே என் அம்மா காலெண்டரில் நட்சத்திரம் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். குழந்தைப்பேறின் போது என் மாமியார் மருத்துவரிடம் போய் நேரம் பற்றி விசாரித்தார். பிறக்கும் முன்னரே எவ்வளவு கதையாடல்கள் நம்மைச் சுற்றி உருவாகின்றன?
நான் தர்க்கவாதி தான். அதற்காய் வாழ்வின் எல்லா தருணங்களையும் காரணகாரியம் கொண்டு விளக்கலாம் என நினைக்கவில்லை. நான் இவ்விசயத்தில் பிரமிளின் கட்சி. நமக்குத் தெரியாத புரியாத பல புதிர்கள் இவ்வுலகில் உண்டு என அவர் சித்தர்கள், சாமியார்கள் பற்றின கட்டுரை ஒன்றில் அவர் சொல்கிறார். ஒருவேளை இந்த சாமியார்களும் பில்லிசூனியக்காரர்களும் சொல்வதில் உண்மை இருக்கலாம். உறுதியாய் தெரியாத எதையும் பின்பற்றக் கூடாது என்பது என் தரப்பு. அதனால் நான் இது போன்றவர்களிடம் போக மாட்டேன். போகிறவர்க்ளை முழுக்க முட்டாள்கள் என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் இவர்கள் ஏமாறும்படி நிறைய போலிகள் தான் நம் ஊரில் உலாவுகிறார்கள். ஒரு டிவி நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி உயர்வாய் பொய் சாட்சி சொல்ல ஒருவரை ஏற்பாடு பண்ணுகிறார் என்றால் எப்படியான தில்லாலங்கடியாய் இருப்பார்? இவர்களை விசாரித்து தண்டனை வழங்குவதற்கான கராறான சட்டங்களை இயற்ற வேண்டும். இந்த போலிகளை களையெடுத்தாலே பல குற்றங்கள் குறைந்து விடும். ஆனால் இதுவரை காவல்துறை காவி அணிந்தவர்கள் விசயத்தில் மென்மையாகவே நடந்து வருகிறது. குற்றம் செய்வதற்கும் காவி, அதிலிருந்து தப்பிப்பதற்கும் காவி. கலவரம் நடத்துவதற்கும் காவி, அதை வைத்து ஓட்டுவாங்கி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் காவி. இந்தியாவில் இந்த நிறத்தை வைத்துக் கொண்டு ஒரு கொலைகாரன் கூட உத்தமனாகி விடலாம்.

Comments

Ganapathy G said…
A very delicate point. Very well put. Faith is a dicey business precisely because its intangible and difficult to segregate fake and genuine. Infact we don't even have a concrete definition for authenticity! But as you rightly pointed out it would be a fallacy to brand this totally fake. The challenge lies in identifying those that are con artists out to loot people and those that are genuine believers of what they do. More often than not the latter kind does not charge any money. Whether or not what these guys say works is another story , but at least it gives hope to people that need it most.

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...