Skip to main content

ஸ்வாதி கொலையும் தற்காப்பும்

Image result for swathi murder
ஸ்வாதி படுகொலையின் காரணங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவே எனக்கும் தெரியும்.
 கொன்றது வாடகைக் கொலையாளியாக இருக்கலாம் என பரவலாய் கூறப்படுகிறது. இன்று நண்பரும் இயக்குநருமான வினோத் மலைச்சாமியிடம் பேசும் போது அவர் தான் நேற்று நெல்லையில் இருக்கும் போது போலீஸ் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததை பார்க்க நேர்ந்ததாய் குறிப்பிட்டார். நெல்லை வாடகைக் கொலையாளிகளின் கூடாரம் என்றார் வினோத். ஆக போலீஸும் இந்த கோணத்தில் விசாரிப்பதாய் நாம் அனுமானிக்கலாம். மேலும் அந்த பெண் வாயிலும் கழுத்திலும் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டுள்ள முறை இந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. வினோத் என்னிடம் கூறிய மற்றொரு விசயம் வாடகைக்கொலையாளிகள் எப்போதும் விடிகாலையில் தான் கொலை செய்வார்கள் என்பது.
 நான் அவரிடம் கேட்டேன்: ”கொலையாளி ஸ்வாதிக்கு தெரிந்தவர்கள் இல்லை என்றால் ஏன் அவர்கள் நான்கு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?”

அது அப்பெண்ணின் கவனத்தை கலைத்து எதிர்பாராமல் தாக்குவதற்கான தந்திரம் என்றார் வினோத். இருக்கலாம். ஆனாலும் நான்கு நிமிடங்கள் அவளை உணர்ச்சிவசப்பட வைக்கும் படி பேச வேண்டும் என்றால் அவன் அவளுக்கு தெரியாதவனாய் இருந்தாலும் ”தெரிந்த” ஏதோ பிரச்சனையை தானே பேசியிருக்க வேண்டும்?
எனக்கு இரண்டு ஊகங்கள்:
1.   இப்பிரச்சனையில் ஸ்வாதி குடும்பத்தினர் மேலும் விபரங்கள் வெளிவருவதை விரும்ப மாட்டார்கள். அதனால் பொதுமக்களுக்கு போலீஸ் தரப்பிடம் இருந்து ஒரு கற்பனை கதை தான் செய்தி வடிவில் கிடைக்கும்.
2.   வாடகைக் கொலையாளி கோணம் உண்மையெனும் பட்சத்தில் கொலையில் ஒரு அதிகார மட்டத்துக்கு பணக்கார ஆள் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும்.
ஸ்வாதியின் செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருந்தாலும் அவளது போனில் இருந்து யாரிடம் எல்லாம் பேசியுள்ளாள், குறுஞ்செய்தி அனுப்பி உள்ளாள், அவளது மெயிலிலும் பேஸ்புக் மெஸஞ்செரிலும் யாரிடம் எல்லாம் உரையாடி உள்ளாள் போன்ற விபரங்களை போலீசால் எளிதில் திரட்ட முடியும். அதனால் கொலைக்கு காரணமானவரை போலீஸால் எளிதில் அடையாளம் காண இயலும். அதனால் இம்முறை கொலை ஒரு மனநலம் பிறழ்ந்தவனாலோ அல்லது மறுக்கப்பட்ட காதலனாலோ நடந்தது என போலீஸ் கூறுமானால் அவர்கள் ஒரு பெரிய புள்ளியை காப்பாற்ற முயல்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு இந்த கொலையின் பாணியை பார்க்கும் போது அப்பெண்ணுக்கு குறைந்த பட்ச தற்காப்பு முறைகளும் ஆயத்தங்களும் தெரிந்திருந்தால் தப்பவோ குறைந்தபட்சம் சற்று தூரம் ஓடி விலகவோ முடிந்திருக்கும் என படுகிறது. இவ்வளவு சுலபத்தில் ஒரு லகான் கோழியை கழுத்தை திருகி நீரில் அழுத்துவது போல் அவள் தன்னை கொல்ல அனுமதிக்காமல் இருக்கலாம்.
கொலையாளி ஒற்றை ஆள் என்பதால் அவள் என்ன செய்திருக்க முடியும்?
புரூஸ் லீ அமெரிக்காவில் ஒரு குங் பூ பள்ளி நடத்தி வந்தார். அவர் பெண்களின் தற்காப்புக்காய் சில எளிய அடவுகளை முன்வைத்தார். இதை அவரது Enter the Dragon படத்தில் வரும் லீயின் தங்கைக்கும் அவளை துரத்தி வரும் ஆண்களுக்குமான சண்டைக்காட்சியில் அவர் சித்தரிக்கவும் செய்தார். (இது குறித்து எனது ”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” நூலில் விளக்கமாய் பேசியிருக்கிறேன்)
ஒரு எளிய அடவு இது: ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்து தொந்தரவு கொடுக்கும் போது பெண் அவனது வலது தோளை கவனிக்க வேண்டும் அவன் கையை நீட்ட முனையும் போது, மிகச்சரியாய் அவன் தோள் அசையும் போது, அவன் வலது கால் பாதத்தை ஓங்கி மிதித்து விட வேண்டும். உடனே தன்னிச்சையாய் அவனது இடதுதோள் வலது காலை நோக்கி சரியும். அவன் வலியில் ஒரு நொடி தலைகுனிவான். அப்போது அவனது விதைப்பையில் ஓங்கி உதைக்க வேண்டும் என்கிறார் லீ. அருகில் இருந்து முட்டியை மடித்து ஒரு ஏத்து ஏத்தலாம். ஏனென்றால் மற்ற நேரத்தில் அங்கு உதைத்தால் ஆண்களால் பெண்ணின் காலை பிடிக்கவும் இழுத்து தள்ளவும் முடியும். ஆனால் அவன் நிலைகுலையும் சந்திர்ப்பத்தில் அவன் பார்வை தன் காலில் இருக்கும் என்பதாலும் அப்போது அவனது இரண்டு கால்களும் சற்று தவளைக்கால்கள் போல் வளைவதனாலும் விதைப்பை உள்ள இடம் சுலபத்தில் தாக்கப்படும் வகையில் இருக்கும்.
ஆனால் இப்படி உதைப்பதற்கு கொஞ்சம் பயிற்சி வேண்டும். பயிற்சி இல்லாதவர்கள் ஆணை அவன் தலை குனியும் போது பிடித்து தள்ளி விட்டு ஓடி விடலாம்.
இதை செய்யும் துணிவோ சாமர்த்தியமோ இல்லாதவர்கள் பெப்பர் ஸ்பிரே வாங்கி பையில் வைத்துக் கொள்ளலாம். 120 ரூபாய்க்கு இணையத்தில் கிடைக்கிறது. எதிராளியின் கண்ணில் ஸ்பிரே செய்தால் சற்று நேரத்துக்கு அவனால் கண்ணையே திறக்கவோ செயல்படவோ முடியாது. சுற்றி நிற்கும் நான்கைந்து பேர்களின் விழிகளில் சில நொடிகளில் சுழன்று ஸ்பிரே செய்யும் பெப்பர் ஸ்பிரேயும் உள்ளது. இது சற்று விலை அதிகம்.
நான் கராத்தே கற்க சென்ற போது என் ஆசான் ஒரு விசயத்தை வலியுறுத்துவார். யார் நம்மை நோக்கி வந்தாலும் அவர்கள் நம்மை தாக்கத் தான் வருகிறார்கள் என கற்பனை செய்து கொள்ள வேண்டும். மெல்ல மெல்ல இது ஒரு பழக்கமாகும். ஏனென்றால் உடல் தயாராகும் சில நொடிகள் முன்பே மூளை தயாராக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் கையும் முறுக்கும் முன்னர் அடி வாங்கி உங்கள் உதடு கிழிந்திருக்கும்.

இந்த கராத்தே, குங் பூ கூட தேவையில்லை. சின்ன புட்டி பெப்பர் ஸ்பிரே இருந்திருந்தால் ஸ்வாதி அங்கு தப்பியிருக்க முடியும். கைப்பையில் லிப்ஸ்டிக், கர்ச்சீப், சீப், கண்ணாடியுடன் பெப்பர் ஸ்பிரேயும் இனி ஒவ்வொரு பெண்ணும் வைத்திருக்க வேண்டும். 

Comments

Senthil Prabu said…
Kandipaga Abilash.. Im going to present one pepper spray to my wife after reading this article. Thanks!

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...