முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதன்கோட் தீவிரவாத தாக்குதல் – சில ஐயங்கள்



Image result for pathankot attack

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏழு ராணுவத்தினர் பலியாகி விட்டனர். இன்னும் தாக்குதல் ஓயவில்லை. தொடர்கிறது. இத்தாக்குதல் நடக்கக் கூடும் என ஜனவரி 1 அன்றைக்கே தகவல் வந்து விட்டது. அனைத்து படையினரும் தயார் நிலையில் முடுக்கி விடப்பட்டனர். ஆனால் நேரடியாய் களமிறங்கி தீவிரவாதிகளைத் தாக்குவதற்கோ தளத்தை பாதுகாப்பதற்கோ ராணுவத்தினருக்கு ஆணை வழங்கப்படவில்லை. சொல்லப்போனால் தீவிரவாதிகள் தளத்துக்குள் நுழைந்து தாக்கும்வரை அவகாசம் வழங்கப்பட்டது. இது ஏன் என்ற கேள்விக்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை.

 பல்வேறு பாதுகாப்பு படையினர் பதன்கோட்டில் முகாம் இட்டிருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒருங்கிணைக்க ஆள் இல்லை என்று கூறப்படுகிறது என்றாலும் இது நம்பும்படியான வாதமாக இல்லை. ராணுவத்தை சேர்ந்த சிலர் இதை ஒரு அரசியல் சதி என்கிறார்கள். அதிகார மையத்தில் உள்ள சிலர் தீவிரவாதிகள் பதன்கோட் தளம் வரை சென்று சேர வேண்டும் என விரும்பினார்கள். அதனாலே அவர்கள் பாதுகாப்பு படையினரை தடுத்து நிறுத்தினர் என ஒரு தரப்பு கூறுகிறது.
 பதன்கோட்டை தீவிரவாதிகள் அடையும் முன்னர் அவர்கள் ஒரு காரை கடத்தினர். அக்காரில் ஒரு எஸ்.பி, அவரது சமையற்காரர் மற்றும் ஒரு நண்பர் இருந்தனர். பின்னர் அவர்களை ஒரு வனத்தில் விடுவித்து விட்டு தீவிரவாதிகள் பதன்கோட்டுக்கு விரைந்தனர். சமையற்காரர் அங்குள்ள ஒரு காவல் நிலையத்துக்கு சென்று தம்மை தீவிரவாதிகள் கடத்திப் போன விவரத்தை சொல்ல, போலிசார் அதைக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அவரை அடித்து துன்புறுத்தினர். மாவோயிஸ்டுகளின் துண்டுபிரசுரத்தை வைத்திருந்தவர்களை துருவி துருவி விசாரித்து சிறையில் தள்ளி சித்திரவதை செய்யும் நம் போலீசார் தீவிரவாதிகள் ஒரு போலீஸ் அதிகாரியை கடத்திப் போனதை நம்பவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. ஒருவேளை இத்தகவல் வெளியே பரவக் கூடாது என நினைத்த உயர் அதிகாரிகள் தம் வழக்கப்படி புகார் கொடுத்தவரையே குற்றவாளியாக்கி துன்புறுத்தியிருக்கலாம். எப்படியோ தீவிரவாதிகள் விமானப்படை தளத்தை அடைவதற்கான உச்சபட்ச உதவிகளையும் நாம் செய்து கொடுத்து விட்டோம்.
எனக்கு இந்த சந்தர்ப்பம் கார்கிலை நினைவு படுத்துகிறது. கார்கிலில் தீவிரவாதிகள் ஊடுருவியது முஷாரப் மற்றும் வஜ்பய்க்கு இடையிலான மறைமுக ஒப்பந்தத்தின்படியே நடந்தது. பின்னர் இதே தீவிரவாதிகளை வெளியேற்றுகிறோம் எனும் பெயரில் நிறைய ராணுவ வீரர்களை பலிகொடுத்தோம்; கணக்கற்ற பணத்தையும் வீணடித்தோம். இந்த போர் அப்போது தன் மீதுள்ள அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து மக்கள் கவனத்தை திருப்பவும், பாகிஸ்தானுடன் போர் புரிந்தோம் என்று மார்தட்டவும் பா.ஜ.கவுக்கு உதவியது. மறுபக்கம் முஷாரப்புக்கும் பாகிஸ்தானில் இந்தியாவுக்கு படையெடுத்த மாவீரர் எனும் பெயரைப் பெறவும் ராணுவத்தில் தன் செல்வாக்கை அதிகப்படுத்தவும் பயன்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதிகள் என்றுமே இரட்டை முகம் கொண்டவர்களே. ஒரு பக்கம் அவர்கள் ராணுவத்தை திருப்திப்படுத்தி தம் செல்வாக்கை தக்க வைக்க வேண்டும். ராணுவத்துக்கு எப்போதும் போர் தேவை. இன்னொரு பக்கம் இந்திய பிரதமர்களூடன் பேச்சுவார்த்தை நடத்தி சர்வதேச நற்பெயரையும் வணிக நலன்களையும் பாதுகாக்க வேண்டும். அதனாலே ஒவ்வொரு முறையும் இந்திய-பாக் பேச்சுவார்த்தை நடக்கும் போது உடனே தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கின்றன. இந்த பதன்கோடு தாக்குதல் இந்திய-பாக் அரசுகளின் புரிந்துணர்வுடன் தான் நடந்துள்ளதோ எனும் சந்தேகம் எழுகிறது. இப்போது தம் மீதுள்ள மக்கள் அதிருப்தியை மட்டுப்படுத்தி தேசியவாத உணர்வலையை பரப்ப பா.ஜ.வுக்கு இத்தாக்குதல் பலனுள்ளதாக இருக்கும். பாகிஸ்தானில் மோடி சென்று நேரடியாய் நவாஸ் ஷரீப்பை சந்தித்தது அங்குள்ள ஆளுங்கட்சிக்கு மக்களிடையிலும் ராணுவத்திலும் ஏற்படுத்திய கசப்பை போக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு இது பயன்படும்.
Image result for pathankot attack
சமீபத்தில் தில்லியில் கேஜ்ரிவால் அரசு இரு அதிகாரிகளை தற்காலிக வேலை நீக்கம் செய்ததை அடுத்து ஒட்டுமொத்தமாய் அனைத்து அதிகாரிகளும் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த வேலை நிறுத்தத்தை எவ்வாறு தில்லியின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜங் கோவாவில் இருந்தபடி மத்திய அரசுடனும் நூற்றுக்கணக்கான அதிகாரிகளுடனும் போனில் ஒருங்கிணைத்தார் என்பதை கேஜ்ரிவால் விளக்கினார். இதையெல்லாம் சாமர்த்தியமாய் ஒருங்கிணைக்க முடிகிற போது ஒரு நாளுக்கு முன்பே தகவல் தெரிய வந்த பின்னரும் தீவிரவாத தாக்குதலை முறியடிக்கும் விதமாய் பாதுகாப்பு படையினரை நம்மால் ஒருங்கிணைக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை.
மோடி அரசு பதவியேற்ற போது நான் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதினேன் “என்ன செய்ய போறீங்க மிஸ்டர்.மோடி?“. அதில் சில வருடங்களுக்குள் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும், பா.ஜ.கவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் என்று கூறியிருந்தேன். என் கணிப்பின் படியே அருண் ஜேட்லியின் கிரிக்கெட் கிளப் ஊழல் வெளியாகி விட்டது. அடுத்த இரு வருடங்களில் இன்னும் பல ஊழல்கள் அம்பலமாக உள்ளன. தொடர் தீவிரவாத தாக்குதல்களில் நம் தேசம் பலவீனமாகி வருகிறது. ஊழலுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிரான அரசு என்று போலி பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த இந்த அரசு இப்போது அம்மணமாகி நிற்கிறது. காங்கிரஸ் மென்மையானது, பா.ஜ.க வன்மையானது. காங்கிரஸ் ஊழல்மயமானது, பா.ஜ.க களங்கமற்றது என்ற எதிரிடையை கொண்டு இனியும் வடை சுட முடியாது. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.