முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏக்கத்தின் விஷ்வரூபங்கள்

சமீபத்தில் மனுஷ்யபுத்திரனிடம் எழுத்தாளர்களின் இலக்கிய சண்டைகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார் “எழுத்தாளர்கள் மிகவும் உணர்வுவயப்பட்டவர்கள். சட்டென சீண்டப்படுவார்கள். லேசாய் உதாசீனித்தாலே தாம் அவமதிக்கப்பட்டதாய் கொந்தளிப்பார்கள். அவர்களின் தற்காலிக கோபதாபங்களை பொருட்படுத்தி அதைக் கொண்டு அவர்களை மதிப்பிடக் கூடாது.” முழுக்க முழுக்க உண்மை இது.


தமிழில் எழுத்தாளர்கள் அடிக்கடி கண் தெரியாத உதாசீனத்தால் சீண்டப்பட்டு உறையில் இருந்து கத்தியை உருவி புரவியில் ஏறி சீறிக் கிளம்புகிறார்கள். குழுவாய் சேர்ந்து மோதுகிறார்கள். அதே வேகத்தில் ஒன்றாய் சேர்ந்து ஆறத்தழுவவும் செய்கிறார்கள். தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த மோதல்களும் கூடல்களும் வேடிக்கையாய் அபத்தமாய் இருக்கும். ஆனால் இந்த அகக்கொந்தளிப்பு, ஈகோவின் தத்தளிப்பு, தன்னை நிரூபிக்கும் ஆவேசத்தில் இருந்து தான் சிறந்த எழுத்தும் உருவாகிறது. பெரும் இலக்கிய மோதல்களுக்கு, கடும் வெறுப்பு, கசப்புக்கு பின்னால் பல சமயங்களில் “என்னை நீ கவனிக்கவில்லை” எனும் மிக எளிய ஏக்கம் தான் இருக்கிறது.

ஆட்டோ சங்கர் போன்று கொலைத்திட்டத்துடன் வரும் எழுத்தாளனையும் அவனது படைப்பு குறித்து அக்கறையாய் சில சொற்கள் பேசினால் மறுநொடியில் வண்ணதாசன் போல் நெகிழ்வானராய் மாற்றி விடலாம்.

பின்குறிப்பு: நான் படைப்பின் மீதான அக்கறை என உண்மையான வாசக கவனத்தை தான் குறிப்பிட்டேன். முகஸ்துதியை அல்ல. முகஸ்துதியை எழுத்தாளன் உடனே மோப்பம் பிடித்து அறிந்து கொள்வான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...