முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரட்சி வந்து விட்டது

Image result for jesus calls

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கறுப்பர்கள் போராட்டம் நடத்தியது நினைவிருக்கும். அப்போது அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சி என உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதினார். அமெரிக்கா அதற்கு பின் ஏகாதிபத்தியத்தை வேறறுத்து சோஷலிஸ நாடானதா என்பதை நான் தினமும் டிவியிலும் தினசரிகளிலும் தேடி வருகிறேன். மீடியா என்பது முதலாளித்துவ கூலிகளின் கூடாரம் அல்லவா. அவர்கள் நான் தேடும் அந்த செய்தியை தவிர வேறு எல்லா தறுதலை மேட்டர்களையும் வெளியிடுகிறார்கள்.
 ஆறு வருடங்களுக்கு முன்பு துனிசியா, லிபியா, சிரியாவில் நடந்த போராட்டங்களையும் அரேபிய வசந்தம் என தோழர்கள் கொண்டாடினார்கள். அரபு தேசம் முழுக்க புரட்சி மலர்ந்து விட்டது என்றார்கள். ஆனால் அமெரிக்கா அப்படியே தான் இருக்கிறது. ”புரட்சி மலர்ந்த” நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. மீடியா அந்நாடுகள் இப்போது ”அரேபிய பனிக்காலத்தில்” இருப்பதாய் கூறுகின்றன.

 அதன் பிறகு இந்தியாவில் நிர்பயா கொல்லப்பட்ட போது பல வாரங்கள் மாணவர் போராட்டங்களால் தில்லி ஸ்தம்பித்தது. அப்போது பெண்கள் மீதான குற்றங்களுக்கு முடிவு வந்து விட்டது பார் என பேசினார்கள். அதன் பிறகு ஐ.ஐ.டி, ஹைதராபாத் பல்கலை மற்றும் ஜெ.என்.யு மாணவர் போராட்டங்கள் இந்துத்துவாவுக்கு எதிராய் மாணவர் தலைமுறை திரண்டு எழுந்து விட்டதாய் முழங்கினார்கள். அறுபதுகளின் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல மாணவர் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பி அவர்களை அரசியல்படுத்திய ஒரு மைல்கல் நிகழ்வு இது என ஒரு இலக்கிய பத்திரிகையில் ஒரு மூத்த எழுத்தாளர் எழுதிக் கூட படித்தேன். ஆனால் பெண்களுக்கு இன்றும் தில்லியில் பட்டப்பகலில் கூட பாதுகாப்பில்லை. மாணவர்கள் எந்த அரசியல் ஆர்வமும் அற்றவர்களாகத் தான் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். 99% பேர் பத்திரிகையே படிப்பதில்லை.

எது எப்படியோ ஒவ்வொரு ஆறு மாதமும் தோழர்கள் புரட்சி பற்றின செய்திகளை நமக்கு தர தவறுவதில்லை. எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் ஒரு சுவிசேச பேச்சாளரின் தீவிர விசிறி. அவர் தோன்றும் கூட்டங்களை தவற விட மாட்டான். அவன் சொல்வான் “அவர் ஏசு இதோ வந்து விட்டார் என கூறும் போது ஏசு இதோ நம் பக்கத்தில் வந்து நிற்பது போல் தோன்றும்”. எனக்கும் தோழர்கள் புரட்சி பற்றி பேசும் போது அப்படித் தான் தோன்றும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...