முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்-பெண் உறவில் சமத்துவம் தேவையா?

( பர்தா அணிவதன் சுதந்திரம் குறித்த எனக்கு ஜீவிக்குமான விவாதத்தின் அடுத்த பதிவு இது.)
வணக்கம் அபிலாஷ்,
       நீங்கள் இந்த விவாதத்தை உங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்ததை பார்த்ததும் மீண்டும் ஆர்வம் தொற்றிகொண்டது. விவாதத்தை தொடரலாம்.
     
பர்தாவை விரும்பித்தானே அணிகிறார்கள் என்கிறீர்கள். அந்த விருப்பம் அவர்களுடையது தானா என்பது தான் இங்கு கேள்வி... 
நண்பகள் ஷேர் ஆட்டோவில் ஒருபெண் அந்த இஸ்லாமிய பெண்ணிடம் எப்படிங்க இத போட்டு இருக்கீங்க புழுக்கமா இல்லையா என்று கேட்டார்.. ஆமாங்க புழுக்கமா தான் இருக்கு ஆனா என்ன பண்றது என்றார். அந்த பெண்ணுக்கு பர்தா அணிவது ஒன்றும் புதிதல்ல. அவர் எத்தனையோ மே மாதங்களை பார்த்திருப்பர், அவருக்கு அதில் கஷ்டம் எதுவும் இல்லை. அந்த தருணத்தில் அதை அணிவது அவருக்கு வசதிப்படவில்லை. ஆனால் அவரால் அதை கழட்டி வீசமுடியாது. இது அவர் விருப்பம் தானா?(இது சமரசம் என்றால் இந்த சமரசத்தை நாம் எவ்வளவு காலம் ஆதரிக்க போகிறோம்?)

    
அவர்களை பார்க்கையில் வரும் கொந்தளிப்பும் கருணையும் நமக்கானதாகவே இருக்கலாம். அந்த கொந்தளிப்பின் பயன் யாருக்கானது என்பது என் கேள்வி?        பெண்களுக்கான சொத்துரிமை பெரியார் கேட்டது அவருக்கான கொந்தளிப்பாகவே இருக்கலாம்..   பெண்கள் அதை நினைத்துகூட பார்த்திருக்காமல் இருக்கலாம். இன்றுவரை அது சில பெண்களுக்கு மட்டுமே உதவுவதாக கூட இருக்கலாம்.ஆனால் அதுவும் இல்லை என்றால் இவர்கள் யாரும் தெருவில் இறங்கி போராடபோவதில்லை. வேறு வழியின்றி  அவர்களுக்கு சேரவேண்டிய சொத்தை விட்டு கொடுத்திருப்பார்கள். அவர்களை கட்டாயப்படுத்தாமல், அவர்கள் நலன்களுக்கான கருணை அவசியமென்றே தோன்றுகிறது .
தாலியோ, பர்தாவோ அவை சொல்வது ஒன்று தான். It signifies/ensures the control men have over women. தாலி மறுப்பு திருமணமாக இருக்கட்டும்,தாலி அகற்றும் போராட்டமாக இருக்கட்டும். அதில் அதிகம் கொந்தளித்தது ஆண்கள் தான். பெண்கள் அதை எளிதில் கடந்து சென்றுவிடுவார்கள். என் அம்மா தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துவிட்டு 'இப்ப உலகமே modern ஆயிட்டு வருதுபோல' என்று கூறிவிட்டு அதை எளிதில் கடந்து சென்று விட்டார். தாலியை பெண்கள் புனிதமாகவோ , பண்பாடாகவோ, உரிமையாகவோ கருதவில்லை. இது இல்லை என்றால் இந்த உலகம் என் ஒழுக்கத்தை கேள்வி கேட்கும் அதனால் இதை அணிகிறேன். பெண்களின் பார்வை இவ்வளவே
ஆனால் என் அண்ணன், தம்பிகளால்(வளர்ந்துவரும் படித்த தலைமுறை) அப்படி அதை எடுத்துகொள்ள முடியவில்லை.  பண்பாடு, கலாச்சாரம், இறைநம்பிக்கை என்று அவர்களுக்கே அர்த்தம் புரியாத வார்த்தைகளால் தாலியை ஆதரித்தார்கள். அதை எதிர்த்து பேசும் பெண்களை வசைபாடினார்கள். இதற்கு காரணம், அவர்களுடைய அதிகாரம் உடைவதில் இருக்கும் பயம். They are feeling very insecure there. 
ஒருமுறை மனுஷிய புத்திரன்,  தாலி கட்டுவதை நிறுத்திவிட்டால் பெண்கள் விடுதலை அடைந்துவிடுவார்கள் என்று கூறியதாக கேள்விப்பட்டேன். அதற்கு அர்த்தம் தாலியுடன் இருக்கும் பெண்கள் எல்லாம் அடிமைகள். தாலி இல்லாத பெண்கள் விடுதலை அடைந்தவர்கள் என்பது இல்லை. அவர் அங்கே தாலியை ஒரு குறியீடாக பார்க்கிறார் எனவே அதை தாக்குகிறார்.இது பர்தாவுக்கும் பொருந்தும் என்று நினைகின்றேன்
இங்கு நிலவி வரும் சுழலில் ஏன் இஸ்லாமை பற்றியோ, பெண்களின் உரிமை பற்றியோ விவாதிக்க முடியவில்லை என்பது புரிகிறது. எனது கேள்வி எல்லாம் அதை ஆதரிப்பதுதான்.(இஸ்லாமிய தனி சட்டத்தை ஆதரிக்கிறோம் என்று, அதில் இருக்கும் gender inequality'  பார்க்க மறுப்பது.மறுப்பது கூட ஓகே. அதை நியாயப்படுத்துவது.
    சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதையில் ஒரு கதாபாத்திரம் கேட்கும்... "இஸ்லாம் வரதட்சணையை கூடதான் தடை செய்கிறது. இவர்கள் அதை பெறாமலா திருமணம் செய்துகொள்கிறார்கள்?". இப்படி மதங்கள் அனைத்தும் ஆண்களுக்கானவையாக  மாறும்போது, பர்தாவை வெறும் அடையாளமாக மட்டும் பார்க்க முடியுமா
இறுதியாக பெண்கள்(சல்மா போன்றோர்) அதை தங்கள் அடையாளமாய் பார்பதை ஏற்கிறேன் வரவேற்கிறேன். அனால் அது பெண்களின் அடையளமாக ஆண்களால் மாற்றபடுவதை ஏற்க இயலாது.
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
அன்புடன்
ஜீவி
அன்புள்ள ஜீவி
உங்கள் கூற்று முழுக்க உண்மை. ஏற்கிறேன். இஸ்லாமிய அல்லது இந்து சமூகங்களில் பெண்கள் குறைவான சுதந்திரத்துடன் உள்ளார்கள் என நான் மறுக்கவில்லை. ஆனால் சுதந்திரத்தின் அளவை யார் தீர்மானிப்பது, எது சுதந்திரம் போன்ற கேள்விகள் இன்னும் விடையளிக்கப்படாமல் உள்ளன. உதாரணமாய், தாலி இல்லாமல் வாழ்ந்தால் அது சுதந்திரமா? இரவில் ஒரு பெண்ணால் தனியாக நடக்க முடிந்தால் அது சுதந்திரமா? இது சம்மந்தமாய் சில கேள்விகள் எனக்கு உள்ளன
1)   மேற்சொன்ன இரண்டையும் செய்கிற ஒரு பெண்ணுக்கு குழந்தை பெற விருப்பமில்லை என்று கொள்வோம். ஆனால் கணவனுக்கு குழந்தை பெற ஆசை. அவள் இப்போது என்ன செய்ய வேண்டும். தன் சுதந்திரமே முக்கியம் என்றால் அவள் குழந்தை பெறவே கூடாது. ஆனால் அது அந்த ஆணின் சுதந்திரத்தை பறிப்பது ஆகாதா?
2)   நான் கல்லூரியில் மாணவர்களிடம் உரையாடும் போது அவர்கள் அடிக்கடி எழுப்புகிற கேள்வி பெண்களின் ஆடை பற்றியது. ஒரு பெண் எதற்காய் கவர்ச்சியாய் ஆடை அணிகிறாள்? ஆணை கவர்வதற்காகவா அல்லது தனக்காகவா? என்னை நான் அழகாக கருதுகிறேன், என்னை நானே ரசிக்கிறேன், அதற்காய் என்னை அலங்கரிக்கிறேன் என சில பெண்ணியவாதிகள் கூறலாம். ஆனால் எதிர்பாலின (அல்லது சுயபாலின) ஈர்ப்பு முக்கியமே அல்ல என அவர்கள் உறுதிப்பட கூற இயலுமா? முடியாது.
சொல்லப் போனால் பெண்கள் வெளியில் இருக்கும் போது சதா இந்த “அழகாக காட்டும்” கவனத்தோடே இருக்கிறார்கள். பெண்கள் நடப்பது, உட்கார்வது, பேசுவது, சைகைகள் செய்வது என அனைத்திலும் “செக்ஸ்” மிளிர்கிறது. இதை நாம் ஆண்களிடத்து பார்க்க இயலாது. ஆண்களை போல் எந்த அக்கறையும் இல்லாமல் ”பாலியல் சுதந்திரத்தோடு” ரோட்டில் நடக்க ஒரு பெண்ணால் முடிவதில்லை. பாலியல் சுதந்திரம் என நான் சொன்னது பாலியல் அக்கறையின்மை. ஒரு ஐம்பது வயதுப் பெண் கூட ஒரு இளைஞனிடம் பழகும் போது செக்ஸ் குறித்த பயத்துடனே இருக்கிறார். இது விசித்திரமானது. ஏன் பெண்கள் இப்படி இருக்கிறார்கள்? இது ஆண்கள் உருவாக்கினதா அல்லது பெண்களே உருவாக்கி தக்க வைத்ததா?
பெண் உடல் மீது ஆண் பிரயோகிக்கும் அதிகாரம், அவன் அதை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த நினைப்பது பற்றி விவாதிக்கும் போது தன் உடலை பெண் அவ்வாறு கட்டமைப்பது ஏன் என்றும் நாம் கேட்க வேண்டும். பெண் ஏன் தன்னை ஒரு “ஆணுக்கான உடலாய்” தன்னை தொடர்ந்து காட்டிக் கொள்கிறார்? இங்கிருந்து தான் பிரச்சனை துவங்குகிறது.
இதை நாம் ஓரின சேர்க்கையாளர்களை (ஆண் பெண் இருவரிலும்) கவனித்தால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஓரினச் சேர்க்கையாளர்களில் ஒரு ஆண் எப்போதும் தன்னை “செக்ஸியாக”, “விருப்பத்துக்கு உரியவனாக” காட்டிக் கொண்டிருப்பான். மற்றவன் அவனை நாடுபவனாக, கட்டுப்படுத்த முனைபவனாக இருப்பான். இருவருக்குமான மோதல் தான் அவர்களின் உறவின் மையம்.
ஏன் ஓரினச் சேர்க்கையாளர்கள் இடையே கூட ஒருவர் “ஆணாகவும்” மற்றவர் “பெண்ணாகவும்” இருக்க நேர்கிறது? ஏன் ஒருவர் செக்ஸியாகவும் மற்றவர் அந்த செக்ஸை “அடைய விழைபவராகவும்” இருக்கிறார்?
இந்த இரண்டு தரப்பினருக்கு இடையிலும் உள்ள முரண் தான் ஈர்ப்பின் மையம். அதாவது சமத்துவமின்மை தான் காதலின் மையம். காதலிப்பவர்கள், காதலித்தவர்களுக்கு தெரியும் – ஒருவர் அடக்கப்படுபவராகவும் மற்றவர் அடக்க நினைப்பவராகவும் இருவரும் மாறி மாறி இருப்பார்கள். பாத்திரங்கள் மாறிக் கொண்டே இருக்கும். இது தான் காதலின் சுவாரஸ்யம். சமத்துவமான காதலோ தாம்பத்யமோ முழுக்க அசுவாரஸ்யமாக இருக்கும். பாலியல் சமத்துவம் பேசுவோர் இந்த பிரச்சனையை என்ன செய்ய போகிறார்கள்? தொடர்ந்து விவாதிப்போம்.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்


கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இதை பொதுவில் யாரும் விவாதிக்க தயாராயில்லை என்பது தான் துரதிர்ஷ்டம் .

இதில் அபிலாஷின் பதிலிலேயே எனக்கு உடன்பாடில்லை .

இங்கு இதை ஒரு சிறுபான்மையினரின் "தான்" என்கிற அந்த சுய அடையாளத்தின் குறியீடாக கொள்பவர்கள் எள்ளளவு பேர் ? அப்படியே ஆனாலும், முதலாவதாக . அது பெண் , ஆண் ஆகிய இருபாலருக்கும் பொதுமையானதாக இருக்க வேண்டாமா ? இரண்டாவதாக இதை சம்பந்தப்பட்ட மதம் எப்படி அணுகுகிறது என்பது தானே முதன்மையான பிரச்சனை .

இந்துக்கள் நெற்றியில் திருநீறு பூசி கொள்வது கூட அவர்கள் தங்களின் மத பெருமிதத்தின் காரணமாகவே இருக்க வேண்டும் . ஆனால் அது பொதுமையானது . ஆனால் , பெண்கள் தாலி அணிந்து கொள்வது என்பதை எப்படி பெருமிதமாக கருத இயலும் ?

இங்கு பெருமிதம் என்பதே அபத்தம் என்பதையும் தாண்டியே அவர்களின் பண்பாட்டு அடையாளமாக இதைஎல்லாம் ஏற்றுக் கொண்டாலும் பெண்களின் மீதான சில திணித்தல்களை, நேர் கோட்டில் எடுக்க இயலாது என்றே கருதுகிறேன் .
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
"சமத்துவமான காதலோ தாம்பத்யமோ முழுக்க அசுவாரஸ்யமாக இருக்கும்." 100%

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...