Skip to main content

ஒரு விளக்கம்


 நான் ஜெயமோகனை பகடி செய்யத் தான் அக்கட்டுரை எழுதினேனா என ஒரு நண்பர் சாட்டில் வந்து கேட்கிறார். எனக்கு அப்படியான நோக்கம் ஏதும் இல்லை. (சில நேரம் கைமீறி சற்று கிண்டல் என் எழுத்தில் நுழைந்து விடுகிறது. அதற்கு துர்நோக்கம் ஒன்றுமில்லை.) புத்தக பரிந்துரைகளை எதார்த்தமாய் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா. நாம் நீண்ட காலமாய் அப்பழுக்கற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பட்டியல்கள் உருவாகின்றன என நம்பி வருகிறோம். அதனால் இந்த எழுத்தாளரை ஏன் குறிப்பிடவில்லை, இவரை எப்படி பரிந்துரைக்கலாம் என சர்ச்சிக்கிறோம். எழுத்தாளர்கள் துர்பலமான மனம் கொண்டவர்கள். உணர்ச்சி அலையில் தத்தளிப்பவர்கள். அவர்களால் புத்தகங்களை தர்க்கரீதியாய் கராறாய் மதிப்பிட இயலாது. ஒரு எழுத்தாளனின் விருப்புவெறுப்புகள் அவனது பரிந்துரைகள், பட்டியல்கள், மதிப்புரைகளில் இருந்தே தீரும்.

நாம் இன்று தேர்தல், கல்வி, குடும்பம், உறவுகள் எல்லாவற்றிலும் லட்சியத்தை விட எதார்த்தத்தை ஏற்க பழகி விட்டோம். பெண்கள் காதல் திருமணம் செய்வதற்காய் சொந்த சாதியில் நல்ல சம்பாதிக்கிற பையனாய் கருத்தாய் தேடி கண்டுபிடிக்கிறார்கள். திருப்பதியில் ஐநூறு ரூபாய் கொடுத்து வரிசையில் நிற்காமல் சாமி தரிசனம் பெற்று அதை வெளியே பெருமை தட்டுகிறோம். இலக்கியத்தில் மட்டும் ஏன் நாம் மணந்தால் மகாதேவி என முரண்டுபிடிக்க வேண்டும்? நம்முடன் இருப்பவர்களின் மன இயல்புகளை புரிந்து கொண்டு அதன்படியே அவர்களின் விமர்சனங்களின் இலக்கிய நிலைப்பாடுகளை, மதிப்பீடுகளை நாம் கச்சிதமாய் கவ்விக் கொள்ள வேண்டும்.
 இந்த வகைமையில் நீங்கள் என்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் பரிந்துரைகள், விமர்சனங்கள், ஏற்புகள், நிராகரிப்புகள் அனைத்தும் பாரபட்சமானவையே. எனக்கு பிரியமானவர்களை தோளில் வைத்து கொண்டாடுவேன். அல்லாதவர்களை லேசாய் அரவணைத்து விட்டு விடுவேன். நாம் இந்த விசயத்தில் வெளிப்படையாக இருப்பதே நல்லது.
பட்டியலுக்கு தலைப்பாய் “சமகாலத்தின் சிறந்த படைப்பாளிகள்” என்று வைக்காமல் “சமகாலத்தில் எனக்கு பிரியமான படைப்பாளிகள்” என அகவய சார்புடன் வைக்கலாம். உதாரணமாய், நான் சரவணன் சந்திரனின் “ரோலக்ஸ் வாட்சுக்கு” விமர்சனம் எழுதும் போது “எனக்கு சரவணன் சந்திரனின் எழுத்து ஏன் பிடிக்குமென்றால்” என்று தான் ஆரம்பிக்கிறேன். இதை இன்றைய போக்கு எனலாம். நம்மில் பெரும்பாலானோர் புத்தகங்களை சார்புடன் தான் மதிப்பிடுகிறோம். நெல்லை எழுத்தாளர்களில் யாருக்கு வண்ணதாசனை பிடிக்காது சொல்லுங்கள்? இடதுசாரிகள் தம் விமர்சனங்களின் ஊடே பரஸ்பரம் சால்வை போர்த்துவதில்லையா? இந்துத்துவர்கள் இணையத்தில் ஒன்று சேர்ந்து தமக்கான எழுத்தாளர்களை முன்னெடுப்பதில்லையா? கறுப்பானவர்கள், சிகப்பானவர்கள், பெண்கள், சாதி அபிமானிகள், ஒரே கடையில் புத்தகம் வாங்குபவர்கள், அங்கு ஒரு கூட்டத்தில் வாராவாரம் சந்திப்பவர்கள், இவை எல்லாம் ஏன் புகைப்படம் எடுப்பவர்கள் கூட சங்கம் வைத்திருக்கிறார்கள். இந்த சங்கங்களின் ஊடே தான் நம் மதிப்பீடுகள் நிகழ முடியும். இதற்காய் நாம் வெட்க வேண்டியதில்லை. ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நான் ஆரம்பத்தில் லட்சிய பிழம்பாய் பாரபட்ச இலக்கிய மதிப்பீடுகளை சாடி வந்தேன். ஆனால் அது ஒரு முட்டாள்தனமான நிலைப்பாடு என சமீபத்தில் தான் புரிந்து கொண்டேன். சார்புநிலை தான் மனித இருப்பின் அடிப்படை இயல்பு.

எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதே முதிர்ச்சி!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...