முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Exit poll முடிவுகள்: தமிழகம் எனும் கோல் போஸ்ட்

Image result for thanthi tv rangaraj pandey

நான்கு Exit poll முடிவுகள் தி.மு.கவே வெல்லும் என கூறியிருப்பது இன்றைய தந்தி டி.வியில் விவாதப்பொருள். பாண்டே முகம் தொங்கிப் போயிருந்தது. அவரது உடல்மொழியின் சோர்வு சிறப்பு விருந்தினர்களையும் தொற்றிக் கொள்ள மொத்த ஷோவின் மூடுமே இழவு விழுந்தாற் போல் ஆகி விட்டது. இந்த exit poll செல்லுபடியாகாது என்று பல குரல்களிலாய் எல்லாரும் ஒன்றாய் சொன்னார்கள். பணப்பட்டுவாடாவுக்கு முன்பான ஆய்வு என்பதால் இதை நம்ப முடியாது என்றார் மாலன். பணப்பட்டுவாடா தான் தீர்மானிக்கும் காரணி என்றால் அ.தி.மு.க தானே 234 தொகுதிகளையும் அள்ளிக் கொள்ள வேண்டும்? அப்படி இல்லை என்று தானே Exit poll முடிவுகள் சொல்லுகின்றன.


அ.தி.மு.க எந்தெந்த ஆதிக்க சாதிகளுக்கு எல்லாம் சார்பாய் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்பதை துல்லிய புள்ளி விபரங்கள் கொடுத்து (தேவர்களுக்குள் உள்ள பிரிவுகள் படியெல்லாம் எப்படி வாக்காளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்கிற அளவுக்கு சென்று), அதனால் அ.தி.மு.கவே வெல்லும் என முன்பு பேசின ரவீந்திரன் இந்த முறை அது போன்ற அபத்த புள்ளிவிபரங்களை முன்வைக்காமல் Exit poll முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தினால் இருதலைக்கொள்ளி வாக்காளர்கள் தி.மு.க பக்கம் சாய்ந்திருக்கலாம் என்றார். இந்தளவுக்கு மக்களின் தீர்ப்பை நாம் எளிமைப்படுத்த வேண்டுமா? மக்கள் என்ன ஆட்டுமந்தையா?
இந்த விவாதத்தில் மாலனும் புதிய தலைமுறை விவாதத்தில் பா.ம.க ஆதரவாளரும் தி.மு.கவும் அதிமுகவும் மக்களுக்கு பணம் கொடுத்தன என்றார். தி.மு.க பணம் அளித்திருக்கலாம். ஆனால் அதை அ.தி.மு.கவின் ஏழாயிரம் கோடியுடன் ஒப்பிடலாமா? இதன் மூலம் அ.தி.மு.கவை காப்பாற்ற விரும்புகிறார்களா?
ஒருவேளை தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு வெற்றியை அறிவித்தால் பின் சப்பைக்கட்டு கட்டுவதற்கான ஒரு பயிற்சியாகத் தான் தந்தி டிவியில் பாண்டேவின் பேச்சை பார்க்கிறேன். ஆனால் ஒரே வாரத்தில் தந்தி டி.வி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தி.மு.க அபிமானி ஆகி விடும் என்பது ஊர் அறிந்த கதை. அப்போது இந்த அறிவாளிகள் எங்கே போவார்கள்?
மக்கள் நலக் கூட்டணியினரிடம் இப்போது சட்டென ஒரு சோர்வைக் காண்கிறேன். அவர்கள் நம்பிக்கை இன்றி காணப்படுகிறார்கள். Exit poll முடிவுகளும் அவர்களுக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்கின்றன. ஆனால் எனக்கு ம.ந.கூ முக்கியமான எண்ணிக்கையை பெறும் எனப் படுகிறது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் கிட்டத்தட்ட சமமான இடங்களைப் பெறும் நிலை வருமா? ஒருவேளை கணிசமான பேர் பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களித்திருந்தால் சாத்தியம். அல்லது அ.தி.மு.கவின் பல இலவசத் திட்டங்களினால் பயன்பெற்றவர்கள் அவ்வாறு வாக்களிக்கலாம். Exit poll முடிவுகள் கூட மக்கள் மனநிலையை முழுக்க கணிக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். நம் ஊகங்கள் கூட தவறாகலாம்.
 எனக்கென்னவோ இரு திராவிட கட்சிகளில் ஒன்று பெரும் சரிவை சந்திக்கும் என தோன்றுகிறது. தமிழக மக்களுக்கு திராவிட கட்சிகளுடனான உறவு மகாபாரத்தில் திரௌபதியின் காதலைப் போன்றது. அவள் பாண்டவர் ஐவரில் அர்ஜுனனை நேசித்தாளா அல்லது வீமனையா? அல்லது அவள் ஆழ்மனம் கர்ணனுக்காய் ஏங்கியதா? அல்லது ஒரு கட்டத்தில் அவள் இந்த ஐவருக்கும் துரியோதனனே மேல் என நினைத்திருப்பாளா? யாருக்கும் தெரியாது. தமிழர்களும் அப்படித் தான். தமிழக வாக்காளர்கள் பாண்டவர்களை நேசிக்கும் போது கௌரவர்கள் மீது கோபத்தை காட்டுவார்கள். பிறகு பாண்டவர்கள் மீது கோபத்தை காட்ட கௌரவர்களுக்கு ரோஜா நீட்டுவார்கள். மூன்றாவதாய் ஒருவர் கோல் அடிக்க இந்த களத்தில் வாய்ப்பில்லை. சும்மா ஓடி பாய்ந்து விழுந்து பந்தை பாஸ் பண்ணலாம்!  




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...