முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காஷ்மீர் பிரச்சனை - எரியூட்டப்படும் குரங்கின் வால்

மத்திய அரசின் காஷ்மீர் கொள்கை தெளிவானது. ஒரு பக்கம் அவர்கள் காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருப்பதை விரும்புகிறார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் முனையில் நிற்கிறது எனும் பிம்பத்தை, பதற்றத்தை உருவாக்கி மதவாதம் + தேசியவாதத்தை மக்களிடையே தூண்டி விட வேண்டும். அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துவதன் மூலம் காஷ்மீரிய மக்களின் உணர்ச்சிகளை தூண்டுவது, போராட்டக்காரர்களை தொடர்ந்து தாக்குவதன் மூலம் போராளிகளுக்கு மறைமுக ஊக்கம் கொடுப்பதை காங்கிரஸ் அரசும் செய்தது, இப்போது அதையே பா.ஜ.கவும் செய்கிறது.


 ஆனால் ஒரே வித்தியாசம் பா.ஜ.க காஷ்மீர் பிரச்சனையை மதப்போராக மாற்றி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் மூலம் தேசம் சந்திக்கும் வளர்ச்சியின்மை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றில் இருந்து கவனத்தை திருப்ப முனைகிறது.
எல்லா மதவாத கலவரங்களிலும் செய்வது போல் வன்முறையை ஒரு பக்கம் தூண்டி விட்டு விட்டு இன்னொரு புறம் பா.ஜ.கவின் தலைமை தொட்டிலையும் ஆட்டுகிறது. சுதந்திர தின உரையின் போது மோடி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடனான ஒரு எல்லை தகராறாக, தீவிரவாத அத்துமீறலின் விளைவாக மட்டுமே சித்தரித்து, பாகிஸ்தானை எச்சரித்து ஒரு ராணுவ தளபதி போன்றே தன்னை காட்டிக் கொண்டார். அதே போல காஷ்மீரிய போராட்டக்காரர்களை கடுமையாய் ஒடுக்கவில்லை என அவர் காஷ்மீர் முதலமைச்சர் மீது ஏமாற்றம் கொண்டிருப்பதாகவும், இது சம்மந்தமாய் – அதாவது பிரச்சனையை வன்மையாகவா அமைதி பேச்சுவார்த்தை மூலமா தீர்ப்பது என்பதில் – இருவருக்கும் கருத்து மாறுபாடு உள்ளது என்று சொல்லப்படுகிறது.  ஆனால் தற்போது மோடி காந்தியின் ரூபம் எடுத்து “காஷ்மீரிய மக்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்” என்கிறார்.
காஷ்மீரில் எப்படி உடனடியாய் அமைதியாய் மீட்பது என மோடி அறிவார். ராணுவத்தை குவிப்பது அமைதியை அன்றி அமைதியின்மையையே அதிகம் தூண்டும் எனவும் அறிவார். அவருக்கு அதுவே வேண்டும். தன் அரசின் செயல்பாடு மீது அல்லாது மீடியாவின் கவனம் காஷ்மீர் மீது இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.

ஒரு நேர்மையான அரசு காஷ்மீரில் ராணுவ இருப்பை குறைத்து, மக்கள், போராளிகள், பாகிஸ்தான் ஆகிய முத்தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தும். ஆனால் அப்படியான ஒரு அரசு இன்னும் இங்கு அமையவில்லை. எல்லா அரசுகளும் குரங்கின் வால் எரிவதையே விரும்புகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.