வீட்டில் டி.வி ரிப்பேர் ஆகி விட்டது.
டி.வி மெக்கானிக் வந்து பார்த்து விட்டு சொன்னார் “டி.வி மாதிரி எலக்டிரானிக் சாமான்
எல்லாம் மனித உயிர் போலத் தான். ஓடுற வரைக்கும் ஓடும். எப்போ நிக்குமுன்னு சொல்ல முடியாது.”
நான் முன்பு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது பக்கத்து படுக்கையில்
ஒரு மூதாட்டி கிடந்தார். ஒருநாள் அவருக்கு முழுக்க பிரக்ஞை போய் விட்டது. அவரது கணவன்
வந்து பார்த்து விட்டு ஒவ்வொரு டாக்டராக அழைத்து கன்னாபின்னா என்று கத்தினார். அவர்கள்
முழித்தார்களே தவிர சரியாய் பதில் சொல்லவில்லை. ஒரே ஒருத்தர் சொன்னார் “நீங்க இவங்களுக்கான
கட்டணத்தை இன்னும் செலுத்தல. அதை போய் செலுத்திட்டு வந்தீங்கன்னா சிகிச்சை தொடர்வாங்க.
ஏன்னா பணம் கட்டாததினால மருந்து நிப்பாட்டி வச்சுருக்காங்க”. அவர் உடனே பணம் செலுத்த
சென்றார். முந்தா நாளில் இருந்தே அவர் படுக்கை பக்கம் எந்த செவிலியோ மருத்துவரோ போகவில்லை
என்பது எனக்கு நினைவு வந்தது. இப்படி சிகிச்சையை நிறுத்துவதனால் அவருக்கு உயிர் போனால்
என்னாவது என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அந்த மூதாட்டி எனும் டிவியின் மின் தொடர்பை
தற்காலிகமாய் துண்டித்து விட்டார்கள்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...
கருத்துகள்