இன்று காலை தூங்கி
ஆரம்பித்த போது வந்த போனில் ஒருவர் திட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு ஏகப்பட்ட பிரச்சனை.
கடும் வேலை. மாலை ஏழரை வரை யாராவது அழைத்து திட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லாம் முடித்து
வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு தோழி போனில் அழைத்தார். அவரிடம் கேலி
பண்ணி பேசிக் கொண்டிருந்தேன். நான் பொதுவாய் அவரிடம் அப்படி மனம் விட்டு வேடிக்கையாய்
பேசினதில்லை. அவர் கேட்டார் “நீ எப்பவுமே உம்மணாமூஞ்சியாச்சே. இன்னிக்கு என்ன சிரிக்க
சிரிக்க பேசுறே?”. எனக்கே அப்போது தான் அது உறைத்தது. சட்டென எந்த காரணமுமில்லாமல்
நல்ல மனநிலையில் சந்தோசமாய் இருந்தேன். அடி வாங்க வாங்க மனம் சிரிக்கிறது!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments