முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேய்ச்சல் வெளி - 1

(இது தினமலரில் நான் எழுதி வரும் பத்தி. முக்கியமான இணையதளங்கள், பிளாகுகள், பேஸ்புக் பக்கங்களை அறிமுகம் செய்கிறேன்.)

சொல்வனம் (www.solvanam.com)

ஒரு பெட்டிக்கடையில் என்னென்ன கிடைக்கும்: வாழைப்பழம், பிஸ்கட், கடலைமிட்டாய், புளிப்பு மிட்டாய், சிகரெட், கொசுவத்தி, பத்திரிகை…. ஆனால் எங்கள் ஊரில் பெட்டிக்கடைகளில் பழரசமும் கிடைக்கும். இன்னும் சொல்வதானால் அவை பீடா கடையாகவும் இயங்கும். சென்னையில் ஒரு டாஸ்மாக் அருகே உள்ள ஜூஸ் கடையில் மாலையில் அதிகம் விற்பவை மாங்காய் துண்டுகளும், பிளாஸ்டிக் கோப்பைகளும். இப்படி தொடர்பற்ற பல தேவைகளை திருப்தி செய்யும் பெட்டிக்கடை தான் இலக்கிய இணைய பத்திரிகைகள்.


”சொல்வனம்” கடந்த சில வருடங்களாய் தமிழில் இயங்கி வரும் ஒரு தரமான தீவிர இணைய இதழ். இங்கு வெற்றிலை பாக்கும் பர்கரும் ஒரே சமயம் கிடைக்கும்.
சொல்வனத்தில் இந்திய பாரம்பரிய இசை, பற்றி கட்டுரைகள் வரும். அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதன், தி.ஜானகிராமன் ஆகிய ஜம்பவான்களுக்கு சிறப்பிதழ்கள் வரும். (ஆனால் சமகால இலக்கியப் போக்குகளின் சுவடே இருக்காது) இன்னொரு பக்கம் மேற்கத்திய அரசியல், அறிவியல், தத்துவம் பற்றி முக்கியமான மொழியாக்க கட்டுரைகளும் வரும். அதாவது சில பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு மேற்குக்கு சென்றவர்களிடம் தாம் துறந்த வாழ்க்கை மீதான நினைவேக்கமும் தற்போது வாழும் தேசத்தின் சிக்கல்கள், வரலாறு, கலை சார்ந்த ஆர்வங்களும் கலந்த ஒரு ரசனை இருக்கும். “சொல்வனம்” அதைத் தான் பிரதிபலிக்கிறது.

தற்போதைய இதழில் ஸ்பினோசா பற்றி ஸ்டீவன் நாட்லரின் ஒரு முக்கியமான மொழியாக்க கட்டுரை வந்துள்ளது. என்னது ஸ்பி-னோ-சாவா என்கிறீர்களா? அவர் ஒரு மிக முக்கியமான தத்துவஞானி. எனக்குத் தெரிந்து தமிழ் எழுத்தாளர்களுக்கோ வாசகர்களுக்கோ இதுவரை அவர் மீது அக்கறையில்லை. ஆனால் இது போன்ற ஒரு பத்திரிகையில் தான் அவர் குறித்து முதன்முதலாய் ஒரு நல்ல அறிமுகக்கட்டுரை வர முடியும். இதில் ஸ்பினோசாவின் மாறுபட்ட பார்வைகளை நாம் அறியலாம்: விவிலியம் தேவவாக்கு அல்ல, அது மனிதர்களால் தொகுக்கப்பட்ட இலக்கிய நூல்; வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு கடவுளிடம் தீர்வு தேடுவது மனிதர்களுக்கு நிம்மதிக்கு பதில் பதற்றமும் துக்கமுமே தரும் என்றெல்லாம் ஸ்பினோசா ஏன் கூறினார் என்பதற்கு எளிமையான விளக்கங்கள் இக்கட்டுரையில் உள்ளன. படித்துப் பாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.