சில கோயில்களில் பெண்கள் நுழைவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் என கோரும் வேளைகளில் வலதுசாரிகள் முன்வைத்த முக்கிய வாதம் அதை பெரும்பாலான பெண்களே விரும்புவதில்லை என்பது.
ஆனால் இப்போது ஷனி ஷிங்னாபூரில் உள்ள கோயிலில் பெண்கள் நுழைவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. உடனே அங்கே வழிபட ஆயிரக்கணக்கான பக்தைகள் குவிந்துள்ளார்கள். இவர்கள் எல்லாம் "இந்துப் பெண்கள்" இல்லையா? சபரி மலையில் உள்ள தடை நீக்கப்படும் போதும் இதுவே நிகழும். மக்களுக்கு இன்று மரபார்ந்த வழமைகள், விதிமுறைகள் முக்கியமே அல்ல. இந்த மாதிரி மரபுகளே ஒரு சில ஆண்களின் அதிகார தந்திரம் மட்டுமே, பொதுமக்கள் இவற்றை ஏற்கவில்லை என நிரூபணமாகி விட்டது.