முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீளம்

கணினியில் நீளமான வாக்கியங்களை வாசிப்பது சிரமம் என்பதாலே நாம் இன்று சிறு வாக்கியங்களாய் எழுதி பழகி விட்டோம். நீளவாக்கியங்கள் இன்று அச்சிதழ்களில் கூட வழக்கொழிந்து விட்டன.
இதை நான் துல்லியமாய் உணர்ந்தது சமீபத்தில் ஆண்டிராய்ட் போனில் உள்ள நோட்ஸ் செயலியில் எழுத ஆரம்பித்த போது தான். சமீபத்தில் இரண்டு பத்து பக்க கட்டுரைகளின் பாதியை நான் செல்பேசியில் எழுதினேன். அப்போது என் வாக்கியங்கள் மேலும் சின்னதாய் அமைவதை கவனித்தேன். குறிப்பாய் மிச்ச கட்டுரையை கணினியில் எழுதி முடித்த பின் கட்டுரையின் முதல் பாதி அதன் வடிவத்தை பொறுத்து தனித்து இருப்பதை கவனித்தேன். மே மாத உயிர்மைக்கு “கடவுள் இருக்கிறாரா?” என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதன் ஆரம்ப பத்திகளில் சொற்றொடர்கள் நறுக்கி தூவினது போல் இருக்கும். ஆனால் கணினியில் எழுதின பிற்பகுதியின் வாக்கியங்கள் நீளமாக இருக்கும்.


 நீளத்தை பொறுத்த மட்டில் கணினி நம் கட்டுரை, கதைகளின் நீளத்தையும் தீர்மானிக்கிறது. ஒரு மணிநேரத்தில் இவ்வளவு எழுதலாம் என ஒவ்வொருவருக்கும் ஒரு திறன் உள்ளது. அவ்வளவு எழுதினதும் இயல்பாகவே போதும் எனத் தோன்றி விடும். சோதித்துப் பார்த்தால் சொற்களின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கும். பேஸ்புக்கில் 150 சொற்களில் எழுதுகிற ஒருவருக்கு அதற்கு மேல் எழுதினால் களைப்பாகும். இழுவையாய் தோன்றும். பிளாகில் ஐநூறு சொற்களில் எழுதுகிறவர்களுக்கு ஐநூறைத் தொட்டதுமே நிறுத்தத் தோன்றும். அச்சு பத்திரிகைக்கு கட்டுரை எழுதுகிறவருக்கு ஆயிரம் வார்த்தைகள் எழுதினதும் கை தானாகவே நின்று விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.