Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

விராத் கோலி: ரன் இமையம்




சமீப காலத்தில் கோலியை அடிக்கடி சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் சச்சினையும் மிஞ்சி சென்று விடுவார் என முன்னாள் இங்கிலாந்து வீரர் டொமினிக் கார்க் கூறினார். அப்போது கோலி அனைவரையும் கேட்டுக் கொண்டார் “என்னை சச்சினுடன் ஒப்பிடாதீர்கள். சங்கோஜமாய் இருக்கிறது. அவர் திறமையுடன் பிறந்தவர். நான் கடுமையாய் உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். என்னை என் அளவில் மட்டுமே மதிப்பிடுங்கள்”.

ஒருவேளை திறமையை பொறுத்த மட்டில் கோலி சச்சின் உயரத்தை எட்டாமல் இருக்கலாம். ஆனால் அவர் வருடாவருடம் குவிக்கும் மலைமலையான ரன்கள் அவரை ஒரு நவீன மேதை என கொண்டாட நம்மை தூண்டுகிறது. வேறு வழியில்லை! நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் மட்டுமே அவர் 900 ரன்களுக்கு மேல் அடித்தார். ஐ.பி.எல் வரலாற்றிலே யாரும் இவ்வளவு ரன்கள் குவித்ததில்லை. 
கோலி இந்த ஐ.பி.எல்லில் நான்கு சதங்கள் அடித்திருக்கிறார். பொதுவாக T20 ஆட்டங்களில் மட்டுமே அவர் இவ்வருடத்தில் 1544 ரன்கள் மொத்தம் எடுத்திருக்கிறார். ஏன் இது ஸ்பெஷல்?
கோலி ஒரு இயல்பான T20 பேட்ஸ்மேன் அல்ல. அவரால் கெய்ல், டிவில்லியர்ஸ் போல விருப்பப்படி சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் இல்லை. இதை அவரே ஒரு பேட்டியில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் அபாரமான ஸ்டிரைக் ரேட்டுடன் தொடர்ச்சியாய் T20யில் ரன்கள் குவிக்கிறார். மிக நெருக்கடியான கட்டங்களில் தன் அணியை காப்பாற்றி வெற்றிடைய வைக்கிறார். 2016 T20 உலகக்கோப்பையின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது இன்னிங்ஸ் அப்படியான ஒன்று.
 அந்த ஆட்டத்தின் முடிவில் ”கோலி எனும் மேதையிடம் நாங்கள் தோற்றி விட்டோம்” என ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒத்துக் கொண்டார். அந்த ஆட்டத்தில் அவர் பொறுமையாய் ஒற்றை இரட்டை ரன்கள் ஓடியே சமாளித்து வந்தார். அன்று அவர் சிற்ந்த ரிதமில் இல்லை. பந்து சரியாய் மட்டையில் படவில்லை. டைமிங் இயல்பாய் அமையவில்லை. ஆனால் கோலி இந்தியாவை இறுதி இலக்கு வரை கொண்டு போயே ஆக வேண்டும் என முனைப்பாய் இருந்தார். 15வது ஓவருக்கு பிறகு அவர் சட்டென கியர் மாற்றினார். எதிரணியின் வேகவீச்சாளர் பாக்னரின் நல்ல பந்துகளை கூட தன்னால் விருப்பபடி பவுண்டரிகளுக்கு விளாச முடியும் என காட்டினார். அந்த கடைசி ஓவர்களில் அவர் ஆடுவது கண்டு உலகமே திகைத்து நின்றது. பந்தை எங்கு வீசினாலும் எப்படியான களத்தடுப்பு அமைத்தாலும் அவரால் அதை சுலபத்தில் மீறி எல்லைகோட்டை நோக்கி பந்தை துரத்த முடிந்தது. இந்த தருணத்தில் தான் சச்சின் நமக்கு நினைவு வந்தார். பவுலர்கள் கோலியை விழுந்து வணங்காதது தான் அன்று குறை. மற்றபடி அவர்கள் முழுக்க அவரது மேதைமை முன்பு அடி பணிந்தனர்.
கோலியின் தொடர்ச்சியான ரன் குவிப்பின் ரகசியம் என்ன?
1)   பணிவு
சச்சினுக்கும் கோலிக்குமான பொதுவான குணம் இது. இருவரும் பவுலர்களை, அவர்கள் யாரென்றாலும், முதலில் மரியாதை கொடுப்பார்கள். ”சிறந்த ஆட்டநிலையில் இருக்கும் போது நமக்கு சுலபத்தில் அகங்காரம் வந்து விடும். அதை தவிர்ப்பதில் நான் மிக கவனம் காட்டுவேன்.” என கோலி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
2)   திட்டம்
 அவர் ஒவ்வொரு T20 ஆட்டத்தை துவங்கும் போது கவனமாய் ரிஸ்கான ஷாட்களை தவிர்ப்பார். மட்டையை நேராய் காட்டி ஆடுவார். முதல் இருபது பந்துகளில் சிங்கிள்ஸ், இரட்டை ஓட்டங்கள் மட்டுமே எடுப்பார். பவுண்டரி அடிப்பதென்றாலும் தரையோடு தான் டிரைவ் செய்வார். சில நாட்கள் அவர் நல்ல ரிதமில் இல்லையென்றாலும் ஒற்றை ஓட்டங்கள் கொண்டே அரைசதமாவது அடித்து விடுவார். இதை தொடர்ந்து தான் அவர் கொஞ்சம் ரிஸ்கான lofted drives ஆடத் துவங்குவார். அதுவும் மிகுந்த துல்லியத்துடன் களத்தடுப்பை பிளக்கும் விதமாய் ஷாட்களை place செய்வார். ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி தவறாது ஒரு பார்முலாவை பின்பற்றுகிறார். அவர் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. திட்டமும் உழைப்பும் புத்திசாலித்தனமும் அவரை இந்த உச்சத்துக்கு கொண்டு சேர்த்துள்ளன.
ஒரே பலவீனம்:

இந்த ஐ.பி.எல்லில் கோலி ஒரே முறை தான் off stumpக்கு வெளியே முறியடிக்கப்பட்டார். அது தில்லி அணிக்காய் ஆடும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் பந்தில். அப்பந்து off stumpஇல் விழுந்து உள்ளே வருவது போல் தோற்றம் காட்டி வெளியே ஸ்விங் ஆனது. அதை கால் பக்கமாய் திரும்பிய மட்டை கொண்டு தடுக்க முயன்ற போது கோலி பீட் ஆனார். Off stumpக்கு வெளியே இன்றும் கோலிக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர் மட்டையை நேராய் பிடித்து டிரைவ் செய்வதில்லை. இந்த சிக்கலை சரி செய்தால் அவர் விரைவில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆகி விடுவார்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...