Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஸ்வாதி கொலையும் தற்காப்பும்

Image result for swathi murder
ஸ்வாதி படுகொலையின் காரணங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவே எனக்கும் தெரியும்.
 கொன்றது வாடகைக் கொலையாளியாக இருக்கலாம் என பரவலாய் கூறப்படுகிறது. இன்று நண்பரும் இயக்குநருமான வினோத் மலைச்சாமியிடம் பேசும் போது அவர் தான் நேற்று நெல்லையில் இருக்கும் போது போலீஸ் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததை பார்க்க நேர்ந்ததாய் குறிப்பிட்டார். நெல்லை வாடகைக் கொலையாளிகளின் கூடாரம் என்றார் வினோத். ஆக போலீஸும் இந்த கோணத்தில் விசாரிப்பதாய் நாம் அனுமானிக்கலாம். மேலும் அந்த பெண் வாயிலும் கழுத்திலும் பட்டாக்கத்தியால் வெட்டப்பட்டுள்ள முறை இந்த ஐயத்தை உறுதிப்படுத்துகிறது. வினோத் என்னிடம் கூறிய மற்றொரு விசயம் வாடகைக்கொலையாளிகள் எப்போதும் விடிகாலையில் தான் கொலை செய்வார்கள் என்பது.
 நான் அவரிடம் கேட்டேன்: ”கொலையாளி ஸ்வாதிக்கு தெரிந்தவர்கள் இல்லை என்றால் ஏன் அவர்கள் நான்கு நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?”

அது அப்பெண்ணின் கவனத்தை கலைத்து எதிர்பாராமல் தாக்குவதற்கான தந்திரம் என்றார் வினோத். இருக்கலாம். ஆனாலும் நான்கு நிமிடங்கள் அவளை உணர்ச்சிவசப்பட வைக்கும் படி பேச வேண்டும் என்றால் அவன் அவளுக்கு தெரியாதவனாய் இருந்தாலும் ”தெரிந்த” ஏதோ பிரச்சனையை தானே பேசியிருக்க வேண்டும்?
எனக்கு இரண்டு ஊகங்கள்:
1.   இப்பிரச்சனையில் ஸ்வாதி குடும்பத்தினர் மேலும் விபரங்கள் வெளிவருவதை விரும்ப மாட்டார்கள். அதனால் பொதுமக்களுக்கு போலீஸ் தரப்பிடம் இருந்து ஒரு கற்பனை கதை தான் செய்தி வடிவில் கிடைக்கும்.
2.   வாடகைக் கொலையாளி கோணம் உண்மையெனும் பட்சத்தில் கொலையில் ஒரு அதிகார மட்டத்துக்கு பணக்கார ஆள் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும்.
ஸ்வாதியின் செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருந்தாலும் அவளது போனில் இருந்து யாரிடம் எல்லாம் பேசியுள்ளாள், குறுஞ்செய்தி அனுப்பி உள்ளாள், அவளது மெயிலிலும் பேஸ்புக் மெஸஞ்செரிலும் யாரிடம் எல்லாம் உரையாடி உள்ளாள் போன்ற விபரங்களை போலீசால் எளிதில் திரட்ட முடியும். அதனால் கொலைக்கு காரணமானவரை போலீஸால் எளிதில் அடையாளம் காண இயலும். அதனால் இம்முறை கொலை ஒரு மனநலம் பிறழ்ந்தவனாலோ அல்லது மறுக்கப்பட்ட காதலனாலோ நடந்தது என போலீஸ் கூறுமானால் அவர்கள் ஒரு பெரிய புள்ளியை காப்பாற்ற முயல்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு இந்த கொலையின் பாணியை பார்க்கும் போது அப்பெண்ணுக்கு குறைந்த பட்ச தற்காப்பு முறைகளும் ஆயத்தங்களும் தெரிந்திருந்தால் தப்பவோ குறைந்தபட்சம் சற்று தூரம் ஓடி விலகவோ முடிந்திருக்கும் என படுகிறது. இவ்வளவு சுலபத்தில் ஒரு லகான் கோழியை கழுத்தை திருகி நீரில் அழுத்துவது போல் அவள் தன்னை கொல்ல அனுமதிக்காமல் இருக்கலாம்.
கொலையாளி ஒற்றை ஆள் என்பதால் அவள் என்ன செய்திருக்க முடியும்?
புரூஸ் லீ அமெரிக்காவில் ஒரு குங் பூ பள்ளி நடத்தி வந்தார். அவர் பெண்களின் தற்காப்புக்காய் சில எளிய அடவுகளை முன்வைத்தார். இதை அவரது Enter the Dragon படத்தில் வரும் லீயின் தங்கைக்கும் அவளை துரத்தி வரும் ஆண்களுக்குமான சண்டைக்காட்சியில் அவர் சித்தரிக்கவும் செய்தார். (இது குறித்து எனது ”புரூஸ் லீ: சண்டையிடாத சண்டைவீரன்” நூலில் விளக்கமாய் பேசியிருக்கிறேன்)
ஒரு எளிய அடவு இது: ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்து தொந்தரவு கொடுக்கும் போது பெண் அவனது வலது தோளை கவனிக்க வேண்டும் அவன் கையை நீட்ட முனையும் போது, மிகச்சரியாய் அவன் தோள் அசையும் போது, அவன் வலது கால் பாதத்தை ஓங்கி மிதித்து விட வேண்டும். உடனே தன்னிச்சையாய் அவனது இடதுதோள் வலது காலை நோக்கி சரியும். அவன் வலியில் ஒரு நொடி தலைகுனிவான். அப்போது அவனது விதைப்பையில் ஓங்கி உதைக்க வேண்டும் என்கிறார் லீ. அருகில் இருந்து முட்டியை மடித்து ஒரு ஏத்து ஏத்தலாம். ஏனென்றால் மற்ற நேரத்தில் அங்கு உதைத்தால் ஆண்களால் பெண்ணின் காலை பிடிக்கவும் இழுத்து தள்ளவும் முடியும். ஆனால் அவன் நிலைகுலையும் சந்திர்ப்பத்தில் அவன் பார்வை தன் காலில் இருக்கும் என்பதாலும் அப்போது அவனது இரண்டு கால்களும் சற்று தவளைக்கால்கள் போல் வளைவதனாலும் விதைப்பை உள்ள இடம் சுலபத்தில் தாக்கப்படும் வகையில் இருக்கும்.
ஆனால் இப்படி உதைப்பதற்கு கொஞ்சம் பயிற்சி வேண்டும். பயிற்சி இல்லாதவர்கள் ஆணை அவன் தலை குனியும் போது பிடித்து தள்ளி விட்டு ஓடி விடலாம்.
இதை செய்யும் துணிவோ சாமர்த்தியமோ இல்லாதவர்கள் பெப்பர் ஸ்பிரே வாங்கி பையில் வைத்துக் கொள்ளலாம். 120 ரூபாய்க்கு இணையத்தில் கிடைக்கிறது. எதிராளியின் கண்ணில் ஸ்பிரே செய்தால் சற்று நேரத்துக்கு அவனால் கண்ணையே திறக்கவோ செயல்படவோ முடியாது. சுற்றி நிற்கும் நான்கைந்து பேர்களின் விழிகளில் சில நொடிகளில் சுழன்று ஸ்பிரே செய்யும் பெப்பர் ஸ்பிரேயும் உள்ளது. இது சற்று விலை அதிகம்.
நான் கராத்தே கற்க சென்ற போது என் ஆசான் ஒரு விசயத்தை வலியுறுத்துவார். யார் நம்மை நோக்கி வந்தாலும் அவர்கள் நம்மை தாக்கத் தான் வருகிறார்கள் என கற்பனை செய்து கொள்ள வேண்டும். மெல்ல மெல்ல இது ஒரு பழக்கமாகும். ஏனென்றால் உடல் தயாராகும் சில நொடிகள் முன்பே மூளை தயாராக வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் கையும் முறுக்கும் முன்னர் அடி வாங்கி உங்கள் உதடு கிழிந்திருக்கும்.

இந்த கராத்தே, குங் பூ கூட தேவையில்லை. சின்ன புட்டி பெப்பர் ஸ்பிரே இருந்திருந்தால் ஸ்வாதி அங்கு தப்பியிருக்க முடியும். கைப்பையில் லிப்ஸ்டிக், கர்ச்சீப், சீப், கண்ணாடியுடன் பெப்பர் ஸ்பிரேயும் இனி ஒவ்வொரு பெண்ணும் வைத்திருக்க வேண்டும். 

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...