முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொகுசு அரசியலின் காலம்


அரசியல் இன்று கார்ப்பரேட்மயமாகி விட்ட பின் அரசியல் தலைவர்கள் ரோட்டில் இறங்கி போராட விரும்புவதில்லை. அரசியல் இன்று வெகு சொகுசாகி விட்டது. ஒரு பெரும் அரசியல் தலைவர் மக்கள் பிரச்சனைக்காக பத்து நாள் உண்ணாவிரதம் இருந்ததாய், போராடி சிறை சென்றதாய் கடைசியாய் எப்போது கேள்விபட்டீர்கள்? ஒரு அரசியல் தலைவர் சாலையில் அமர்ந்ததாய் கடைசியாய் எப்போது கேள்விப்பட்டீர்கள்? ஆமாம் கேஜ்ரிவால் செய்தார். அதனால் தான் அவர் உடனடியாய் கவனிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ரட்சகனாகவே பார்க்கப்பட்டார். இன்றும் போராட்டங்களை சிறு கட்சிகள் மட்டுமே நடத்துகின்றன. பெரும் கட்சிகள் அறிக்கை விடுவது, பணம் கொடுத்து ஆட்களை திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பேரணி போவது என முதலாளித்துவ வடிவம் எடுத்து விட்டன.

போன முறை தமிழகம் முழுக்க சிறுக சிறுக டாஸ்மாக்குக்கு எதிராய் போராட்டங்கள் வெடித்து பெரும் நெருப்பாய் பற்றிக் கொண்டது. ஆனால் இது போன்ற போராட்டங்களை ஆளுங்கட்சியின் ஊழல், முறைகேடுகளை முன்வைத்து ஏன் முக்கிய எதிர்க்கட்சி செய்வதில்லை என ஒரு அரசியல்வாதி நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலே நான் எழுதியது தான். இன்று வட்டச்செயலாளர்கள் கார், வீடு, தோட்டம் என வசதியாகி விட்டார்கள். நிறைய பேரால் நீண்ட தூரம் நடக்க கூட முடிவதில்லை (ஸ்டாலின் நிச்சயம் விதிவிலக்கு). கேட்டால் நீரிழிவு, ரத்த அழுத்த தொந்தரவு என்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்கால் வெல்லலாம் எனும் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆயிரங்கோடி பணம் புழங்கும் வியாபார விளையாட்டில் தீர்மானிக்கப்படுவதாய், அதிர்ஷ்டம், மக்களின் அர்த்தமற்ற கோபதாபங்களின் விளைவானதாய் தேர்தல் முடிவுகளை பார்க்கிறார்கள்.
நாளைய வேலை நிறுத்த போராட்டத்தை நான் இந்த பின்னணியில் தான் பார்க்கிறேன். இதனால் கர்நாடகாவுக்கு என்ன பாதகம்? ஒன்றும் இல்லை. நெருக்கடி? நாளை எப்படியும் சகஜ நிலை பாதிக்கப்படாது என்பதால் ஒரு அர்த்தமற்ற சடங்காக மட்டுமே இந்த எதிர்ப்பு இருக்கும். பெயருக்கு தமிழகம் தன் எதிர்ப்பை பதிவை செய்ததாக இருக்கும். ஆனால் இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மட்டுமே நஷ்டப்பட, சிரமப்பட போகிறார்கள்.
உண்மையிலேயே கர்நாடகாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றால் நமது அரசியல் தலைவர்கள் கர்நாடகாவுக்கு சென்று தர்ணா செய்து கைதானால் போதும். அதை மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும். எனக்கு என்னவோ கேஜ்ரிவால் மாதிரி ஒரு தலைவர் அப்படி செய்திருப்பார் என படுகிறது. ஸ்டாலினை கர்நாடக அரசு கைது செய்தால் அவரது பிம்பம் தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும் எப்படி உயரும் என யோசித்து பாருங்கள்.

இதனால் தண்ணீர் பிரச்சனை சரியாகும் என நான் சொல்லவில்லை. ஆனால் எதிர்ப்பை தெரிவிப்பது என்றால் அதற்கு தாக்கம் இருக்க வேண்டும். மோடி ஒரு யோகா தினத்தை பயன்படுத்திக் கொண்ட அளவு கூட நம் அரசியல்வாதிகளால் ஒரு மாநிலத்தின் கொதிக்கும் பிரச்சனையை பெரிது படுத்த முடியவில்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.