முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புரட்சி வந்து விட்டது

Image result for jesus calls

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கறுப்பர்கள் போராட்டம் நடத்தியது நினைவிருக்கும். அப்போது அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சி என உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதினார். அமெரிக்கா அதற்கு பின் ஏகாதிபத்தியத்தை வேறறுத்து சோஷலிஸ நாடானதா என்பதை நான் தினமும் டிவியிலும் தினசரிகளிலும் தேடி வருகிறேன். மீடியா என்பது முதலாளித்துவ கூலிகளின் கூடாரம் அல்லவா. அவர்கள் நான் தேடும் அந்த செய்தியை தவிர வேறு எல்லா தறுதலை மேட்டர்களையும் வெளியிடுகிறார்கள்.
 ஆறு வருடங்களுக்கு முன்பு துனிசியா, லிபியா, சிரியாவில் நடந்த போராட்டங்களையும் அரேபிய வசந்தம் என தோழர்கள் கொண்டாடினார்கள். அரபு தேசம் முழுக்க புரட்சி மலர்ந்து விட்டது என்றார்கள். ஆனால் அமெரிக்கா அப்படியே தான் இருக்கிறது. ”புரட்சி மலர்ந்த” நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. மீடியா அந்நாடுகள் இப்போது ”அரேபிய பனிக்காலத்தில்” இருப்பதாய் கூறுகின்றன.

 அதன் பிறகு இந்தியாவில் நிர்பயா கொல்லப்பட்ட போது பல வாரங்கள் மாணவர் போராட்டங்களால் தில்லி ஸ்தம்பித்தது. அப்போது பெண்கள் மீதான குற்றங்களுக்கு முடிவு வந்து விட்டது பார் என பேசினார்கள். அதன் பிறகு ஐ.ஐ.டி, ஹைதராபாத் பல்கலை மற்றும் ஜெ.என்.யு மாணவர் போராட்டங்கள் இந்துத்துவாவுக்கு எதிராய் மாணவர் தலைமுறை திரண்டு எழுந்து விட்டதாய் முழங்கினார்கள். அறுபதுகளின் இந்தி எதிர்ப்பு போராட்டம் போல மாணவர் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பி அவர்களை அரசியல்படுத்திய ஒரு மைல்கல் நிகழ்வு இது என ஒரு இலக்கிய பத்திரிகையில் ஒரு மூத்த எழுத்தாளர் எழுதிக் கூட படித்தேன். ஆனால் பெண்களுக்கு இன்றும் தில்லியில் பட்டப்பகலில் கூட பாதுகாப்பில்லை. மாணவர்கள் எந்த அரசியல் ஆர்வமும் அற்றவர்களாகத் தான் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். 99% பேர் பத்திரிகையே படிப்பதில்லை.

எது எப்படியோ ஒவ்வொரு ஆறு மாதமும் தோழர்கள் புரட்சி பற்றின செய்திகளை நமக்கு தர தவறுவதில்லை. எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் ஒரு சுவிசேச பேச்சாளரின் தீவிர விசிறி. அவர் தோன்றும் கூட்டங்களை தவற விட மாட்டான். அவன் சொல்வான் “அவர் ஏசு இதோ வந்து விட்டார் என கூறும் போது ஏசு இதோ நம் பக்கத்தில் வந்து நிற்பது போல் தோன்றும்”. எனக்கும் தோழர்கள் புரட்சி பற்றி பேசும் போது அப்படித் தான் தோன்றும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.