முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவுக்குள் கனவாக காதல்

 Image result for கவிஞர் தாமரை
 “இது ஒரு கனவு நிலை…
கனவுக்குள் கனவாய் எனை நானே கண்டேனே”
தாமரையின் இந்த வரிகள் கேட்கும்போது நகுலன் ஒருவேளை ரொமாண்டிக்காக கவிதை எழுதியிருந்தால் இப்படித் தான் எழுதியிருப்பார் என தோன்றியது.

தாமரையின் திரைப்பாடல்களில் இது போல் அதி அற்புதமான உருவகங்கள் அடிக்கடி வரும். காதல் என்பது கனவு நிலை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் விஷயம் அது மட்டுமல்ல. இந்த கனவு எங்கிருந்து வருகிறது?
ஒரு சிலந்தி வலையை பின்னி பூச்சிக்காக காத்திருப்பது போல யாரோ பின்னி வைத்த கனவு தான் காதல். இன்னொருவர் பின்னிய கனவில் நாம் போய் விழுகிறோம். முழுக்க வேறொருவராக மாறுகிறோம். மற்றொருவரின் கற்பனையில் மொட்டு விட்டு மலர்கிறோம். இன்னொருவருக்கு நம் மீதுள்ள பிரியம், உணர்ச்சிகள், நம்பிக்கை, ஆதர்சங்கள், ஈர்ப்பு, கற்பிதங்களில் திளைக்கிறோம். அதில் ஒரு அலாதியான சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் நீங்களாக இல்லாமல் இருக்க முடிகிறது. இது தான் மற்றொருவர் கனவில் வாழும் சுகம். அதன் மயக்கம்.

நாம் இதோடு நிறுத்துவதில்லை. நம்முடைய கனவில் எதிர்தரப்பையும் மாட்ட வைக்கிறோம். அவர் நம் கனவில் சுகிக்கிறார். இப்படி ஒரு கனவின் மேல் இன்னொரு கனவை கட்டி எழுப்புகிறோம். அவன் கனவில் அவள் தன்னையும் அவள் கனவில் அவன் தன்னையும் பார்க்க முடிகிறது. தனியே இருந்து யோசிக்கையில் கனவுக்குள் கனவாக நம்மையே கண்டு சிலாகிக்கிறோம். இதுவே “கனவுக்குள் கனவாய் எனை நானே கண்டேனே!”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.