Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அப்படி ஒன்றும் இருக்காதே?

வா.மணிகண்டனின் சமீபத்தைய பதிவில் இருந்து….
மூன்றாம் நதி நாவலை எழுதி முடித்தவுடன் மகேஷூக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர் வாசித்துவிட்டுஅபிலாஷ், விநாயகமுருகன், செல்லமுத்து குப்புசாமி எழுதுகிற நாவலை எல்லாம் படிக்கணும்ன்னு ஆசை..ஆனா அது சாத்தியமேயில்லைஎன்றார். விழியிழந்தோர் வாசிப்பதற்கு தோதான வடிவங்களில் தமிழில் எந்தப் புத்தகமும் வெளிவருவதில்லை என்பதுதான் காரணம். மகேஷ் வருத்தப்பட்டார்.


வா.மணிகண்டன் நிறைய விசயங்களில் முன்னோடி. அவ்வப்போது கவிதை எழுதி ரகசியமாய் இலக்கிய எழுத்தாளராய் வாழ்ந்த அவர் தினமும் இரண்டு பதிவுகள் எழுதி ஒரு பிரபல பிளாகராகி, அதில் இருந்து சமூக சேவகராகி … இப்படி பல அவதாரங்கள். ஆரம்பிக்கும் எதையும் அரைகுறையாய் விடாமல் ஜெயித்துக் காட்டி விடுவார். நானெல்லாம் மொபைல் செயலிகளை இருட்டில் மின்மினிகளை பிடிப்பது போல் முயன்று கொண்டிருக்கும் போது அவர் தன் நிசப்தம்.காமுக்கு என்று தனியே ஒரு செயலி ஆரம்பித்து பிளேஸ்டோரில் அறிமுகப்படுத்தினார். இப்போது தன் ”மூன்றாம் நதி” நாவலுக்கு ஒலிவடிவம் கொண்டு வந்திருக்கிறார். ஒரு மென்பொருள் பயன்படுத்தி நாவலை ஒலிவடிவில் உருமாற்றி இருக்கிறார். எந்திரக் குரல் தான் என்றாலும் என்ன தான் இருக்கிறது என தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவும் (இதன் தொடுப்பு மணிகண்டனின் இணையதளத்தில்).
என்னுடைய நாவலையும் திருப்பதி மகேஷ் போன்ற அவரது விழியற்ற நண்பர்கள் குறிப்பிட்டு அதற்கு ஒலி வடிவம் வராதா என கேட்டிருக்கிறார்கள். இனி அவர்களுக்காக. தில்லி பல்கலையில் ஆங்கில பேராசிரியராக உள்ள ஒரு நண்பர் இருக்கிறார். பார்வையற்றவர். அபாரமான வாசகர். அவர் தி.ஜா ஆரம்பித்து சமீபத்தில் வந்த ”கறுப்பர் நகரம்” வரை பல நாவல்களை ஒலி வடிவில் மாற்றி வைத்திருக்கிறார். எனக்கு கூட ஒரு பத்து ஒலி நாவல்களை தரவிறக்கி கொடுத்தார். எந்திரக் குரல் அல்ல நிஜமான குரலால் வாசிக்கப்பட்ட நாவல்கள். இதற்கென வாசித்து பதிவு பண்ணி கொடுப்பதற்கு அவர் சென்னையில் ஒரு அணியை சேர்த்து வைத்திருக்கிறார். சமீபத்தில் என் “ரசிகன்” நாவலுக்கு ஒலிவடிவம் கொடுக்கப் போவதாய் சொன்னார். அவருக்கு ஒரு சிறு சந்தேகம். “ஒரு பெண் தான் வாசிக்கப் போகிறார். அவருக்கு சங்கடம் ஏற்படுத்தும் கசமுசா சமாச்சாரங்கள் ஒன்றும் நாவலில் வராதே?” என்று கேட்டார். எழுத்தாளன் என்று இதையெல்லாம் ஒத்துக் கொள்ள போகிறான்? ”சேச்சே ரொம்ப சுத்தமான நாவலுங்க. குழந்தைங்களே படிக்கலாம்” என்றேன். ”அது மட்டுமில்ல, இது முழுக்க ஆண்களின் உலகம் பற்றின நாவல் என்பதால் ஒரு பெண் குரலில் இதை கேட்டால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும்”. அவரும் சமாதானமாகி போனை வைத்து விட்டார்.
 அரைமணிநேரம் கழித்த பிறகு தான் எனக்கே ஒரு விசயம் உறைத்தது. புணர்ச்சியையும் உளவியலையும் தொடர்பு படுத்தும் ஒரு graphicஆன உரையாடல் நாவலின் துவக்கத்தில் வருகிறதே என. அதற்கு ஒரு பின்னணி உள்ளது:
பொதுவாக பதின்வயது பையன்கள் கொஞ்சம் வயதில் மூத்த அண்ணன்களிடம் நட்பு கொள்ளும் போது செக்ஸ் குறித்து பேசுவதில் ஆர்வம் காட்டுவார்கள். இது ஒருவிதம் என்றால் அறிவுஜீவிகள் இளைஞர்களை அதிர்ச்சியூட்டுவதற்காய் அவர்கள் எதிர்பாராத வேளையில் செக்ஸ் பற்றி பட்டவர்த்தமாய் உரையாடுவார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தொண்ணூறுகளின் துவக்கத்தில் கல்லூரி மாணவராய் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை ஒருமுறை குறிப்பிட்டார். நண்பர் அப்போது சென்னை பல்கலை கழக விடுதியில் இருந்தார். ஒரு மூத்த எழுத்தாளர் அடிக்கடி விடுதிக்கு வருவாராம். நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்து புன்னகைத்திருக்கிறாரே ஒழிய பேசினதில்லை. ஒருநாள் மூத்த எழுத்தாளர் நேராகவே நண்பரின் அறைக்கு வந்து உட்கார்ந்தார். பேசிக் கொண்டிருக்கும் போது சட்டென கேட்டார் “நீங்கள் மாஸ்டர்பேஷன் பண்ணுவதுண்டா?”. அதன் பிறகு நண்பர் மூத்த எழுத்தாளரை பார்த்தாலே தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.
”ரசிகன்” நாவலின் மையபாத்திரமான சாதிக் கொஞ்சம் இப்படியான ஒரு அறிவுஜீவி. சின்னப் பையன்கள் சதா அவனோடே திரிவார்கள். கதைசொல்லி ஒரு பதின்வயதினன். அவன் சாதிக்கிடம் முதன்முதலாய் அறையில் பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் அது. அரசியல், தத்துவம் என பேசிக் கொண்டிருக்கும் போது சாதிக் ரொம்ப தீவிரமாய் செக்ஸ் பற்றி பேச ஆரம்பிப்பான். இந்த இடத்தை அப்பெண் உரத்து வாசித்தால் எப்படி இருக்கும் என எனக்கு கொஞ்சம் நெருடலாய் இருந்தது. அதன் பிறகு நண்பரை அழைத்து திருத்தினால் அது சங்கோஜமாய் இருக்கும் என விட்டு விட்டேன்.

அதன் பிறகு ஒலி வடிவத்திற்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை. அவர் பக்கம் இருந்து எனக்கும் அழைப்பில்லை. எதற்கு அமைதியான குளத்தில் கல்லெறிய வேண்டும் என நானும் அமைதியாக இருந்து விட்டேன்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...