Skip to main content

Exit poll முடிவுகள்: தமிழகம் எனும் கோல் போஸ்ட்

Image result for thanthi tv rangaraj pandey

நான்கு Exit poll முடிவுகள் தி.மு.கவே வெல்லும் என கூறியிருப்பது இன்றைய தந்தி டி.வியில் விவாதப்பொருள். பாண்டே முகம் தொங்கிப் போயிருந்தது. அவரது உடல்மொழியின் சோர்வு சிறப்பு விருந்தினர்களையும் தொற்றிக் கொள்ள மொத்த ஷோவின் மூடுமே இழவு விழுந்தாற் போல் ஆகி விட்டது. இந்த exit poll செல்லுபடியாகாது என்று பல குரல்களிலாய் எல்லாரும் ஒன்றாய் சொன்னார்கள். பணப்பட்டுவாடாவுக்கு முன்பான ஆய்வு என்பதால் இதை நம்ப முடியாது என்றார் மாலன். பணப்பட்டுவாடா தான் தீர்மானிக்கும் காரணி என்றால் அ.தி.மு.க தானே 234 தொகுதிகளையும் அள்ளிக் கொள்ள வேண்டும்? அப்படி இல்லை என்று தானே Exit poll முடிவுகள் சொல்லுகின்றன.


அ.தி.மு.க எந்தெந்த ஆதிக்க சாதிகளுக்கு எல்லாம் சார்பாய் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பதை துல்லிய புள்ளி விபரங்கள் கொடுத்து (தேவர்களுக்குள் உள்ள பிரிவுகள் படியெல்லாம் எப்படி வாக்காளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்கிற அளவுக்கு சென்று), அதனால் அ.தி.மு.கவே வெல்லும் என முன்பு பேசின ரவீந்திரன் இந்த முறை அது போன்ற அபத்த புள்ளிவிபரங்களை முன்வைக்காமல் Exit poll முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தினால் இருதலைக்கொள்ளி வாக்காளர்கள் தி.மு.க பக்கம் சாய்ந்திருக்கலாம் என்றார். இந்தளவுக்கு மக்களின் தீர்ப்பை நாம் எளிமைப்படுத்த வேண்டுமா? மக்கள் என்ன ஆட்டுமந்தையா?
இந்த விவாதத்தில் மாலனும் புதிய தலைமுறை விவாதத்தில் பா.ம.க ஆதரவாளரும் தி.மு.கவும் அதிமுகவும் மக்களுக்கு பணம் கொடுத்தன என்றார். தி.மு.க பணம் அளித்திருக்கலாம். ஆனால் அதை அ.தி.மு.கவின் ஏழாயிரம் கோடியுடன் ஒப்பிடலாமா? இதன் மூலம் அ.தி.மு.கவை காப்பாற்ற விரும்புகிறார்களா?
ஒருவேளை தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு வெற்றியை அறிவித்தால் பின் சப்பைக்கட்டு கட்டுவதற்கான ஒரு பயிற்சியாகத் தான் தந்தி டிவியில் பாண்டேவின் பேச்சை பார்க்கிறேன். ஆனால் ஒரே வாரத்தில் தந்தி டி.வி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தி.மு.க அபிமானி ஆகி விடும் என்பது ஊர் அறிந்த கதை. அப்போது இந்த அறிவாளிகள் எங்கே போவார்கள்?
மக்கள் நலக் கூட்டணியினரிடம் இப்போது சட்டென ஒரு சோர்வைக் காண்கிறேன். அவர்கள் நம்பிக்கை இன்றி காணப்படுகிறார்கள். Exit poll முடிவுகளும் அவர்களுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்கின்றன. ஆனால் எனக்கு ம.ந.கூ முக்கியமான எண்ணிக்கையை பெறும் எனப் படுகிறது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் கிட்டத்தட்ட சமமான இடங்களைப் பெறும் நிலை வருமா? ஒருவேளை கணிசமான பேர் பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களித்திருந்தால் சாத்தியம். அல்லது அ.தி.மு.கவின் பல இலவசத் திட்டங்களினால் பயன்பெற்றவர்கள் அவ்வாறு வாக்களிக்கலாம். Exit poll முடிவுகள் கூட மக்கள் மனநிலையை முழுக்க கணிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். நம் ஊகங்கள் கூட தவறாகலாம்.
 எனக்கென்னவோ இரு திராவிட கட்சிகளில் ஒன்று பெரும் சரிவை சந்திக்கும் என தோன்றுகிறது. தமிழக மக்களுக்கு திராவிட கட்சிகளுடனான உறவு மகாபாரத்தில் திரௌபதியின் காதலைப் போன்றது. அவள் பாண்டவர் ஐவரில் அர்ஜுனனை நேசித்தாளா அல்லது வீமனையா? அல்லது அவள் ஆழ்மனம் கர்ணனுக்காய் ஏங்கியதா? அல்லது ஒரு கட்டத்தில் அவள் இந்த ஐவருக்கும் துரியோதனனே மேல் என நினைத்திருப்பாளா? யாருக்கும் தெரியாது. தமிழர்களும் அப்படித் தான். தமிழக வாக்காளர்கள் பாண்டவர்களை நேசிக்கும் போது கௌரவர்கள் மீது கோபத்தை காட்டுவார்கள். பிறகு பாண்டவர்கள் மீது கோபத்தை காட்ட கௌரவர்களுக்கு ரோஜா நீட்டுவார்கள். மூன்றாவதாய் ஒருவர் கோல் அடிக்க இந்த களத்தில் வாய்ப்பில்லை. சும்மா ஓடி பாய்ந்து விழுந்து பந்தை பாஸ் பண்ணலாம்!  




Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...