(சரஸ்வதி காயத்ரியின்
முகநூல் பதிவு)
நேற்று வாசக சாலையின் 17 வது சந்திப்பில் அபிலாஷ் சந்திரனின் " கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" என்னும் துப்பறியும் நாவலை பற்றி பேசக்கிடைத்த வாய்ப்பு இலக்கிய உலகில் எனக்கு இது முதல்முறை...
வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த Sridevi Ramya A மற்றும் வாசக சாலையின் Venkatraman Karthikeyan,என்னை உற்சாகப்படுத்தி பேசவைத்த Thendral Sivakumar அனைவருக்கும் நன்றி...
இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் அதில் நடைபெறுவதாக சொல்லப்படும் சம்பவங்களும்,அவற்றை நடத்துபவர்களும் என்னை பயமுறுத்தினர்...
child abuse செய்யப்பட்டு நடக்கிற கொலைகள் ....செய்தித்தாள்களிலும்,பல நூறு ஆயிரம் பெண்களின் வழியாகவும் கேள்விப்பட்டிருந்தாலும் கட்டாயமாக மறக்கப்பட நினைக்கிற சம்பவங்கள்....
" மனிதர்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கிற வக்கிரங்களை அடிதட்டு மனிதனிலிருந்து மேலதிகார வர்க்கம் வரை" எப்படி நடக்கிறதென்பதை தன் அநாயசமான மொழி நடை வழி எழுதியிருக்கிறார் அபிலாஷ்.
சான்றோர்கள் எல்லாம் இக்கதை எந்த வகைமை,எதன் தாக்கம் என்பது பற்றியெல்லாம் பேசினார்கள் ....
நேற்று கண்ணெதிரே நடந்த ஒரு கொலையைக் கூட பார்த்து விட்டு அவரவர்" கடமையை" ஆற்ற கண்டுகொள்ளாமல் இரயிலேறுகிற (இரயிலும் கிளம்புகிறதே!) சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம்...
எந்தவித ஈவு இரக்கமும் பார்க்காமல் ஒரு பூவைக்கூட ஷூ காலால் நசுக்கி உரு தெரியாமல் அழிக்க நினைக்கிற மனோபாவம் மிகுந்து கிடக்கிற மனிதர்கள் சூழத்தான் இருக்கிறேன் என்றாலும் எனக்கு
வன்முறைகளை மறந்து வாழ்வதற்கான எந்த அனுபவத்தையும் கொடுக்காமல் பயத்தை கிளறிவிடுகிற நாவலாக இருக்கிறதே என்ற என் ஆற்றாமையை சொன்னேன்...
எந்தவித ஈவு இரக்கமும் பார்க்காமல் ஒரு பூவைக்கூட ஷூ காலால் நசுக்கி உரு தெரியாமல் அழிக்க நினைக்கிற மனோபாவம் மிகுந்து கிடக்கிற மனிதர்கள் சூழத்தான் இருக்கிறேன் என்றாலும் எனக்கு
வன்முறைகளை மறந்து வாழ்வதற்கான எந்த அனுபவத்தையும் கொடுக்காமல் பயத்தை கிளறிவிடுகிற நாவலாக இருக்கிறதே என்ற என் ஆற்றாமையை சொன்னேன்...
என் தோழிகளுக்கு இந்நாவலை படியுங்கள் என பரிந்துரைக்க முடியாதென்பதையும் சொன்னேன்....இப்போது வியந்து பார்க்கிறேன்..
." யுவ புரஸ்கார் " விருது பெற்ற திரு.அபிலாஷ் அவர்கள் எத்தகைய மனம் கொண்டிருந்தால் அவருடைய நாவலுக்கு எதிர்வினையாற்றிய என்னை " நல்லா பேசினீங்க" என சொல்லவும் ,எழுதவும் முடியும்....!
." யுவ புரஸ்கார் " விருது பெற்ற திரு.அபிலாஷ் அவர்கள் எத்தகைய மனம் கொண்டிருந்தால் அவருடைய நாவலுக்கு எதிர்வினையாற்றிய என்னை " நல்லா பேசினீங்க" என சொல்லவும் ,எழுதவும் முடியும்....!
நன்றி! அபிலாஷ்....உங்களுக்கு எனதன்பு வாழ்த்துகள்...
நீங்கள் எழுத்துலகில் அடையப் போகும் வெற்றிகளுக்கு முன்னதான என் ஆசிகள்...
நீங்கள் எழுத்துலகில் அடையப் போகும் வெற்றிகளுக்கு முன்னதான என் ஆசிகள்...
கிரிக்கெட் பற்றிய உங்களின் தொடர் கட்டுரைகள் மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்டுள்ளதால் நான் என்றும் ரசிப்பவை..
இலக்கியகர்த்தா கிரிக்கெட்டை எழுதுதல் இனிமையான ஆச்சரியம்...!
உங்கள் நாவல் தந்த அதிர்ச்சியை உங்களின் பேச்சு போக்கி விட்டது...நன்றி!
