Skip to main content

மாட்டுக்கறியும் பிரமிளின் நண்பரும்




இன்று ஆசிய பண்பாட்டு ஆய்வு கழகத்தில் நுகர்வு பண்பாடு பற்றி நடந்த கருத்திரங்கில் கலந்து கொண்டு பேசினேன். நிறைய சுவாரஸ்யமான பேச்சுகளை கேட்க முடிந்தது. சென்னை பல்கலையின் மானுடவியல் துறைத்தலைவர் சுமதி தான் 2000இல் யுனிசெப் புரோஜெக்டுக்காக செய்த ஒரு ஆய்வு பற்றி பேசினார். திண்டுக்கல் பகுதியில் உள்ள தலித் சமூகத்தினரின் உணவு பழக்கம் பற்றியது ஆய்வு. இச்சமூகத்துக்கு பெண்களில் கர்பிணிகளின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் இரும்பு சத்தும், ஹியுமோகுளோபின் அளவும் மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு இரும்பு சத்துள்ள மாத்திரைகளை கொடுப்பதும் முருங்கைக்கீரை போன்ற உணவுகளை பரிந்துரைப்பதும் புரோஜெக்டின் நோக்கம். இப்பெண்களின் உணவில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் குறைவு. அவர்கள் தினமும் மாட்டுக்கறி அல்லது மீன் குழம்பு வைக்கிறார்கள். இதில் புளி கட்டாயம் சேர்க்கிறார்கள். இதற்கு காரணம் புளியில் சமைக்கும் உணவு எளிதில் கெடாது என்பது. குளிர்பதனப்பெட்டி இல்லாத நிலையில் அடுத்த நாள் பழைய சோற்றில் இந்த குழம்பைத் தான் ஊற்றி பிசைந்து பிள்ளைகளை உணவாக அளிப்பார்கள். காய்கறி குழம்பு வைத்தால் அடுத்த நாள் கெட்டுப்போவதுடன் சுவையும் இல்லாதாகிறது. ஆனால் மாட்டுக்கறியோ மீனோ அடுத்த நாளானதும் சுவை இரட்டிப்பாகிறது என இப்பெண்கள் கூறுகிறார்கள்.

 ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையும் உணவுப்பண்பாடும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து வளர்கிறவை. தடை எனும் பெயரில் ஒரு உணவை ஒரு சமூகத்திடம் இருந்து பறிப்பது அபத்தம் இல்லையா என சுமதி கேட்டார். நான் முன்பு ஒருமுறை குற்றவியல் துறையில் ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்த போது அவரது அலமாரியில் தூசடைந்து கிடைந்த ஒரு நூலை உருவி புரட்டினேன். அது சுமதியின் முனைவர் பட்ட ஆய்வு. அது திருநெல்வேலி சாணார்கள் பற்றின சுவாரஸ்யமான விவாதங்கள் கொண்டது. அதன் பிறகு தான் அவர் சென்னை பல்கலையில் மானுடவியல் துறையில் உள்ளார் என அறிந்து கொண்டேன்.

இன்று அம்ருதராஜ் மற்றொரு நண்பரை சந்தித்தேன். அவர் ஒரு கவிஞர் என்றும் பிரமிளின் நண்பர் என்றும் சொன்னார். “பிரமிள் அடிக்கடி தேவையில்லாமல் சண்டை போடுவாரா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பிரமிள் ரொம்ப இனிமையான மனிதர். ஆனால் யாரிடமாவது ரொம்ப நெருங்கி விட்டால், தான் அவர்களை ரொம்ப சார்ந்து இருப்பதாய் அவருக்கு தோன்றினால் அவரால் அதை தாங்க முடியாது. வேண்டுமென்றே அவர்களை வன்மமாய் தாக்கி பேசுவார். காயப்படுத்துவார். பிரிந்து போய் விடுவார். ஆனால் உள்ளுக்குள் நம் மீது அன்புடனே இருப்பார். நம்மை திரும்ப சந்திக்க முனைவார். ஆனால் அதை வெளிப்படையாய் காட்டிக் கொள்ள மாட்டார்”. எப்படி பிரமிள் அவரிடம் தான் எழுதிய கவிதையின் பல்வேறு திருத்தின பிரதிகளை காட்டி விளக்குவார், தான் படிக்கிற, யோசிக்கிற விசயங்களை தயங்காமல் அழகாய் பகிர்ந்து கொள்வார் எனக் கூறினார். ”பிரமிளுடன் இரண்டு வருடங்கள் இருந்தால் அவர் உங்களை அவர் நிலைக்கு உயர்த்தி விடுவார். அந்தளவுக்கு மனத்தீவிரமும் முனைப்பும் கொண்டவர்”. என்றார். பேராசிரியர்களின் கூட்டத்தில் இப்படி ஒரு சிறுபத்திரிகை கவிஞரை காண்பது விசித்திரமாய் இருந்தது. இன்று நிறைய பேரை சந்தித்து உரையாடினேன். ஆனால் ஒருவர் பிரமிள் பற்றி பேசிய சில நிமிடங்களில் இவர் நம் குடும்பத்து ஆள் எனும் அன்னியோன்யம் ஏற்பட்டது. மனம் கனிய அவர் கைகளை பற்றிக் கொண்டேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...