முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு விளக்கம்


 நான் ஜெயமோகனை பகடி செய்யத் தான் அக்கட்டுரை எழுதினேனா என ஒரு நண்பர் சாட்டில் வந்து கேட்கிறார். எனக்கு அப்படியான நோக்கம் ஏதும் இல்லை. (சில நேரம் கைமீறி சற்று கிண்டல் என் எழுத்தில் நுழைந்து விடுகிறது. அதற்கு துர்நோக்கம் ஒன்றுமில்லை.) புத்தக பரிந்துரைகளை எதார்த்தமாய் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா. நாம் நீண்ட காலமாய் அப்பழுக்கற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பட்டியல்கள் உருவாகின்றன என நம்பி வருகிறோம். அதனால் இந்த எழுத்தாளரை ஏன் குறிப்பிடவில்லை, இவரை எப்படி பரிந்துரைக்கலாம் என சர்ச்சிக்கிறோம். எழுத்தாளர்கள் துர்பலமான மனம் கொண்டவர்கள். உணர்ச்சி அலையில் தத்தளிப்பவர்கள். அவர்களால் புத்தகங்களை தர்க்கரீதியாய் கராறாய் மதிப்பிட இயலாது. ஒரு எழுத்தாளனின் விருப்புவெறுப்புகள் அவனது பரிந்துரைகள், பட்டியல்கள், மதிப்புரைகளில் இருந்தே தீரும்.

நாம் இன்று தேர்தல், கல்வி, குடும்பம், உறவுகள் எல்லாவற்றிலும் லட்சியத்தை விட எதார்த்தத்தை ஏற்க பழகி விட்டோம். பெண்கள் காதல் திருமணம் செய்வதற்காய் சொந்த சாதியில் நல்ல சம்பாதிக்கிற பையனாய் கருத்தாய் தேடி கண்டுபிடிக்கிறார்கள். திருப்பதியில் ஐநூறு ரூபாய் கொடுத்து வரிசையில் நிற்காமல் சாமி தரிசனம் பெற்று அதை வெளியே பெருமை தட்டுகிறோம். இலக்கியத்தில் மட்டும் ஏன் நாம் மணந்தால் மகாதேவி என முரண்டுபிடிக்க வேண்டும்? நம்முடன் இருப்பவர்களின் மன இயல்புகளை புரிந்து கொண்டு அதன்படியே அவர்களின் விமர்சனங்களின் இலக்கிய நிலைப்பாடுகளை, மதிப்பீடுகளை நாம் கச்சிதமாய் கவ்விக் கொள்ள வேண்டும்.
 இந்த வகைமையில் நீங்கள் என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் பரிந்துரைகள், விமர்சனங்கள், ஏற்புகள், நிராகரிப்புகள் அனைத்தும் பாரபட்சமானவையே. எனக்கு பிரியமானவர்களை தோளில் வைத்து கொண்டாடுவேன். அல்லாதவர்களை லேசாய் அரவணைத்து விட்டு விடுவேன். நாம் இந்த விசயத்தில் வெளிப்படையாக இருப்பதே நல்லது.
பட்டியலுக்கு தலைப்பாய் “சமகாலத்தின் சிறந்த படைப்பாளிகள்” என்று வைக்காமல் “சமகாலத்தில் எனக்கு பிரியமான படைப்பாளிகள்” என அகவய சார்புடன் வைக்கலாம். உதாரணமாய், நான் சரவணன் சந்திரனின் “ரோலக்ஸ் வாட்சுக்கு” விமர்சனம் எழுதும் போது “எனக்கு சரவணன் சந்திரனின் எழுத்து ஏன் பிடிக்குமென்றால்” என்று தான் ஆரம்பிக்கிறேன். இதை இன்றைய போக்கு எனலாம். நம்மில் பெரும்பாலானோர் புத்தகங்களை சார்புடன் தான் மதிப்பிடுகிறோம். நெல்லை எழுத்தாளர்களில் யாருக்கு வண்ணதாசனை பிடிக்காது சொல்லுங்கள்? இடதுசாரிகள் தம் விமர்சனங்களின் ஊடே பரஸ்பரம் சால்வை போர்த்துவதில்லையா? இந்துத்துவர்கள் இணையத்தில் ஒன்று சேர்ந்து தமக்கான எழுத்தாளர்களை முன்னெடுப்பதில்லையா? கறுப்பானவர்கள், சிகப்பானவர்கள், பெண்கள், சாதி அபிமானிகள், ஒரே கடையில் புத்தகம் வாங்குபவர்கள், அங்கு ஒரு கூட்டத்தில் வாராவாரம் சந்திப்பவர்கள், இவை எல்லாம் ஏன் புகைப்படம் எடுப்பவர்கள் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இந்த சங்கங்களின் ஊடே தான் நம் மதிப்பீடுகள் நிகழ முடியும். இதற்காய் நாம் வெட்க வேண்டியதில்லை. ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நான் ஆரம்பத்தில் லட்சிய பிழம்பாய் பாரபட்ச இலக்கிய மதிப்பீடுகளை சாடி வந்தேன். ஆனால் அது ஒரு முட்டாள்தனமான நிலைப்பாடு என சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். சார்புநிலை தான் மனித இருப்பின் அடிப்படை இயல்பு.

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதே முதிர்ச்சி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...