Skip to main content

மந்திர தந்திர போலிகள்




சித்தர்கள், மந்திர தந்திரம் பண்ணுபவர்கள், பில்லிசூனியக்காரர்கள் பற்றிய ஹிட்டான டிவி நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது. அதில் சம்மந்தப்பட்ட நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவர் மந்திரம் மூலம் புற்றுநோய் குணப்படுத்துபவராம். நிகழ்ச்சியில் அதற்கான ஆதாரங்கள் காட்டி இருக்கிறார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகி சில மணிநேரங்களில் இடைவிடாத போன் அழைப்புகள். நூற்றுக்கணக்கான பேர் அவரது தொடர்பு எண்ணை கேட்கிறார்கள். சில வாரங்களில் அவர் இன்னோவா கார், பல ஏக்கர் நிலம் வாங்கி பணக்காரர் ஆகி விடுகிறார். 


இன்னொருவர் பில்லி சூனியம் எடுப்பவர். அவருக்கு நல்சாட்சியம் வழங்கியவர் தான் திருமணமாகாமல் தவித்து வந்ததாகவும் சாமியார் தான் தன்னை காப்பாற்றினதாகவும் கூறியிருக்கிறார். அவருக்கும் நல்ல வேட்டை. ஆனால் அடுத்த நாள் டிவி குழுவினரை அழைத்த ஒரு பெண் நிகழ்ச்சியில் சாட்சி சொன்னவர் தன் கணவர் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் என்றும் இப்போது பிரிந்து வாழ்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார். நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் தன் பரிச்சயக்காரர்களும் உறவினர்களும் அழைத்து விசாரிக்க பெருத்த அவமானமாகி விட்டதாகவும் புலம்பி இருக்கிறார்.

 இன்னொரு சாமியார் இது போல் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி விட்டவர். பிரிந்த கணவன் மனைவியை சேர்த்து வைப்பது அவரது சிறப்பு. அவரிடம் குறைதீர்ப்பதற்காக ஒரு பெண் 70000 கொடுத்து விடுகிறார். ஆனால் அதன் பின் சாமியாரை பிடிக்க முடியவில்லை. அழைத்தார் சீடர் ஒருவர் “சாமி தீவிரமான பூஜையில் இருக்கிறார்” என்கிறாராம். இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பான இரவே நம் மக்கள் மந்திரவாதிகளையும் சாமியார்களையும் தேடி கார் பிடித்து சென்று விடுகிறார்களாம்.

இதை மூடநம்பிக்கை என எளிதில் புறந்தள்ளுவதில் பயனில்லை. நம் மக்களின் மன அமைப்பு அப்படி. சிறுவயதில் இருந்தே பல சடங்குகள், நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு வளர்கிறோம். என் வீட்டில் ஒருமுறை களம் எழுதி மணிக்கணக்கில் ஒரு சாமியார் பூஜை செய்ததை பார்த்த நினைவுண்டு. இத்தனைக்கும் என் அப்பா நாத்திகர். பெரியாரை பின்பற்றுபவர் என்று சொல்லிக் கொள்பவர். இப்படி ஏமாறுகிறவர்கள் இயல்பில் ரொம்ப உஷாரானவர்கள். வேறு விசயங்களில் இவர்களை ஏமாற்றி கால்காசு பிடுங்க முடியாது. ஆனால் மந்திரம் தந்திரம் பூஜை நம்பிக்கை என்றால் தளர்ந்து விடுவார்கள். ஒரு பிரச்சனை என்று வந்தால் எளிதில் தீராது என நமக்குத் தெரியும். நோயோ குடும்பச் சிக்கலோ வேறு மனவேதனைகளோ அதுவாகத் தான் சரியாகும். அப்போது பூஜை செய்து கொண்டால் சரியாகி விடும் என நம்ப மனம் ஏங்கும். உடனே நிச்சயம் சரியாகாது என இதை செய்பவர்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு ஆறுதல் கிடைக்கும். கணவரிடம் பிரச்சனை வந்து பிரிந்து வாழும் மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் யாரிடம் இது பற்றி விவாதித்தாலும் தீர்வு அமையாது. பெண்ணியவாதிகளும் வக்கீல்களூம் பிரிய வலியுறுத்துவார்கள். பெற்றோர்கள் பொறுத்துக் கொள் என்பார்கள். இரண்டும் தீவிர எதிர்நிலைகள். அப்போது அப்பெண்ணுக்கு தேவை உறுதியாய் சரியாகி விடும் என நம்பிக்கை ஊட்டும் ஒரு சந்தர்ப்பம். அதை உருவாக்கி அளிக்கும் ஒருவர். அந்த இடத்தை தான் பில்லியசூனியக்காரர்கள் நிரப்புவார்கள்.

 இந்தியர்கள் இயல்பாகவே காரணகாரியம் கொண்டு எதுவும் நடப்பதாய் நம்புவதில்லை. என்ன நடந்தாலும் தலையெழுத்து என நினைப்போம். என் பிள்ளை பிறக்கும் முன்பே என் அம்மா காலெண்டரில் நட்சத்திரம் பார்த்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். குழந்தைப்பேறின் போது என் மாமியார் மருத்துவரிடம் போய் நேரம் பற்றி விசாரித்தார். பிறக்கும் முன்னரே எவ்வளவு கதையாடல்கள் நம்மைச் சுற்றி உருவாகின்றன?
நான் தர்க்கவாதி தான். அதற்காய் வாழ்வின் எல்லா தருணங்களையும் காரணகாரியம் கொண்டு விளக்கலாம் என நினைக்கவில்லை. நான் இவ்விசயத்தில் பிரமிளின் கட்சி. நமக்குத் தெரியாத புரியாத பல புதிர்கள் இவ்வுலகில் உண்டு என அவர் சித்தர்கள், சாமியார்கள் பற்றின கட்டுரை ஒன்றில் அவர் சொல்கிறார். ஒருவேளை இந்த சாமியார்களும் பில்லிசூனியக்காரர்களும் சொல்வதில் உண்மை இருக்கலாம். உறுதியாய் தெரியாத எதையும் பின்பற்றக் கூடாது என்பது என் தரப்பு. அதனால் நான் இது போன்றவர்களிடம் போக மாட்டேன். போகிறவர்க்ளை முழுக்க முட்டாள்கள் என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் இவர்கள் ஏமாறும்படி நிறைய போலிகள் தான் நம் ஊரில் உலாவுகிறார்கள். ஒரு டிவி நிகழ்ச்சியில் தன்னைப் பற்றி உயர்வாய் பொய் சாட்சி சொல்ல ஒருவரை ஏற்பாடு பண்ணுகிறார் என்றால் எப்படியான தில்லாலங்கடியாய் இருப்பார்? இவர்களை விசாரித்து தண்டனை வழங்குவதற்கான கராறான சட்டங்களை இயற்ற வேண்டும். இந்த போலிகளை களையெடுத்தாலே பல குற்றங்கள் குறைந்து விடும். ஆனால் இதுவரை காவல்துறை காவி அணிந்தவர்கள் விசயத்தில் மென்மையாகவே நடந்து வருகிறது. குற்றம் செய்வதற்கும் காவி, அதிலிருந்து தப்பிப்பதற்கும் காவி. கலவரம் நடத்துவதற்கும் காவி, அதை வைத்து ஓட்டுவாங்கி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் காவி. இந்தியாவில் இந்த நிறத்தை வைத்துக் கொண்டு ஒரு கொலைகாரன் கூட உத்தமனாகி விடலாம்.

Comments

Ganapathy G said…
A very delicate point. Very well put. Faith is a dicey business precisely because its intangible and difficult to segregate fake and genuine. Infact we don't even have a concrete definition for authenticity! But as you rightly pointed out it would be a fallacy to brand this totally fake. The challenge lies in identifying those that are con artists out to loot people and those that are genuine believers of what they do. More often than not the latter kind does not charge any money. Whether or not what these guys say works is another story , but at least it gives hope to people that need it most.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...