முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சில நிமிட சிங்கப்பூர்


இன்று மதியம் அடையார் நோக்கி சென்று பைக்கில் கொண்டிருந்தேன். சாலை கிட்டத்தட்ட காலி. சின்னமலை சிகனலில் வழக்கமாய் வாகனங்கள் இரண்டு கிளைகளில் இருந்து ஒரே நேரம் மோதுவது போய் பாய்வார்கள். இன்று ஒரு போக்குவரத்து காவலர் மெயின் கிண்டியில் இருந்து வருகிற வாகனங்களை தடுத்தி நிறுத்தி என்னை போக அனுமதித்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. எப்போதும் ரெண்டு பக்கத்தில் இருந்து சாலையில் பாய்கிற பொதுமக்கள், இடம் வலம் என கண்டமேனிக்கு திரும்பும் பைக்குகள் பற்றி அஞ்சிக் கொண்டே ஓட்டுவேன். இன்று யாருமே குறுக்கிட வில்லை. குறிப்பாய் அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் சாலை குறுக்கே பாய தயாராக தற்கொலை படை போல நிற்கும் ஐம்பது பேரை யாரோ ஒருவர் தடுத்து நிறுத்தி வைத்திருந்தார். அவர்களும் பொறுமையாய் நின்றிருந்தனர். அப்போது தான் எனக்கு தோன்றியது. என்ன இவ்வளவு ஒழுங்கது, ஒரே நாளில் நம் நாடு சிங்கப்பூர் ஆகி விட்டதா?

 தடையின்றி நிம்மதியாய் மத்திய கைலாஸ் சிக்னலை அடைந்த போது சாலையில் நானும் எனக்கு பின்னால் மற்றொரு பைக் மட்டுமே. போக்குவரத்து காவலர் ஒருவர் என்னை நோக்கி எதுவோ சொன்னார். எனக்கு புரியவில்லை. அதன்பிறகு அவர் ரொம்ப பதற்றமாய் எனக்கு காதுகேட்காதா என சைகை மொழியில் கேட்டார். ஹெல்மட் காரணமாய் உண்மையிலே கேட்கவில்லை. ஒதுங்கு என மீண்டும் சைகை காட்டி முகத்தை அஷ்டகோணலாக்கினார். நானும் ஒதுங்கினேன். அப்போது என்னை கடந்து நான்கு போலீஸ் வாகனங்களும் நடுவில் ஒரு ஆம்புலன்ஸும் போனது. அவர்கள் போய் முடிந்த பின் சாலை பழையபடி தேனிகூட்டை கலைத்தது போல் ஆனது.

 என் ஊர் சில நிமிடங்களாவது சிங்கப்பூர் ஆக ஒரு விஐபி உடல் நலமிழந்து ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரி போக வேண்டி இருக்கிறது.

கருத்துகள்

Senthil Prabu இவ்வாறு கூறியுள்ளார்…
:)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.