முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவின் தேர்தல் வெற்றியும் சாதியும்

Image result for கோகுல்ராஜ் படுகொலை

நேற்று ஒரு நண்பருடன் அதிமுகவின் எதிர்பாராத வெற்றி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் இம்முறை கொங்கு வேளாள கவுண்டர்கள் ஜெயாவுக்கு கொடுத்துள்ள பெரும் ஆதரவு எப்படி இவ்வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என குறிப்பிட்டார். இதனுடன் எப்போதும் அதிமுகவுக்கு இணக்கமான தேவர்களின் வாக்குகளும் பெருவாரியாய் சேர்ந்து கொள்கின்றன. ராமதாஸுக்கு போக வேண்டிய வன்னியர் வாக்குகளையும் ஜெயலலிதா இழுத்துக் கொள்கிறார்.


 நண்பர் சொன்னார் “இளவரசனையும் கோகுல்ராஜையும் பலி கொடுத்த குருதி கொண்டு தான் இத்தேர்தலில் அவர் வெற்றி வாகை சூடியிருக்கிறார்”. கடந்த சில ஆண்டுகளில் வன்னியர்கள், கௌண்டர்கள், தேவர்கள் ஆகியோருக்கு இருந்த பிரதான கவலை மாற்று சாதி திருமணம் அல்லது காதல். தம் பெண்கள் தலித்துகளால் கவரப்படுகிறார்கள் எனும் பீதி. இதை முதலீடாக்கி சாதிய அமைப்புகள் வன்முறையை தூண்டுகின்றன. ஆணவக்கொலைகள் செய்கின்றன. ஆணவக் கொலைகள் இங்கு ஆண்டாண்டு காலமாய் நடக்கின்றன தாம். ஆனால் அதிமுக ஆட்சியில் தான் மொத்த தமிழகத்துக்கே காட்சிப்படும்படியாய் அது பொதுவெளியில் வைத்து நிகழ்த்தப்படுகிறது. அதை முன்வைத்து எண்ணற்ற மத்திய சாதியினர் ஒரு புள்ளியில் திரட்டப்படுகிறார்கள். இவ்வளவு வெளிப்படையாய் ஆணவக்கொலைகளை நிகழ்த்தியதும் மிரட்டல்கள் விடுத்ததும் கொலைகளை செய்தவர்கள் துணிச்சலாய் மீடியாவுக்கு பேட்டி கொடுத்ததும் பொதுமேடைகளில் ”தலையை வெட்டுவேன்” என ஆரவாரிப்பதும் நடந்தது. அரசு ஒரு புன்னகையுடன் வேடிக்கை பார்த்தது. இதன் பின்னால் அதிமுக அரசின் ஒரு தெளிவான திட்டம் இருந்தது.

Image result for கோகுல்ராஜ் படுகொலை


ஆணவக்கொலை குற்றவாளிகளை உடனடியாய் தண்டிக்கவோ கலவரச் சூழலை அடக்கவோ செய்யாமல் இம்மூன்று சாதிகளுக்கும் ஜெயலலிதா ஒரு மறைமுக செய்தி விடுத்தார்:“ பிள்ளைக்ளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு தாய்க்கு தான் தெரியும். ஆகையால் பிள்ளைகளே நீங்கள் துணிச்சலாய் விளையாடுங்கள். இந்த தாய் தடுக்க மாட்டேன்” இந்த “பேருதவிக்கு” பதிலாகத் தான் ஆதிக்க சாதியினர் அதிமுகவுக்கு பெருவாரியாய் ஓட்டளித்திருக்கிறார்கள். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு பின்னால் எத்தனையோ பேரின் அழுகுரல்களும் அப்பாவிகளின் குருதியும் மறைந்துள்ளன.  

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
true
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அவன் அவன் சாதியிலே கல்யாணம் பண்ணுங்க . எதுக்கு வேற சாதி? உங்க சாதியே உங்களுக்கு பிடிக்கல. பின் எப்படி மற்ற சாதிக்காரன் மதிப்பான். உங்களுக்குதான் தலித்து இருக்கானே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.