Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சந்திரா சாமி ஏன் மாட்டவில்லை?




நேற்றுபுலிகளுக்கு அப்பால்நூலை தமிழாக்கிய ஆனந்த்ராஜிடம் போனில் முதன்முறையாய் பேசினேன். கல்லூரியில் தன் உறவுக்கார பையனுக்கு இடம் வாங்குவது பற்றி தகவல் கேட்க என்னிடம் தொடர்பில் வந்தவரிடம் இருபது நிமிடங்கள் அந்த புத்தகம் பற்றி உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தேன்.
 அந்த நூலில் புனைவுக்கான பல வலுவான சாத்தியங்கள் உள்ளன. இதை என்னிடம் கூறியவர் சங்கர ராம சுப்பியமணியன். நானும் அப்படியே உணர்ந்தேன். குறிப்பாய் குண்டுவெடிப்புக்கு முன்பு நளினிக்கு ஏற்படும் குழப்பங்கள், நளினி, முருகனின் தலைமறைவு வாழ்க்கை, பெங்களூரில் புலிகள் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு வாழை மரத்தின் நிழல் விழ அது ஒரு துர்சகுனம் என அவர்கள் நம்பத் தொடங்கும் இடம் என பல தருணங்கள்.

நேற்று நாங்கள் பேசின முக்கியமான விசயம் ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் சகுனி ஆட்டம். ஒரு கட்டத்தில் அமைதிப்பேச்சுவார்த்தையின் நீட்சியாக ஜனநாயக முறையில் ஈழத்தை கட்டமைக்க பிரபாகரன் தயாராகிறார். ஒரு முதலமைச்சரை பரிந்துரைக்கவும் முன்வருகிறார். ஆனால் ஒரு பக்கம் சிங்கள ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், இன்னொரு பக்கம் இந்திய அரசும் இந்திய வெளியுறவு அதிகாரிகளும் அதை விரும்பவில்லை. இந்தியா புலிகளின் எதிர் அமைப்புகளை ஊக்குவித்து தூண்டி விடுகிறது. பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. புலிகளுக்கும் அமைதிப்படையினருக்கும் மோதல் நடக்கிறது. இதை இந்திய மற்றும் சிங்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ரசிக்கிறார்கள். இதன் பிறகு சூதாட்டம் மேலும் மேலும் சிக்கலாகிறது. பிற உலக நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து இலங்கையில் ரத்தக்களரியை நிகழ்த்துகிறது.

உண்மையில் இந்த போரில் புலிகளின் பங்கு சிறியதே. புலிகள் வேண்டுமென்றே போர் வெறியில் ஈழத்தை அழிவுக்கு இட்டு சென்றார்கள் என்று ஒரு தவறான பார்வை இங்கு உள்ளது. புலிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை. சர்வதேச அரசியல் சூதாட்டத்தின் விளைவாக அவர்கள் பெரும் இயக்கமாய் வளர்ந்தார்கள், பின்னர் இதே அரசியல் அவர்களை பலிகொண்டது. எழுபதுகளில் இருந்தே, குறிப்பாய் இந்தியா-பாகிஸ்தான் போருக்கு பிறகு, இந்தியாவின் நோக்கம் இலங்கையில் அமைதி நிலவக் கூடாது என்பதாய் இருந்தது. சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா பக்கம் இலங்கை சாய்வது இந்தியாவை கடும் பதற்றத்தில் ஆழ்த்துகிறது. இலங்கைக்கு வேறு வகையில் உதவி வணிக ரீதியான நல்லுறவை ஏற்படுத்துவதை விடுத்து இந்தியா எதிர்மறை திட்டங்களை வகுக்கிறது. சூழ்ச்சி மூலம் சில பத்தாண்டுகளுக்கு இலங்கையை பலவீனமாக்கி பிற வல்லரசுகளிடம் இருந்து திசை திருப்பலாம் என எதிர்பார்க்கிறது.
ஆனால் இந்தியா முதலில் புலிகளுக்கு உதவி பின்னர் புலிகள் ஒரு வலுவான சக்தியாய் அமைந்து, ஈழம் மலரும் எனும் சாத்தியம் ஏற்படுகிறது. இப்போது இந்தியாவுக்கு இலங்கையை விட ஈழம் ஒரு முக்கிய சிக்கல் ஆகிறது. இந்திய அரசு, அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கூட்டு சேர்ந்து அதை முழுவெறியோடு தடுத்து அழிக்கிறார்கள். இதற்கு மத்தியில் ஈழத்தமிழர்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளும் வலிகளும் கனவுகளும் நிஜமாய் இருந்தன. ஆனால் கழுகின் கூர்நகங்களுக்கு இடையில் இருந்து கோழிக்குஞ்சு கனசு காண்பது போலத் தான் அது இருந்தது.

புலிகள் தப்பிப்பதற்கு எந்த வாய்ப்பும் உண்மையில் இருக்கவில்லை என இப்போது தோன்றுகிறது. ஒருவேளை இந்தியாவுக்கு எதிராய் அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகள் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் ஈழமும் சிங்கள தேசியமும் இணைந்து தழைத்திருக்கலாம். ஆனால் அந்த உறவை கலைப்பதில் இந்தியா முழு எத்தனிப்பையும் செய்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஈழத்தமிழரின் உண்மையான விரோதி சிங்கள அரசியல் தலைமை அல்ல, இந்திய வெளியுறவு அதிகாரிகளும் இந்திரா காந்தி குடும்பமும் தான் என இப்போது தோன்றுகிறது. இந்தியாவுக்கு அருகில் ஒரு குட்டித் தீவாய் அமைந்தது இலங்கையின் துரதிஷ்டம்.
”புலிகளுக்கு அப்பால்” நூல் பல தமிழ் தேசியவாதிகளை எரிச்சல்படுத்தியது. ஏனென்றால் குற்றத்தை செய்தது புலிகள் தாம் என அது உறுதிப்படுத்தியது. தமிழ் தேசியவாதிகளுக்கு இந்த வாதம் தன் இருப்பை காலி பண்ணி விடுமோ என அச்சம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். சீமான் போன்றோர் எப்படி ஊர் ஊராக சென்று இந்த நூலுக்கு எதிராய் பேசி, அதன் விற்பனையை நேரடியாய் தடை செய்தார்கள் என ஆனந்த்ராஜ் என்னிடம் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் இந்த புத்தகம் ராஜீவ் படுகொலைக்கு எப்படி புலிகள் மட்டுமே காரணமல்ல, அது பல வல்லரசுகள் பங்கேற்ற ஒரு சர்வதேச சதி, அதற்கு ராஜீவுக்கு எதிரான காங்கிரஸ்காரர்கள் உதவினார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. புலிகளுக்கு ராஜீவை கொல்லும் நோக்கம் இருந்தால் தேவை இருந்ததா எனும் கேள்வியை நூல் எழுப்புகிறது. ஒருவேளை சர்வதேச அமைப்பு ஒன்றின் கட்டளைக்கு ஏற்ப படுகொலை நிறைவேற்றப்பட்டதா எனவும் நூல் கேட்கிறது. இந்த கோணம் தமிழ் தேசியவாதிகளை மேலும் எரிச்சல்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
 ஆனால் நளினி, பேரறிவாளனை இந்நூலின் ஆதாரங்களும் வாதங்களும் காப்பாற்றக் கூடும். நம் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு அவர்களை காப்பாற்றுவது முக்கியமில்லையே. இப்பிரச்சனையில் சர்வதேச அரசியலின் பங்கை பின்னே தள்ளி விட்டு புலிகளை மட்டுமே முன்னிறுத்தவே புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசைப் போல அவர்களும் விரும்பினார்கள்.
நான் ஆனந்த்ராஜிடம் சந்திரா சாமி எப்படி தப்பினார் எனக் கேட்டேன். அவர் காங்கிரஸ் அதிகார மையத்தின் பிரதான புரோக்கர் எனத் தெரியும். ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்த பின்னரும் அவர் எப்படி தப்பிக்க முடியும்? ஆனந்தராஜ் இது குறித்து தான் இவ்விசாரணைக்கு தலைமை வகித்த ரகோத்தமனிடம் கேட்ட போது “சந்திரா சாமிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை” என்று அவர் கூறியதாய் சொன்னார். ஆனால், பேரறிவாளனுக்கு எதிராய் மட்டும் எப்படியான வலுவான ஆதாரம் உள்ளது?
தமிழர்கள் உண்மையிலே நல்லவர்கள், அமைதியானவர்கள். இவ்வளவு அநீதியை வேறு யாரும் பொறுக்க மாட்டார்கள்.

 உலகம் முழுக்க பல்வேறு வன்முறை சம்பவங்களை தூண்டி விடுவதும், மக்களின் குடியை கெடுப்பதும் வெளியுறவு துறை அமைச்சகங்களின் பணி. உலகம் முழுக்க இந்த அமைச்சகத்தை இழுத்து மூடுவதற்கும், வெளிநாட்டில் வன்முறையை தூண்டி சூழ்ச்சி செய்தவர்களை தூக்கிலிடவோ குறைந்த பட்சம் சிறையில் அடைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சம் தமிழர்களின் ஆவி இவர்களைத் தான் சபிக்கும். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...