முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூத்திரத்தை அடக்கும் மாணவர்கள்


இக்கட்டுரையில் இமையத்தின் கேள்வி முக்கியமானது. ஏன் மாணவர்கள் நாள் முழுக்க கழிப்பறையை பயன்படுத்தாமல் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். ஏன் ஒரு பள்ளி நிர்வாகம் கழிவை வெளியேற்றுவதை முக்கியம் என நினைப்பதில்லை? ஏன் போதுமான கட்டமைப்பு வசதிகள், நேரம் இதற்கு வழங்கப்படுவதில்லை?
 நான் பள்ளி மாணவனாய் இருக்கும் போது வகுப்பில் இருந்து கழிப்பறை தொலைவில் இருக்கும். போலியோ காரணமாய் என்னால் வேகமாய் நடக்க இயலாது. நான் கழிப்பறையை நெருங்கும் போது மணி அடித்து விடும். இடைவேளை முடிந்து விடும். இதனால் நான் நாள் முழுக்க மூத்திரத்தை அடக்க கற்றுக் கொண்டேன். இதை சமாளிக்க அதிகமாய் தண்ணீரும் அருந்த மாட்டேன்.


இது ஒரு பண்பாட்டு பிரச்சனையும் தான். முன்பு உயிரோசையில் ஒரு கட்டுரை படித்த ஞாபகம் சிங்கப்பூரில் கழிப்பறைக்கு தரப்படுகிற முக்கியத்துவம் பற்றியது. ஆனால் இந்தியர்களுக்கு கழிவுகள் மீது ஒரு கீழ்த்தரமான எண்ணம் உள்ளது. கழிவை நாம் கீழ்மையுடன், கீழ் சாதியுடன், ஒதுக்கப்பட வேண்டியவற்றுடன் இணைத்துக் கொண்டே போகிறோம். மாணவர்களின் மூத்திரத்தை அடக்க சொல்லும் ஆசிரியர்களும் இந்த பண்பாட்டில் இருந்து தான் வருகிறார்கள். அழுக்கின் மீது சந்தனத்தை பூசி மறைக்கும் ஒருவித பண்பாடு நமது.

நமக்கு அழுக்கு, சீழ், கழிவு முக்கியம். இவற்றை கேவலமானவையாய் காட்டி நம்மை இவற்றில் இருந்து விலக்கி வைப்ப்போம். பிறகு விலகி இருப்பதாலே நாம் மேலானவர் என காட்டிக் கொள்வோம். நம் சாதியத்தின் அடிப்படையே இந்த உளவியல் தான். இதனால் தான் பொதுத்தளத்தில் மல ஜலம் பற்றி பேச நமக்கு சிக்கலாக உள்ளது. அதை ஒரு முக்கிய பிரச்சனையாய் விவாதிக்க மனத்தடை உள்ளது.
 ஒரு பள்ளியிலோ நிறுவனத்திலோ ஒரு பிரம்மாண்ட பூங்காவனம் அமைத்து அதை பராமரிப்பார்கள். ஆனால் கழிப்பிடத்தை குறுகலாய், பராமரிப்பற்றதாய், தண்ணீர் கூட இல்லாமல் வைத்திருப்பார்கள். இது அடிப்படை இந்திய மனப்பான்மை.
நான் கல்லூரி ஆசிரியனாய் இருந்த போது வகுப்பில் மாணவர்கள் அடிக்கடி வெளியே செல்ல அனுமதி கேட்பார்கள். நான் மறுத்ததே இல்லை. ஆனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் இதை செய்ய முடியாது. பள்ளியில் கல்வி, ஆரோக்கியத்தை விட கட்டுப்பாடு மிக முக்கியம். அங்கு மாணவர்கள் எப்போதும் சிலை போல் வகுப்புக்குள் இருக்க வேண்டும், வளாகத்தில் திரியக் கூடாது என நிர்வாகத்தில் இருந்து ஆசிரியர்களுக்கு அழுத்தம் தரப்படும். கழிப்பறைக்கு அனுப்பினால் மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பாமல் ஓடி விடுவார்கள் என பயம் வேறு.

 மாணவர்களை நம்பி அவர்களை அனுசரணையாய் நடத்தும் பள்ளிகள் நமக்குத் தேவை. பள்ளிக் கல்வியில் நமக்கு நிறைய சீர்திருத்தங்கள் தேவை. முதலில் பள்ளிக்கூடங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். அங்கு சிறைக்கூடங்களின் சூழல் இருக்க கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...