Skip to main content

விராத் கோலி: ரன் இமையம்




சமீப காலத்தில் கோலியை அடிக்கடி சச்சினுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் சச்சினையும் மிஞ்சி சென்று விடுவார் என முன்னாள் இங்கிலாந்து வீரர் டொமினிக் கார்க் கூறினார். அப்போது கோலி அனைவரையும் கேட்டுக் கொண்டார் “என்னை சச்சினுடன் ஒப்பிடாதீர்கள். சங்கோஜமாய் இருக்கிறது. அவர் திறமையுடன் பிறந்தவர். நான் கடுமையாய் உழைத்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். என்னை என் அளவில் மட்டுமே மதிப்பிடுங்கள்”.

ஒருவேளை திறமையை பொறுத்த மட்டில் கோலி சச்சின் உயரத்தை எட்டாமல் இருக்கலாம். ஆனால் அவர் வருடாவருடம் குவிக்கும் மலைமலையான ரன்கள் அவரை ஒரு நவீன மேதை என கொண்டாட நம்மை தூண்டுகிறது. வேறு வழியில்லை! நடந்து முடிந்த ஐ.பி.எல்லில் மட்டுமே அவர் 900 ரன்களுக்கு மேல் அடித்தார். ஐ.பி.எல் வரலாற்றிலே யாரும் இவ்வளவு ரன்கள் குவித்ததில்லை. 
கோலி இந்த ஐ.பி.எல்லில் நான்கு சதங்கள் அடித்திருக்கிறார். பொதுவாக T20 ஆட்டங்களில் மட்டுமே அவர் இவ்வருடத்தில் 1544 ரன்கள் மொத்தம் எடுத்திருக்கிறார். ஏன் இது ஸ்பெஷல்?
கோலி ஒரு இயல்பான T20 பேட்ஸ்மேன் அல்ல. அவரால் கெய்ல், டிவில்லியர்ஸ் போல விருப்பப்படி சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் இல்லை. இதை அவரே ஒரு பேட்டியில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் அபாரமான ஸ்டிரைக் ரேட்டுடன் தொடர்ச்சியாய் T20யில் ரன்கள் குவிக்கிறார். மிக நெருக்கடியான கட்டங்களில் தன் அணியை காப்பாற்றி வெற்றிடைய வைக்கிறார். 2016 T20 உலகக்கோப்பையின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது இன்னிங்ஸ் அப்படியான ஒன்று.
 அந்த ஆட்டத்தின் முடிவில் ”கோலி எனும் மேதையிடம் நாங்கள் தோற்றி விட்டோம்” என ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒத்துக் கொண்டார். அந்த ஆட்டத்தில் அவர் பொறுமையாய் ஒற்றை இரட்டை ரன்கள் ஓடியே சமாளித்து வந்தார். அன்று அவர் சிற்ந்த ரிதமில் இல்லை. பந்து சரியாய் மட்டையில் படவில்லை. டைமிங் இயல்பாய் அமையவில்லை. ஆனால் கோலி இந்தியாவை இறுதி இலக்கு வரை கொண்டு போயே ஆக வேண்டும் என முனைப்பாய் இருந்தார். 15வது ஓவருக்கு பிறகு அவர் சட்டென கியர் மாற்றினார். எதிரணியின் வேகவீச்சாளர் பாக்னரின் நல்ல பந்துகளை கூட தன்னால் விருப்பபடி பவுண்டரிகளுக்கு விளாச முடியும் என காட்டினார். அந்த கடைசி ஓவர்களில் அவர் ஆடுவது கண்டு உலகமே திகைத்து நின்றது. பந்தை எங்கு வீசினாலும் எப்படியான களத்தடுப்பு அமைத்தாலும் அவரால் அதை சுலபத்தில் மீறி எல்லைகோட்டை நோக்கி பந்தை துரத்த முடிந்தது. இந்த தருணத்தில் தான் சச்சின் நமக்கு நினைவு வந்தார். பவுலர்கள் கோலியை விழுந்து வணங்காதது தான் அன்று குறை. மற்றபடி அவர்கள் முழுக்க அவரது மேதைமை முன்பு அடி பணிந்தனர்.
கோலியின் தொடர்ச்சியான ரன் குவிப்பின் ரகசியம் என்ன?
1)   பணிவு
சச்சினுக்கும் கோலிக்குமான பொதுவான குணம் இது. இருவரும் பவுலர்களை, அவர்கள் யாரென்றாலும், முதலில் மரியாதை கொடுப்பார்கள். ”சிறந்த ஆட்டநிலையில் இருக்கும் போது நமக்கு சுலபத்தில் அகங்காரம் வந்து விடும். அதை தவிர்ப்பதில் நான் மிக கவனம் காட்டுவேன்.” என கோலி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.
2)   திட்டம்
 அவர் ஒவ்வொரு T20 ஆட்டத்தை துவங்கும் போது கவனமாய் ரிஸ்கான ஷாட்களை தவிர்ப்பார். மட்டையை நேராய் காட்டி ஆடுவார். முதல் இருபது பந்துகளில் சிங்கிள்ஸ், இரட்டை ஓட்டங்கள் மட்டுமே எடுப்பார். பவுண்டரி அடிப்பதென்றாலும் தரையோடு தான் டிரைவ் செய்வார். சில நாட்கள் அவர் நல்ல ரிதமில் இல்லையென்றாலும் ஒற்றை ஓட்டங்கள் கொண்டே அரைசதமாவது அடித்து விடுவார். இதை தொடர்ந்து தான் அவர் கொஞ்சம் ரிஸ்கான lofted drives ஆடத் துவங்குவார். அதுவும் மிகுந்த துல்லியத்துடன் களத்தடுப்பை பிளக்கும் விதமாய் ஷாட்களை place செய்வார். ஒவ்வொரு ஆட்டத்திலும் கோலி தவறாது ஒரு பார்முலாவை பின்பற்றுகிறார். அவர் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. திட்டமும் உழைப்பும் புத்திசாலித்தனமும் அவரை இந்த உச்சத்துக்கு கொண்டு சேர்த்துள்ளன.
ஒரே பலவீனம்:

இந்த ஐ.பி.எல்லில் கோலி ஒரே முறை தான் off stumpக்கு வெளியே முறியடிக்கப்பட்டார். அது தில்லி அணிக்காய் ஆடும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் பந்தில். அப்பந்து off stumpஇல் விழுந்து உள்ளே வருவது போல் தோற்றம் காட்டி வெளியே ஸ்விங் ஆனது. அதை கால் பக்கமாய் திரும்பிய மட்டை கொண்டு தடுக்க முயன்ற போது கோலி பீட் ஆனார். Off stumpக்கு வெளியே இன்றும் கோலிக்கு ஒரு பலவீனம் உண்டு. அவர் மட்டையை நேராய் பிடித்து டிரைவ் செய்வதில்லை. இந்த சிக்கலை சரி செய்தால் அவர் விரைவில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆகி விடுவார்.

Comments

King Viswa said…
//டொமினிக் குக்//????
திருத்தி விட்டேன் :)

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...