முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொகுசு அரசியலின் காலம்


அரசியல் இன்று கார்ப்பரேட்மயமாகி விட்ட பின் அரசியல் தலைவர்கள் ரோட்டில் இறங்கி போராட விரும்புவதில்லை. அரசியல் இன்று வெகு சொகுசாகி விட்டது. ஒரு பெரும் அரசியல் தலைவர் மக்கள் பிரச்சனைக்காக பத்து நாள் உண்ணாவிரதம் இருந்ததாய், போராடி சிறை சென்றதாய் கடைசியாய் எப்போது கேள்விபட்டீர்கள்? ஒரு அரசியல் தலைவர் சாலையில் அமர்ந்ததாய் கடைசியாய் எப்போது கேள்விப்பட்டீர்கள்? ஆமாம் கேஜ்ரிவால் செய்தார். அதனால் தான் அவர் உடனடியாய் கவனிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு ரட்சகனாகவே பார்க்கப்பட்டார். இன்றும் போராட்டங்களை சிறு கட்சிகள் மட்டுமே நடத்துகின்றன. பெரும் கட்சிகள் அறிக்கை விடுவது, பணம் கொடுத்து ஆட்களை திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பேரணி போவது என முதலாளித்துவ வடிவம் எடுத்து விட்டன.

போன முறை தமிழகம் முழுக்க சிறுக சிறுக டாஸ்மாக்குக்கு எதிராய் போராட்டங்கள் வெடித்து பெரும் நெருப்பாய் பற்றிக் கொண்டது. ஆனால் இது போன்ற போராட்டங்களை ஆளுங்கட்சியின் ஊழல், முறைகேடுகளை முன்வைத்து ஏன் முக்கிய எதிர்க்கட்சி செய்வதில்லை என ஒரு அரசியல்வாதி நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் மேலே நான் எழுதியது தான். இன்று வட்டச்செயலாளர்கள் கார், வீடு, தோட்டம் என வசதியாகி விட்டார்கள். நிறைய பேரால் நீண்ட தூரம் நடக்க கூட முடிவதில்லை (ஸ்டாலின் நிச்சயம் விதிவிலக்கு). கேட்டால் நீரிழிவு, ரத்த அழுத்த தொந்தரவு என்கிறார்கள். இன்றைய அரசியல்வாதிகள் மக்கள் செல்வாக்கால் வெல்லலாம் எனும் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆயிரங்கோடி பணம் புழங்கும் வியாபார விளையாட்டில் தீர்மானிக்கப்படுவதாய், அதிர்ஷ்டம், மக்களின் அர்த்தமற்ற கோபதாபங்களின் விளைவானதாய் தேர்தல் முடிவுகளை பார்க்கிறார்கள்.
நாளைய வேலை நிறுத்த போராட்டத்தை நான் இந்த பின்னணியில் தான் பார்க்கிறேன். இதனால் கர்நாடகாவுக்கு என்ன பாதகம்? ஒன்றும் இல்லை. நெருக்கடி? நாளை எப்படியும் சகஜ நிலை பாதிக்கப்படாது என்பதால் ஒரு அர்த்தமற்ற சடங்காக மட்டுமே இந்த எதிர்ப்பு இருக்கும். பெயருக்கு தமிழகம் தன் எதிர்ப்பை பதிவை செய்ததாக இருக்கும். ஆனால் இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மட்டுமே நஷ்டப்பட, சிரமப்பட போகிறார்கள்.
உண்மையிலேயே கர்நாடகாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றால் நமது அரசியல் தலைவர்கள் கர்நாடகாவுக்கு சென்று தர்ணா செய்து கைதானால் போதும். அதை மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும். எனக்கு என்னவோ கேஜ்ரிவால் மாதிரி ஒரு தலைவர் அப்படி செய்திருப்பார் என படுகிறது. ஸ்டாலினை கர்நாடக அரசு கைது செய்தால் அவரது பிம்பம் தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும் எப்படி உயரும் என யோசித்து பாருங்கள்.

இதனால் தண்ணீர் பிரச்சனை சரியாகும் என நான் சொல்லவில்லை. ஆனால் எதிர்ப்பை தெரிவிப்பது என்றால் அதற்கு தாக்கம் இருக்க வேண்டும். மோடி ஒரு யோகா தினத்தை பயன்படுத்திக் கொண்ட அளவு கூட நம் அரசியல்வாதிகளால் ஒரு மாநிலத்தின் கொதிக்கும் பிரச்சனையை பெரிது படுத்த முடியவில்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...