முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாட்டுக்கறியும் பிரமிளின் நண்பரும்




இன்று ஆசிய பண்பாட்டு ஆய்வு கழகத்தில் நுகர்வு பண்பாடு பற்றி நடந்த கருத்திரங்கில் கலந்து கொண்டு பேசினேன். நிறைய சுவாரஸ்யமான பேச்சுகளை கேட்க முடிந்தது. சென்னை பல்கலையின் மானுடவியல் துறைத்தலைவர் சுமதி தான் 2000இல் யுனிசெப் புரோஜெக்டுக்காக செய்த ஒரு ஆய்வு பற்றி பேசினார். திண்டுக்கல் பகுதியில் உள்ள தலித் சமூகத்தினரின் உணவு பழக்கம் பற்றியது ஆய்வு. இச்சமூகத்துக்கு பெண்களில் கர்பிணிகளின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் இரும்பு சத்தும், ஹியுமோகுளோபின் அளவும் மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு இரும்பு சத்துள்ள மாத்திரைகளை கொடுப்பதும் முருங்கைக்கீரை போன்ற உணவுகளை பரிந்துரைப்பதும் புரோஜெக்டின் நோக்கம். இப்பெண்களின் உணவில் கீரை உள்ளிட்ட காய்கறிகள் மிகவும் குறைவு. அவர்கள் தினமும் மாட்டுக்கறி அல்லது மீன் குழம்பு வைக்கிறார்கள். இதில் புளி கட்டாயம் சேர்க்கிறார்கள். இதற்கு காரணம் புளியில் சமைக்கும் உணவு எளிதில் கெடாது என்பது. குளிர்பதனப்பெட்டி இல்லாத நிலையில் அடுத்த நாள் பழைய சோற்றில் இந்த குழம்பைத் தான் ஊற்றி பிசைந்து பிள்ளைகளை உணவாக அளிப்பார்கள். காய்கறி குழம்பு வைத்தால் அடுத்த நாள் கெட்டுப்போவதுடன் சுவையும் இல்லாதாகிறது. ஆனால் மாட்டுக்கறியோ மீனோ அடுத்த நாளானதும் சுவை இரட்டிப்பாகிறது என இப்பெண்கள் கூறுகிறார்கள்.

 ஒரு சமூகத்தின் பொருளாதார நிலையும் உணவுப்பண்பாடும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து வளர்கிறவை. தடை எனும் பெயரில் ஒரு உணவை ஒரு சமூகத்திடம் இருந்து பறிப்பது அபத்தம் இல்லையா என சுமதி கேட்டார். நான் முன்பு ஒருமுறை குற்றவியல் துறையில் ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்த போது அவரது அலமாரியில் தூசடைந்து கிடைந்த ஒரு நூலை உருவி புரட்டினேன். அது சுமதியின் முனைவர் பட்ட ஆய்வு. அது திருநெல்வேலி சாணார்கள் பற்றின சுவாரஸ்யமான விவாதங்கள் கொண்டது. அதன் பிறகு தான் அவர் சென்னை பல்கலையில் மானுடவியல் துறையில் உள்ளார் என அறிந்து கொண்டேன்.

இன்று அம்ருதராஜ் மற்றொரு நண்பரை சந்தித்தேன். அவர் ஒரு கவிஞர் என்றும் பிரமிளின் நண்பர் என்றும் சொன்னார். “பிரமிள் அடிக்கடி தேவையில்லாமல் சண்டை போடுவாரா?” எனக் கேட்டேன். அவர் சொன்னார் “பிரமிள் ரொம்ப இனிமையான மனிதர். ஆனால் யாரிடமாவது ரொம்ப நெருங்கி விட்டால், தான் அவர்களை ரொம்ப சார்ந்து இருப்பதாய் அவருக்கு தோன்றினால் அவரால் அதை தாங்க முடியாது. வேண்டுமென்றே அவர்களை வன்மமாய் தாக்கி பேசுவார். காயப்படுத்துவார். பிரிந்து போய் விடுவார். ஆனால் உள்ளுக்குள் நம் மீது அன்புடனே இருப்பார். நம்மை திரும்ப சந்திக்க முனைவார். ஆனால் அதை வெளிப்படையாய் காட்டிக் கொள்ள மாட்டார்”. எப்படி பிரமிள் அவரிடம் தான் எழுதிய கவிதையின் பல்வேறு திருத்தின பிரதிகளை காட்டி விளக்குவார், தான் படிக்கிற, யோசிக்கிற விசயங்களை தயங்காமல் அழகாய் பகிர்ந்து கொள்வார் எனக் கூறினார். ”பிரமிளுடன் இரண்டு வருடங்கள் இருந்தால் அவர் உங்களை அவர் நிலைக்கு உயர்த்தி விடுவார். அந்தளவுக்கு மனத்தீவிரமும் முனைப்பும் கொண்டவர்”. என்றார். பேராசிரியர்களின் கூட்டத்தில் இப்படி ஒரு சிறுபத்திரிகை கவிஞரை காண்பது விசித்திரமாய் இருந்தது. இன்று நிறைய பேரை சந்தித்து உரையாடினேன். ஆனால் ஒருவர் பிரமிள் பற்றி பேசிய சில நிமிடங்களில் இவர் நம் குடும்பத்து ஆள் எனும் அன்னியோன்யம் ஏற்பட்டது. மனம் கனிய அவர் கைகளை பற்றிக் கொண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...