Skip to main content

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: சரஸ்வதி காயத்ரி


(சரஸ்வதி காயத்ரியின் முகநூல் பதிவு)
நேற்று வாசக சாலையின் 17 வது சந்திப்பில் அபிலாஷ் சந்திரனின் " கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்" என்னும் துப்பறியும் நாவலை பற்றி பேசக்கிடைத்த வாய்ப்பு இலக்கிய உலகில் எனக்கு இது முதல்முறை...
வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த Sridevi Ramya A மற்றும் வாசக சாலையின் Venkatraman Karthikeyan,என்னை உற்சாகப்படுத்தி பேசவைத்த Thendral Sivakumar அனைவருக்கும் நன்றி...
இந்தக் கதையை வாசித்து முடித்தவுடன் அதில் நடைபெறுவதாக சொல்லப்படும் சம்பவங்களும்,அவற்றை நடத்துபவர்களும் என்னை பயமுறுத்தினர்...

child abuse செய்யப்பட்டு நடக்கிற கொலைகள் ....செய்தித்தாள்களிலும்,பல நூறு ஆயிரம் பெண்களின் வழியாகவும் கேள்விப்பட்டிருந்தாலும் கட்டாயமாக மறக்கப்பட நினைக்கிற சம்பவங்கள்....
"
மனிதர்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கிற வக்கிரங்களை அடிதட்டு மனிதனிலிருந்து மேலதிகார வர்க்கம் வரை" எப்படி நடக்கிறதென்பதை தன் அநாயசமான மொழி நடை வழி எழுதியிருக்கிறார் அபிலாஷ்.
சான்றோர்கள் எல்லாம் இக்கதை எந்த வகைமை,எதன் தாக்கம் என்பது பற்றியெல்லாம் பேசினார்கள் ....
நேற்று கண்ணெதிரே நடந்த ஒரு கொலையைக் கூட பார்த்து விட்டு அவரவர்" கடமையை" ஆற்ற கண்டுகொள்ளாமல் இரயிலேறுகிற (இரயிலும் கிளம்புகிறதே!) சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம்...
எந்தவித ஈவு இரக்கமும் பார்க்காமல் ஒரு பூவைக்கூட ஷூ காலால் நசுக்கி உரு தெரியாமல் அழிக்க நினைக்கிற மனோபாவம் மிகுந்து கிடக்கிற மனிதர்கள் சூழத்தான் இருக்கிறேன் என்றாலும் எனக்கு
வன்முறைகளை மறந்து வாழ்வதற்கான எந்த அனுபவத்தையும் கொடுக்காமல் பயத்தை கிளறிவிடுகிற நாவலாக இருக்கிறதே என்ற என் ஆற்றாமையை சொன்னேன்...
என் தோழிகளுக்கு இந்நாவலை படியுங்கள் என பரிந்துரைக்க முடியாதென்பதையும் சொன்னேன்....இப்போது வியந்து பார்க்கிறேன்..
."
யுவ புரஸ்கார் " விருது பெற்ற திரு.அபிலாஷ் அவர்கள் எத்தகைய மனம் கொண்டிருந்தால் அவருடைய நாவலுக்கு எதிர்வினையாற்றிய என்னை " நல்லா பேசினீங்க" என சொல்லவும் ,எழுதவும் முடியும்....!
நன்றி! அபிலாஷ்....உங்களுக்கு எனதன்பு வாழ்த்துகள்...
நீங்கள் எழுத்துலகில் அடையப் போகும் வெற்றிகளுக்கு முன்னதான என் ஆசிகள்...
கிரிக்கெட் பற்றிய உங்களின் தொடர் கட்டுரைகள் மிகவும் ஆழ்ந்து எழுதப்பட்டுள்ளதால் நான் என்றும் ரசிப்பவை..
இலக்கியகர்த்தா கிரிக்கெட்டை எழுதுதல் இனிமையான ஆச்சரியம்...!
உங்கள் நாவல் தந்த அதிர்ச்சியை உங்களின் பேச்சு போக்கி விட்டது...நன்றி!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...