வீட்டில் டி.வி ரிப்பேர் ஆகி விட்டது.
டி.வி மெக்கானிக் வந்து பார்த்து விட்டு சொன்னார் “டி.வி மாதிரி எலக்டிரானிக் சாமான்
எல்லாம் மனித உயிர் போலத் தான். ஓடுற வரைக்கும் ஓடும். எப்போ நிக்குமுன்னு சொல்ல முடியாது.”
நான் முன்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது பக்கத்து படுக்கையில்
ஒரு மூதாட்டி கிடந்தார். ஒருநாள் அவருக்கு முழுக்க பிரக்ஞை போய் விட்டது. அவரது கணவன்
வந்து பார்த்து விட்டு ஒவ்வொரு டாக்டராக அழைத்து கன்னாபின்னா என்று கத்தினார். அவர்கள்
முழித்தார்களே தவிர சரியாய் பதில் சொல்லவில்லை. ஒரே ஒருத்தர் சொன்னார் “நீங்க இவங்களுக்கான
கட்டணத்தை இன்னும் செலுத்தல. அதை போய் செலுத்திட்டு வந்தீங்கன்னா சிகிச்சை தொடர்வாங்க.
ஏன்னா பணம் கட்டாததினால மருந்து நிப்பாட்டி வச்சுருக்காங்க”. அவர் உடனே பணம் செலுத்த
சென்றார். முந்தா நாளில் இருந்தே அவர் படுக்கை பக்கம் எந்த செவிலியோ மருத்துவரோ போகவில்லை
என்பது எனக்கு நினைவு வந்தது. இப்படி சிகிச்சையை நிறுத்துவதனால் அவருக்கு உயிர் போனால்
என்னாவது என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அந்த மூதாட்டி எனும் டிவியின் மின் தொடர்பை
தற்காலிகமாய் துண்டித்து விட்டார்கள்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments