முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டுக்கறி தடையும் பிராமணியமும்



இன்று சன் நியூஸ் விவாத மேடையில் மாட்டுக்கறி தடை பற்றி விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நான் இது அடிப்படையில் ஒரு சாதிய பிரச்சனை என்றேன். பா.ஜ.கவில் உள்ள பலருமே அசைவம் உண்பவர்கள். கணிசமான இந்துக்களும் அசைவர்கள் தாம். கேரளா போன்ற மாநிலங்களில் மிக அதிகமாய் மாட்டுக்கறி உண்பவர்கள் இருக்கிறார்கள். ஹைதராபாதில் இஸ்லாமியர் நோன்பை முறிக்க உண்ணும் ஹலீம் எனும் மாட்டுக்கறி கலந்த உணவை இஸ்லாமியரை விட பிராமணர்களும் இந்துக்களும் உண்பதாய் காஞ்சன்யா ஒரு பேட்டியில் சொல்கிறார். மாட்டுக்கறி பிராமணர்களுக்கு மட்டுமே ஒவ்வாமல் இருக்கிறது. ஜெயின்கள் இன்னொரு பக்கம் அனைத்து வகை அசைவ உணவுகளையும் எதிர்க்கிறார்கள். ஆனால் இந்த இரு மிகச்சிறுபான்மை சமூக மக்களின் தேவைக்காக பா.ஜ.க ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவு பண்பாட்டையும் அவமதிக்கிறது. அது மட்டுமல்ல இஸ்லாமியர் மட்டுமே மாட்டுக்கறி உண்பதாய் ஒரு போலி பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறது என்றேன்.

 என்னைத் தொடர்ந்து இவ்வாதத்தை முன்னெடுத்த இஸ்லாமிய நண்பர் ஒருவர் எப்படி முகலாய மன்னர்களின் காலத்திலும் அரசவையில் முக்கிய பதவிகளில் இருந்த பிராமணர்கள் மாட்டுக்கறி தடையை தம் செல்வாக்கால் கொண்டு வந்தார்கள், இன்றும் எப்படி நாட்டின் 3% பேரின் தனிப்பட்ட செண்டிமெண்ட் மிச்ச 97% மக்கள் மீது திணிக்கப்படுகிறது என்றார். அதுவரை அமைதியாக பேசிய பா.ஜ.கவின் நாராயணன் பிராமணர்களைப் பற்றி விமர்சித்ததும் கொந்தளித்து நீங்கள் ஒரு சமூகத்தை தாக்கினால் நாங்கள் இஸ்லாமியரையும் இனி நேரடியாய் தாக்கி பேசுவோம் என மிரட்டினார். அதாவது தலித்துகள் மற்றும் பிற மத்திய சாதியினர் மீது என்ன கேள்வி எழுந்தாலும் பா.ஜ.கவுக்கு பிரச்சனையில்லை. பிராமணர்கள் மீது ஒரு விரல் சுட்டப்பட்டால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
நாராயணன் ஒரு பக்கம் பசுமாட்டை மட்டுமல்ல காளை மற்றும் எருமைகளை கொல்வதையும் தான் பாஜக எதிர்க்கிறது என்றார். நம்முடைய அரசியலமைப்பு சட்டம் முதிய பசுமாடுகளை கொல்வதை அனுமதிக்கிறதே என்று கேட்டதற்கு இது போன்ற சட்டங்களை மாநிலங்கள் தம் விருப்பப்படி உருவாக்கலாம் என்றார். 3% பேரின் செண்டிமெண்டுக்காய் ஏன் வயதாகி பயனற்ற மாடுகளை கோசாலாக்களில் பாதுகாக்க வேண்டும் என அவர் விளக்கவில்லை. பா.ஜ.கவுக்கு எந்த தெளிவான கொள்கையும் இல்லையும் என்பதும் இதில் தெளிவாகியது. பா.ஜ.கவுக்கு எல்லா சமூகத்தினரின் ஓட்டும் ஆதரவும் வேண்டும். ஆனால் ஒரு சமூகத்தின் பண்பாட்டையும் மொழியையும் மட்டும் முன்னிலைப்படுத்துவார்கள். அதை மிச்ச சமூகத்தினர் மீது திணிப்பார்கள். ஒரு மாநிலத்தில் மதத்தையும் வேறு ஒரு மாநிலத்தில் சாதியையும் வைத்து அரசியல் செய்வார்கள். படித்த மேல்தட்டினரிடம் நாங்கள் மதசார்பற்றவர்கள், பொருளாதார வளர்ச்சியே எங்கள் செயல்திட்டம் என்று கூறி ஓட்டுக் கேட்பார்கள். இந்துத்துவாவை தம் கொள்கை என்று கூறும் பா.ஜ.கவின் நாராயணன் இன்றைய நிகழ்ச்சியில் தம் கட்சி மதசார்பற்றது என்று வேறு கூறினார். தம் கொள்கையான இந்துத்துவாவில் கூட உறுதி இல்லாமல் வெறும் சந்தர்ப்பவாதிகளாய் இருக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...