முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டுக்கறி தடையும் பிராமணியமும்



இன்று சன் நியூஸ் விவாத மேடையில் மாட்டுக்கறி தடை பற்றி விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நான் இது அடிப்படையில் ஒரு சாதிய பிரச்சனை என்றேன். பா.ஜ.கவில் உள்ள பலருமே அசைவம் உண்பவர்கள். கணிசமான இந்துக்களும் அசைவர்கள் தாம். கேரளா போன்ற மாநிலங்களில் மிக அதிகமாய் மாட்டுக்கறி உண்பவர்கள் இருக்கிறார்கள். ஹைதராபாதில் இஸ்லாமியர் நோன்பை முறிக்க உண்ணும் ஹலீம் எனும் மாட்டுக்கறி கலந்த உணவை இஸ்லாமியரை விட பிராமணர்களும் இந்துக்களும் உண்பதாய் காஞ்சன்யா ஒரு பேட்டியில் சொல்கிறார். மாட்டுக்கறி பிராமணர்களுக்கு மட்டுமே ஒவ்வாமல் இருக்கிறது. ஜெயின்கள் இன்னொரு பக்கம் அனைத்து வகை அசைவ உணவுகளையும் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த இரு மிகச்சிறுபான்மை சமூக மக்களின் தேவைக்காக பா.ஜ.க ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பண்பாட்டையும் அவமதிக்கிறது. அது மட்டுமல்ல இஸ்லாமியர் மட்டுமே மாட்டுக்கறி உண்பதாய் ஒரு போலி பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறது என்றேன்.

 என்னைத் தொடர்ந்து இவ்வாதத்தை முன்னெடுத்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் எப்படி முகலாய மன்னர்களின் காலத்திலும் அரசவையில் முக்கிய பதவிகளில் இருந்த பிராமணர்கள் மாட்டுக்கறி தடையை தம் செல்வாக்கால் கொண்டு வந்தார்கள், இன்றும் எப்படி நாட்டின் 3% பேரின் தனிப்பட்ட செண்டிமெண்ட் மிச்ச 97% மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றார். அதுவரை அமைதியாக பேசிய பா.ஜ.கவின் நாராயணன் பிராமணர்களைப் பற்றி விமர்சித்ததும் கொந்தளித்து நீங்கள் ஒரு சமூகத்தை தாக்கினால் நாங்கள் இஸ்லாமியரையும் இனி நேரடியாய் தாக்கி பேசுவோம் என மிரட்டினார். அதாவது தலித்துகள் மற்றும் பிற மத்திய சாதியினர் மீது என்ன கேள்வி எழுந்தாலும் பா.ஜ.கவுக்கு பிரச்சனையில்லை. பிராமணர்கள் மீது ஒரு விரல் சுட்டப்பட்டால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
நாராயணன் ஒரு பக்கம் பசுமாட்டை மட்டுமல்ல காளை மற்றும் எருமைகளை கொல்வதையும் தான் பாஜக எதிர்க்கிறது என்றார். நம்முடைய அரசியலமைப்பு சட்டம் முதிய பசுமாடுகளை கொல்வதை அனுமதிக்கிறதே என்று கேட்டதற்கு இது போன்ற சட்டங்களை மாநிலங்கள் தம் விருப்பப்படி உருவாக்கலாம் என்றார். 3% பேரின் செண்டிமெண்டுக்காய் ஏன் வயதாகி பயனற்ற மாடுகளை கோசாலாக்களில் பாதுகாக்க வேண்டும் என அவர் விளக்கவில்லை. பா.ஜ.கவுக்கு எந்த தெளிவான கொள்கையும் இல்லையும் என்பதும் இதில் தெளிவாகியது. பா.ஜ.கவுக்கு எல்லா சமூகத்தினரின் ஓட்டும் ஆதரவும் வேண்டும். ஆனால் ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் மொழியையும் மட்டும் முன்னிலைப்படுத்துவார்கள். அதை மிச்ச சமூகத்தினர் மீது திணிப்பார்கள். ஒரு மாநிலத்தில் மதத்தையும் வேறு ஒரு மாநிலத்தில் சாதியையும் வைத்து அரசியல் செய்வார்கள். படித்த மேல்தட்டினரிடம் நாங்கள் மதசார்பற்றவர்கள், பொருளாதார வளர்ச்சியே எங்கள் செயல்திட்டம் என்று கூறி ஓட்டுக் கேட்பார்கள். இந்துத்துவாவை தம் கொள்கை என்று கூறும் பா.ஜ.கவின் நாராயணன் இன்றைய நிகழ்ச்சியில் தம் கட்சி மதசார்பற்றது என்று வேறு கூறினார். தம் கொள்கையான இந்துத்துவாவில் கூட உறுதி இல்லாமல் வெறும் சந்தர்ப்பவாதிகளாய் இருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.